231சொன்மிக்கணி
எ-து. கடையீரடி மடக்கு. "நலத்தகை பிறவிரு சரண மேத்துநங், குலத்தகை பணிகொ
ளேகம் பரத்தனே, நலத்தகை மக ளொரு பாக நண்ணுமெங், குலத்தகை பணிகொ
ளேகம் பரத்தனே." எ-து. இரண்டாமடியு மீற்றடியு மடக்கு. இவையாறு மீரடி மடக்கு.
"காமரம் பயினீர் மதுகரங், காமரம் பயினீர் மதுகரங், காமரம் பயினீர் மதுகர, நாமர
நதையுற நிலையார் நமர்." எ-து. ஈற்றடி யொழித்தேனை மூன்றடியு மடக்கு. "கடிய
வாயின காமரு வண்டின, மடிய வாமகன்றாருழை வாரலா, கடிய வாயின காமரு
வண்டினங், கடிய வாயின காமரு வண்டினம்." எ-து. இரண்டாமடி யொழித்தேனை
மூன்றடியு மடக்கு. "கோவளர்ப்பன கோனகரங்களே, கோவளர்ப்பன கோனகரங்களே,
மேவளக்கர்வியன் றிரைவேலைசூழ், கோ வளர்ப்பன கோனகரங்களே." எ-து. ஈற்றய
லடியொழித்தேனை மூன்றடியு மடக்கு. "வரியவாங்குழன் மாதரிளைங்கொடி,
யரியவாங்கயத் தானவ னங்களே, யரியவாங்கயத் தானவனங்களே, யரிவாங்கயத்
தானவனங்களே." எ-து. முதலடி யொழித்தேனை மூன்றடியு மடக்கு. இவை நான்கு
மூன்றடி மடக்கு. "வானகந்தரு மிசையவாயின, வானகந்தரு மிசையவா யின, வானகந்தரு
மிசையவாயின, வானகந்தரு மிசையவாயின." எ-து. நான்கடிமடக்கு. இதனையே
யேகபாதமென்க. அன்றியும், ஒருசொல்லே நான்கடியாய் மடக்குமென்பார். (வ-று.)
"மாதானு மாதானு, மாதானு மா தானு, மாதானு மாதானு, மாதானு மாதானு.' எ-து.
முற்றுமடக்கு. "பணி பவ னந்தமதாக மன்னுவார், பணிபவ னந்தமதாக மன்னுவா,
ரணியன மேயதுமன் பராகமே, யணியன மேயதுமன் பராகமே." எ-ம். "கலைநிலா
வருமாலை மணங்கொள்வான், மலையமாருத மாறலமாதர்கண், கலைநிலாவரு மாலை
மணங்கொள்வான், மலையமாருத மாறலமாதர்கண்." எ-ம். "ஓதநின் றுலவா
வரும்வேலைவாய், மாதரங்க மலைக்குநிகரவே, யோதநின்றுல வாவ ரும் வேலைவாய்,
மாதரங்க மலைக்குநிகரவே." எ-ம். வரும். பிறவுமன்ன. "மாலை மாலை யாகவே
யனங்கவேள் பயிறரு, மாலை மாலை வேட்டவர் மனங்கலே றவன்றுழாய், மாலை
மாலை யோவுடைத் ததுநினைந் தெழுதரு, மாலை மாலை யாவுடை யவரைவந்
திடர்செயும்." எ-து. இடையிட் டிறுதி முதன்மடக்கு. "கயலே தாவருங் கடிபுனற் காவிரி,
காவிரி மலருங் கரைபொரு மரபு, மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்புஞ், சிலம்பு
சூழ்தருந் தளிரடி மனைக் கயலே." எ-து. அந்தாதிமடக்கு. அன்றியும். தண்டியலங்காரம்.
- "ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப." என்றார். (வ-று.) "நாநா நாதங் கூடிசை
நாதந்தொழி லோவாய், தாதா தார மாக விரைத்தண் மலர் மீதே, வாவா வார்தண்
சோலையில் வாழும் வரிவண்டே, யாயா யானிற் சேர்த்துவ தன்பர்க் குரையாயால்.'
ஓரெழுத்து மடக்கு. (2)
 
316. இசையந் தாதியே யீற்றுச் சொன்மீண்
டிசைபெற வுருபுவே றெனினு மியைதலே.