பேர் மற்றுந் திகழ யற்சீர்க் கயன்றிருக் கொக்கருடன் முன்னும், வெறு த்த பின்னுமா மென்ப விறைவனாட்கு மேவு கணநாட் பொருத்தம் வே ண்டு மாலே. - ஆவது மங்கலத் தேற்ற பரியாயச் சொல் லடை கொடுத்து முதற்சீருக் கெடுத்தல் செய்யுண், மேவு முதலிடை மங்கலச்சொல் வைத்தல் விதி யெழுத்துப் பால்வருண மயங்கு மென்பர், வாவு மிருந்தியான முன்னோர் நூலின் மங்கலத் தானஞ்சு சிலவமுத மாகுந், தூவமுத மெனக் கதியிற் பழுது போமேற் றொடர்கலப் பாமிம்மரபின் றொடக்கஞ் சொல்வாம்." - இவை மேற்கோள். எ-று. (44) |
295. | சாதி நிலநிறத் தகுநா ளிராசிகோ ளோதின ராறு மொவ்வொரு பாவிற்கே வெண்பா முதற்குல முல்லை வெண்மை கார்த்திகை முதலேழுங் கடகம் விரிச்சிக மயிலை மதிகுரு வழங்கு மியல்பே. | |
(இ-ள்.) நாற்பாவிற்குச் சில விலக்கணங்களை யுணர்த்தத் தொடங்கினோம். மேற்கூறிய செய்யுளனைத்து மவற்றைப்போல்வன பிறவு மெல்லாம் வெள்ளை - யாசிரியங் - கலி - வஞ்சி - யென நாற்பாவாலாயினு மவற்றினத் தாலாயினும் வழங்கு மாகையின் முதற்பாவாகிய நான்கிற்குஞ் சிலவிலக்கணங்களை யுரைத்தார் முன்னோர். அவை யொருபயனு மொருகாரணமு மின்றி முன்னர் நிறுத்திய மதத்தி லூன்றினவாயினும் பிறன்மதங்கூறவே தந்திரயுத்தியாகையி லவற்றைக்காட்டுதும். ஆகையில் வெண்பாமுதற் கொண் டவ்வவபாவிற்குரிய சாதியு - நிலமு - நிறமு - நாளு - மிராசியுங் - கிரகமு - மென வாறிலக்கணப்பகுதி குறித்தார் முன்னுணர்ந்தோரெனக் கொள்க. அவற்று ளந்தணர்சாதியு முல்லைநிலமும் வெள்ளைநிறமுங் கார்த்திகை விருச்சிக மீனமென மூன்றிராசியுந் திங்கள் வியாழமென விருகிரகமும் வெண் பாவிற்கியல்பெனக் கொள்க. எ-று. (45) |
296. | அகவற் கரச ரருங்குலங் குறிஞ்சி குருதிமக முதற் கொண்டெழு மேட மரிதனுச் செவ்வா யாதவ னியல்பே. | |
(இ-ள்.) ஆசிரியப்பா வியல்புணர்த்துதும். அரசர்சாதியுங் குறிஞ்சிநிலமுஞ் சிவப்புநிறமு மகம் பூர முத்திர மத்தஞ் சித்திரை சோதி விசாகமென வேழுநாளு மேடஞ் சிங்கந் தனு வென மூன்றிராசியு ஞாயிறு செவ்வா யென விருகிரகமு மகவற் கியல்பெனக் கொள்க. எ-று. (46) |
297. | கலிக்கே வணிகங் கழனி பொன்மை குலாம்பனை முதலாறுங் குடமொடு மிதுனந் துலாம்புதன் சனியெனத் தொக்கிவை யேற்கும். | |