223மறிநிலையணி
இருவகைக்காரணமறிநிலை   யலங்காரமாயின.   அன்றியு   மாறுமாத -
மென்பதற்காறுதிங்களெனவும், ஆறுவருடமாயிற் - றென்பதற் கறுபயிராயிற் - றெனவும்,
இரவடுத்துறங்கால் வந்தானென்பதற்கு - "கஞ்சமே சினந்தெனக் கமழ்கத வடைப்பவும்,
பஞ்சிறைக் கிளியொடு பறவையார்த் தொடுங்கவும், பிரிநிலைக் கண்டுணர் பெற்றம்வந்
தேங்கவும், விரிநிலைத் தோளினான் விரும்பி யெய்தினான்." என்பன விவற்றுட் சொல்
வேறாகிக் குறித்தபொருள் வேறாகையிற் குறிப்புமறிநிலை யலங்காரமாயின. அன்றியும். -
"வண்டிசைக்குங் கூந்தன் மதர்விழிகள் சென்றுலவ, வெண்டிசைக்கும் போதா திடம்.'
எ-ம். "கெழுஞ்சுனை வரம்பில் வைகிக் கிளைத்தநோ யழன்ற நெஞ்சா, னழுஞ்சுனைப்
பெருகுங் கண்ணீ ரகல்கடல் வெள்ள மாற்றா." எ-ம். "சேட்டிளம் பரிதிமார்பன்." எ-ம்.
'முகிற்கை அயிற்கண் வரைத்தோள்.' எ-ம். பலவுமுலகி லொழுகுந்தன்மையைக் கடந்த
வாயினுஞ் சிறந்தபுகழ்வழியாகப் புனைந்துரைத்தமையா லொழுக்கமலை வாகாம
லொழுக்க மறிநிலை யலங்காரமாயின. இவற்றுட் பலவை பொருளைப்பற்றிவரினு
மொருசொல்லெல்லையின் முகியுமென்றமையாற் சொல்லணியாக வைக்கப்பட்டன.
எ-று. (1)
 
305. பொருள்கோளு மறிநிலை போல்வன வாமவை
யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட்
டடிமறி மாற்றென வாகுமெட் டென்ப.
 
     (இ-ள்.) முன்னோர்வகுத்த வெண்பொருள்கோளு மறிநிலையணி யென வழங்கும்.
அவையே யாற்று நீர்ப் பொருள்கோளும் - மொழிமாற்றுப் பொருள்கோளும் -
நிரனிறைப் பொருள்கோளும் - பூட்டுவிற் பொருள்கோளும் - தாப்பிசைப்
பொருள்கோளும் - அளைமறிபாப்புப் பொருள் கோளும் - கொண்டுகூட்டுப்
பொருள்கோளும் - அடிமறிமாற்றுப் பொருள் கோளும் - எனப்படும். இவற்றை யினி
யொவ்வொன்றாக விளக்குதும். - நன்னூல். - "யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை
விற்பூண், டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட், டடிமறி மாற்றெனப் பொருள்கோ
ளெட்டே." இது மேற்கோள். எ-று. (2)
 
306. யாற்றுப் புனலே யடிதொறும் பொருளற
வேற்றடி நோக்கா விளம்பலி னாகும்.
 
     (இ-ள்.) யாற்றுநீர்ப் பொருள்கோளா மாறுணர்த்துதும். மற்றடிநோ க்கா
தடிதோறும் பொருளற்று வருவதியாற்றுநீர்ப் பொருள்கோ ளெனப் படும். (வ-று.)
'விலைப்பாலி னீர்கலந்து விற்றாலுங் குற்ற, மலைப்பாரைப் பேணா மறுத்தலுங் குற்ற,
நிலைப்பாரைத் தூக்கி நெகிழ்தலுங் குற்றங், கொலைப்பால குற்றமே யாம்." எ-ம்.
பிறவுமன்ன. - நன்னூல். - "மற்றயனோக்கா தடிதொறும் வான்பொருள்,