222தொன்னூல்விளக்கம்

முதலோத்துச் சொல்லணியியல்.
Chapter I. - Word Embellishment.
 

303. சொல்லணி மறிநிலை மிகலெஞ்ச லொப்பென்
றொல்லணித் தொகுதி யொருநான் கென்ப.
 
     (இ-ள்.) சொல்லணி யிலக்கணமாமாறுணர்த்துதும். சொல்லால்வழ ங்கு
மலங்காரங்க ணால்வகைப்படும். அவையே, மறிநிலையணியுஞ் - சொன் மிக்கணியுஞ் -
சொல்லெஞ்சணியுஞ் - சொல்லொப்பணியு - மெனவே வழங்கும். இவற்றைத் தனித்தனி
விளக்குதும். எ-று. (1)
 

முதலாவது: - மறிநிலையணி.

1. Play on Words.
 

304. மறிநிலை யுரிமை மாறணி யாயவை
குணமுதல் காரணங் குறிப்பொழுக் கமைந்தே.
 

     (இ-ள்.) நிறுத்த முறையானே மறிநிலையணி யாமாறுணர்த்துதும்.
பொருட்பெயர்மாறி யொன்றன்பெயர் பிறிதொன்றற்குரைப்பது மறிநிலை யெனப்படும்.
இவற்று ளொன்றன்குண மற்றொன்றற்குரைப்பது பண்பு மறிநிலை, எ-ம். சினைப்பெயர்
முதற்கும், முதற்பெயர் சினைக்குஞ் செல்ல வுரைப்பது முதன்மறிநிலை, எ-ம். இவ்வாறே
காரணமுங் காரியமுந் தம் முண்மாறவுரைப்பது காரணமறிநிலை, எ-ம்.
சொல்வேறுணர்ந்த குறிப்பு வேறாகத் தோன்றவுரைப்பது குறிப்புமறிநிலை, எ-ம்.
உலகினொழுக்க மாற வுரைப்ப தொழுக்கமறிநிலை, எ-ம். வழங்கும். (வ-று.)
சினத்திற்காய்ந்தான் - உளத்தில்வெந்தான் - முல்லைநகைப்பன் - குவளைவிழிப்பன -
அள்ளருடுஞ்சு மார்பன் - நள்ளிருடுஞ்சுங்கூந்தல் - `நெட்டொளி வேங்கையா னிசிப்பட
நீத்தீங்குயிராக், கட்டொளியைக் காட்டுங் கதிர்வேந்தன்.ழு - என்பனவற்று
ளொன்றன்குணம் பிறிதொன்றற் குரைப்பது குணவழுவென்று தோன்றினு மவையே
சிறந்தவுவமையாற் பிறிதிற்பொருந்தப் புனைந்துரைத்தமையாற் பண்புமறி நிலையலங்கார
மாயிற்றெனக் கொள்க. இதனைச் சாமாதி யென்மரு முளரென்றுணர்க. அன்றியும்,
பூநிழற்சோலை - யென மரமாகிய முதற் பொருள் செய்நிழல் மலராகிய சினைப்
பொருண்மேலுரைப் பவும், நறும்பொழி - லென மலராகிய சினைப்பொருளால்
வரும்வாசனை பொழிலாகிய முதற் பொருண்மே லுரைப்பவும், முதலுஞ் சினையுமாறி
முதன்மன்றிநிலை யலங்காரமாயின. அன்றியும், "ஏரினு நன்றா மெருவிடுதல் கட்ட பின்,
னீரினு நன்றதன் காப்பு." என உழுந்தொழிலைக் காட்ட வதற்குக் காரணமாகிய
வேரினையுரைப்பவும், `ஒளியெழுந் தொரெழீஇ யுலகம்வாழ்ந்ததே.ழு - என வொளியாகிய
காரியத்தால் ஞாயிறென்னுங் காரணத்தைக்காட்டியுரைப்பவும்,