| தம்முத லாறுந் தகுமன் னவர்க்கே ல வ ற ன வணிகர்க் காம்ழளச் சூத்திரர்க்கே யிம்முறை நஞ்செழுத் தியலினு மிழுக்கா. | | (இ-ள்.) வருணப் பொருத்த மாமாறுணர்த்துதும். பன்னீருயிரும் க்-ங்-ச்-ஞ்-ட்-ண்- என்னு மாறொற்று மந்தணர்க்கெனவும், த்-ந்-ப்-ம்-ய்-ர்- என்னு மாறொற்று மரசர்க்கெனவும், ல் - வ் - ற் - ன் என்னு நான்கொற்றும் வணிகர்க்கெனவும், ழ் - ள் - என்னு மீரொற்றுஞ் சூத்திரர்க்கெனவுங் குறித்தார் புலவர். இம்முறை யோடு நஞ்சென விலகிய வெழுத்து வரினும் வழுவன்றெனக் கொள்க. - பொருத்தவியல். - "தீதி லுயி ரீராறு முதலொற் றாறுந் திருமறையோர்க் கடைவே யோராறும் வேந்தர்க், கேதி ல வ ற னக்கள் வணிகர்க்குமற்றை யெழுத்துளவை சூத்திரர்க்கா மியன்ற சாதி, யோதி மன்றன் படைப்புயிரே யரன்மால் செவ்வே ளும்பர்கோன் பரிதிமதி மறலி நீர்க்கோன், காத லளகேச னிவரிவ் விரண்டாய்க் கம்மு தன் மூவா றொற்றுங் கருதிச் செய்தார்." இதுமேற்கோள். எ-று. (41) | 292. | நாளின் பொருத்த நவிலுங் காலை நான்கு மைந்து மூன்றுமாய்ப் பிரியுயிர் கார்த்திகை பூராட முத்திரா டம்மே கவ்வரி நான்கிரண் டிருமுறை மூன்றிவை யோண மாதிரை முறையிரு பூசமே சவ்வரி நான்கைந்துந் தகுங்கடை மூன்றென வவ்வவை யிரேவதி யசுவதி பரணியே ஞவ்வரி ஞாஞே ஞொவ்வா மவிட்டமே தவ்வரி யிரண்டேழு தற்கடை மூன்று சோதி விசாகந் தூயோனிச் சதையமே நவ்வரி யாறு நண்ணு மிருமூன்றும் பொற்பனை கேட்டை பூரட் டாதியே பவ்வரி நான்கும் பிற்பக ரிரண்டா றெனவுத்திர மத்த மொளிசித் திரையே மவ்வரி யாறு மற்றிரு மூன்று மகமா யிலிய மகந்தொடர் பூரமே யயாவுத் திரட்டாதி யூயோ மூலமே வவ்வரி நந்நான்கு ரோகணி யிந்திர னவ்வவ் வெழித்திற் கவ்வவை குறித்தபின் னாண்மூ வொன்பதா நாயக னியற்பெயர் நாண்முதன் மங்கல நவில்சொல் லீறா | |
|
|