212தொன்னூல்விளக்கம்
  வெண்ணி யிரண்டு நான்காறெட் டொன்பதா
மன்றி யொன்றுமூன் றைந்தே ழாகா.
 
     (இ-ள்.) நாட்பொருத்தமாமாறுணர்த்துதும். மொழி முதற்கண் வரு மெழுத்திற்
கசுவதிமுத லிருபத்தேழு நட்சத்திரங்களைப் பகுத்தார் புலவர். அவற்றுள் அ, ஆ, இ,
ஈ, கார்த்திகையன; உ, ஊ, எ, ஏ, ஐ, பூராடத்தன; ஒ, ஓ, ஒள, உத்திராடத்தன; க கா,
கி, கீ, திருவோணத்தன; கு, கூ, திருவாதிரையன; கெ, கே, கை, புனர்பூசத்தன; கொ,
கோ, கௌ,பூசத்தன; ச, சா, சி, சீ, இரேவதியன; சு, சூ, செ, சே, சை, அசுவதியன; சொ,
சோ, சௌ, பரணியன; ஞ, ஞா, ஞெ, ஞொ, அவிட்டத்தன; த, தா, சோதியன; தி, தீ,
து, தூ, தெ, தே, தை, விசாகத்தன; தொ, தோ, தௌ, சதையத்தன; ந, நா, நி, நீ, நு, நூ,
அனுடத்தன; நெ, நே, நை, கேட்டையன; நொ, நோ, நௌ, பூரட்டாதியன; ப, பா, பி,
பீ, உத்திரத்தன; பு, பூ, அத்தத்தன; பெ, பே, பை, பொ, போ, பௌ, சித்திரையன; ம,
மா, மி, மீ, மு, மூ, மகத்தன; மெ, மே, மை, ஆயிலியத்தன; மொ, மோ, மௌ,
பூரத்தன; ய, யா, உத்திரட்டாதியன; யு, யோ, மூலத்தன; வ, வா, வி, வீ, உரோ
கணியன; வெ, வே, வை, வௌ, மிருகசீரிடத்தன; இங்ஙனம் பகுத்தவற்றைக் கொள்ளு
மாறுபாட்டு நாயக னியற்பெய ராதி யெழுத்தினாளே முதற்கொண் டொன்ப தொன்பதாக
வெடுத்த மங்கலச் சொன் முதலெ ழுத்து நாளளவு மெண்ணி யிரண்டு நான்குமாறு
மெட்டு மொன்பதுங்கண் டா னல்லன வெனவு, மொன்று மூன்று மைந்து
மேழுங்கண்டாற்றீயன வெனவுங் கூறினார் புலவர். - விருத்தப் பாட்டியல் - "கருதுமுயி
ரடைவே நான் கைந்து மூன்றுங் கார்த்திகையே பூராட முத்திராட, முரணறு கவ்
வரியினான் கிரண்டு மூன்று மூன்றோண மாதிரையே புணர்தம் பூச, மிருமைகொள் சவ்
வரியினான்கைந்து மூன்று மிரேவதி யாம்பரி பரணி ஞகர மைந்தும், வருமவிட் டந்தகர
மிரண் டேழு மூன்றும் வளர்சோதி விசாகமே சதைய மன்னும். - சதிர்திகழ்
நவ்வினிலாறு மூன்று மூன்றுந் தரு மனுடங் கேட்டையே பூரட்டாதி, திதமிகு பவ்வரியி
னான்கிரண் டோடா றுத்திரமுதன் மூன்றா மவ்விலாறு மூன்று, மிதின்மூன்று மகமா
மாயிலியம் பூரம் ய யா வுத்திரட்டாதி யு யூ மூல, முதலிய வம்முத னான்கு மொழிந்த
நான்கு முரோகணியா மிருகசீ ரிடமாம் பேர் நாள்." இவை மேற்கோள். எ-று. (42)
 
293. கதியின் பொருத்த விதியைக் கூறில்
ஒவ்வொழி குறிலே றவ்வொழி வலியே
செவ்வி தாகுந் தேவர் கதியே
னவ்வொழி மெலியே நெடின்முத னான்கும்
வவ்வி லஃதாகு மக்கட் கதியே
ஒஓய ர ல ழ ற வும் விலங்கின் கதியே
ன வ ள ஐ ஒளவு நரகர் கதியே.