22தொன்னூல்விளக்கம்
     (இ-ள்.) ய ர ழ என்னு மூன்றொன்றையும் ஈற்றிலேயுடைய நிலைமொழி முன்னே
க ச த ப வருமொழிமுதல்வந்து புணர்ந்தால் அல்வழியில் மிகாமல் இயல்பாம். (உ-ம்.)
நாய்சிறிது, தேர்சிறிது, வீழ்சிறிது, எ-ம். வரும். அன்றியும், நிலைமொழிப்பதம்
தொகைப்பட்டு அடைமொழியாகநின்றால் வருமொழிப்பத முதலில்வல்லினமிகும். (உ-ம்.)
பொய் + செல்வம் = பொய்ச்செல்வம், கார் + பருவம் = கார்ப்பருவம், பாழ் +
கொல்லை = பாழ்க்கொல்லை, எ-ம். வரும். இவைமூன்றும்பண்புத்தொகை.
அன்றியும்,அம்மூன்றொற்றையும் ஈற்றிலேயுடையநிலைமொழிப்பதங்கண்முன்
வேற்றுமையில் வல்லினமு தன்மொழிவந்து புணர்ந்தால் வல்லினமிகுதலு
மெல்லினமுறழ்தலுமாகும். (உ-ம்.) வேய் + குறை = வேய்க்குறை, வேர் + குறை =
வேர்க்குறை, வீழ் + குறை = வீழ்க்குறை, எ-ம். வேய் + குறை = வேய்ங்குறை, வேர் +
குறை = வேர்ங்குறை, வீழ் + குறை = வீழ்ங்குறை, எ-ம். வேற்றுமைவழிக்கண் வல்லின
மிக்கலு மெல்லின முறழ்தலுமாயினவாறு காண்க, எ-று. (10)
 
31. சிலபலதம்மொடு சேர்புளியியல்பு
முதன்மெய்க்கடைமெய் மிகலுமீறுபோய்
லறவ்வாதலும் லாவாதலுமாம்
பிறவரினகர நிற்றலுங் கெடலுமாம்.
 
     (இ-ள்.) சிலபலவென்னும் இவ்விருசொல்லும் இரட்டித்து வருங்கால் இயல்பாய்
நிற்கவு முதலொற்றாயினுங் கடையொற்றாயினு மிக்கு வரவும், அகரங்கெட்டு லகரம்
றகரமாகவும் பெறும். (உ-ம்.) பலபல, சிலசில, என இயல்பாயின. பலப்பல, சிலச்சில என
ஒற்றுமிக்கன. பற்பல, சிற்சில, என அகரங்கெட்டு லகரம் றகரமாயின. பல்லபல,
சில்லசில, என லகரமிக்கன. ஒரோவிடத்து ல லாவாகத்திரியும். (உ-ம்.) பலாம், சிலாம்.
எ-ம். அன்றியும், பிறமொழிபுணருங்கால் அகரம் நிற்கவு நீங்கவுமாம். (உ-ம்.) பல்கலை,
என அகரநீங்கிற்று. பற்கலை, என அகரநீங்கி லகரம் றகரமாயிற்று. பலநாள், என
அகரநின்றது. பன்னாள், என அகரங்கெட்டு லகரம் னகரமாயிற்று. பல்மணி, பன்மணி;
பலவணி, பல்லணி; பலவாயம், பல்லாயம்; பலவளை, பல்வளை; பல்ஞானம், பன்ஞானம்.
எ-ம். வரும். ஆயினுந் தகரம்வரின் இயல்பாகவும், அகரம்போய் இருபத்தாறாஞ்
சூத்திரத்தின்படி தனி றவ்வெய்தி ஆய்தம்வரவுமாகும். (உ-ம்.) பல் + தொடை =
பஃறொடை, பல் + தாழிசை = பஃறாழிசை, எ-ம். பிறவுமன்ன. பல்பல, சில்சில, எ-ம்.
வரும். எ-று. (11)
 
32. ஆமாவல்வழி ஆவீறுமுற்று
மியாவிவைமுன்வலி மிகாதியல்பாகும்.
 
     (இ-ள்.) அல்வழிவந்த ஆமாவென்ற இருபெயரும் மியாவென்ற அசைச்சொல்லும்
ஆவீற்ற வெதிர்மறை முற்றுவினையும் எனவிவை வல்லினத்தோடு