227சொன்மிக்கணி
     (இ-ள்.) நிறுத்தமுறையானே சொன்மிக்கணி யிலக்கணமாமாறுண ர்த்துதும்.
வந்தசொல்மீண்டு மீண்டுவருவது சொன்மிக்கணி யெனப்படும். அவையே மடக்கும்,
இசையந்தாதியும், அடுக்கு, மென மூவகையவாகு மிவற்றைத் தனித்தனி விளக்குதும்.
எ-று. (1)
 
315. மடக்கணி யோர்மொழி மடங்கி வரலவை
யிடையிடு முதல்கடை யிருவழி மடக்கு
மிடையிடா மடக்கு மெனநால் வகையே.
 
     (இ-ள்.) மடக்காமாறுணர்த்துதும். அடியானுஞ் சொல்லானு மெழு த்தானும் வரு
மடக்காயினு மிங்கண் சொல்லணியாக வருகையிற் சொல் லாலாயின மடக்குவருமெனக்
கொள்க. ஆகையி லொரு சொல்பெயர்ந்து மீண்டுவருவது மடக்கணியெனப்படும்.
இதுவே யிடையிடாவரவு மிடை யிட்டுவரவும் பெறுமே. அன்றியு மிடையிட்டு வருங்கான்
முதலினு மீற்றினு மிருவழியினும் வரப்பெறும். வரின்முதன் மடக்கெனவுங்
கடைமடக்கெனவு மிருவழி மடக்கெனவும் வழங்கும். விதியை விளக்குதும். (வ-று.)
'இனியாரினியாரெனைக்காப்ப,' ரெனவு 'நீயே நீயே முன்காத்தும் பின்காப்பது
நாளுநாளுமே." எனவு மிவையிடை யிடாமடக் கெனக்கொள்க. பிறவு மன்ன. 'இனியா
ரெனைத்தாங்கி யென்றுயரை நீப்பா, ரினியார் மறைநூலா லென்னைத் தெளிப்பா,
ரினியா ரென்னோய்க் கமுதா யாற்றுவா ரென்றா, யினியாருன் னல்லா லெனக்கு."
என்பதிடையிடு முதல்மடக்காயிற்று. - விருத்தம். - "வரைவா யல்கா மெய்ம்மறை
யெங்கும் வளர்காலம், விரை வாய்ப் பைம்பூ வொத்தற மெல்லாம் விளைகாலந்,
திரைவா யொவ்வாச் சீர் நல மல்கித் திளைகால, மரைவாய்த் திங்க டாங்கடி நாமே
யணிகாலம்." என்பதிடையிடு கடைமடக்காயிற்று. "ஆரென்னைத் தேற்றி யருள்புரிந்தார்
நீயன்றோ, வாரென்னோ யாற்றி யமுதானார் நீயன்றோ." என்பதிடையிடு வழி
மடக்காயிற்று. இவையெலா மியற்ற மிழிடத்துஞ் சிறப்போடு வருமென்றுணர்க.
அன்றியுஞ் சூத்திரத்திலே நால்வகையென்னாது என நால்வகை யென்ற மிகையால்.
மற்றைமடக்குகள் வருமாறு:- தண்டியலங்காரம்:- "ஆதியிடை கடையாதியோ டிடைகடை,
யிடையொடு கடைமுழு தெனவெழு வகை த்தே." என்றாராகலின், ஆதிமடக்கும் -
இடைமடக்கும் - கடைமடக்கும் - ஆதியோ டிடைமடக்கும் - ஆதியோடு கடை
மடக்கும் - இடையோடு கடை மடக்கும் - மூன்றிடத்து முற்றுமடக்கும் - என
வெழுவகைப்படும் - அன்றியும். - "ஓரடி யொழிந்தன தேருங் காலை, யிணைமுதல்
விகற்ப மேழு நான்கு, மடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும்." - என்றா ராகலின்,
முதலடிக்கண்ணு மிரண்டா மடிக்கண்ணு மடக்குதலும், முதலடிக்கண்ணு மூன்றா
மடிக்கண்ணு மடக்குதலும், முதலடிக்கண்ணு நான்காமடிக் கண்ணு மடக்குதலும், இரண்டா
மடிக் கண்ணு நான்காமடிக் கண்ணுமடக்குதலும்,