226தொன்னூல்விளக்கம்
312. கொண்டுகூட் டென்ப கொள்பொருட் கேற்ப
விண்டடி பலவினும் வினைகொண் மொழியே.
 

     (இ-ள்.) கொண்டுகூட்டுப் பொருள் கோளாமாறுணர்த்துதும். பா
வின்பலவடிக்குள்ளு நின்றமொழிகளைப் பொருளேற்கு மிடத்துக்கொ ண்டு கூட்டுப்
பொருள்கோளெனப்படும். (வ-று.) "ஆலின்மேற் பாயுங் குவளைகுளத் தலரும், வாலி
னெடிய குரங்கு." என்பதாலின் மேற்குரங்கு பாயும், குளத்தினுளலருங் குவளை, யென
வீரடியுட்கலந்து வந்த மொழிகளைப் பொருள்வேண்டுழிக்கொண்டு கூட்டிப்
பொருளைக்கொள்ளுமாறு காண்க. இதுவே யோரடி யெல்லையுள்வரின் மொழிமாற்றென
வழங்கும். - நன்னூல். - "யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை, யேற்புழி
யிசைப்பது கொண்டு கூட்டே." இது மேற்கோள். எ-று. (9)
 

313. அடிமறி மாற்றே யடிபெயர் பொருளவு
மடியிட மாறினு மழியாப் பொருளவும்.
 
     (இ-ள்.) அடிமறிமாற்றுப் பொருள்கோளாமாறுணர்த்துதும். பொ ருள்கொள்ளும்படி
யோரடி யெடுத்தேற்புழிக் கொண்டு கூட்டவேண்டிய தாகவுஞ் செய்யுளடியெலாந்
தன்னிலைமாறி முதலினு மிடையினு மீற்றினு முச்சரிப்பினு மோசையும் பொருளும்
வழுவாதாகவும் வருவதடி மறிமாற்றுப் பொருள்கோ ளெனப்படும்.
(வ-று.) "கற்ற கழிநூலுங் கைகூடா முற்றிற்கு, முற்றபொருளு மொழிந்தகலு - நற்சுருதி,
யோதலும் பொய்ப் பெற்ற வொளிநீத் திகழ்வாங்கு, காதலுளத் தழன்றக் கால்." என
இதனு ளீற்றடியேனை யடியிடத்து மெடுத்துக்கூட்டிப் பொருளைக் கொள்ளு மாறு
காண்க. "மீனே தவழ்வில் விரிமா முடியாள், பானே யுடையாய்ப் பனிவீ சுடலாள்,
பானேர் மதியே பணிபூ வடியாள், தானே ரிலவான் றலமா ளர சாள்." என
விக்கலிவிருத்தவடி நான்குந் தம்முண் முன்னும் பின்னுமாக மாறி யுச்சரிப்பினு
மோசையும் பொருளும் வழுவாதியலுமாறு காண்க. இவ்வகை யணிடோடளவடியாக வந்த
நான்கடி யாசிரியப்பாவு மடிமறி மண்டிலவாசிரியப்பா வெனப்படு மென்று
செய்யுளியல்தந்த விடத்துச் சொன்ன தாகவுங் கண்டுகொள்க. - நன்னூல். - 'ஏற்புழி
யெடுத்துடன் கூட்டுறு மடியவும், யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை, மாட்சியு
மாறா வடியவு மடிமறி." இது மேற்கோள். எ-று. (10)
 

..............................

இரண்டாவது:-சொன்மிக்கணி.

2. Repetition.
 

314. சொன்மிக் கணியென்ப சொன்மறி தரலவை
மடக்கிசை யந்தாதி யடுக்கென மூன்றே.