232தொன்னூல்விளக்கம்
     (இ-ள்.) இசையந்தாதியாமாறுணர்த்துதும். ஒருவசனத்தீறாக நின்ற மொழிமற்
றொருவசனத்தாதியாக வருவ திசையந்தாதி யெனப்படும். அவற்றிற்குருபு வேறெனினு
மென்றமையால் வேறுருபுபெற்றும் பெறாமையு மாமெனக்கொள்க. இதுவே யோரடி
யீற்றினின்றது மற்றோரடி முதலாக வரினந்தாதித் தொடையெனச்செய்யு ளிலக்கணத்துட்
சொன்னார்புலவர். இயற்றமிழுதாரணம்:- "மாந்தர்க்கெல்லாங் கேள்வியாலறிவு
மறிவினாற்கல் வியுங் கல்வியாற்புகழும் புகழாற் பெருமையும் விளைந்துவளரு மன்றோ."
எ-ம். பிறவுமன்ன. எ-று. (3)
 
317. அடுக்கணி யொருபொருட் கடுக்கிய திரிசொ
லடுக்கி வைப்ப தடுக்கணி யெனப்படும்.
 

     (இ-ள்.) அடுக்கணி யாமாறுணர்த்துதும். சிறப்புக் காட்டவும், அன்புதுயர்
களிப்பிவற்றை மிக்கெனத் தோற்றவு, மொருபொருளைத்தரும் பல திரிசொல் லடுக்கி
வைப்ப தடுக்கணி யெனப்படும். (வ-று.) "இகழ்ந்தொ ளித்தானோ வென்னை
யிகழ்ந்தகன் றானோ கொடிய நெஞ்சான்." எ-ம். - வெண்பா. - "என்னுயிர் காத்துப்
புரந்தாண்ட வென்னிறைவன், றன்னுயிர் பட்டிறந்து சாய்ந்தொழிந்தான் - பின்னுயிராய்,
மீண்டென்னைக் காத்தோம்ப மேவிப்புரந் தளிப்ப, யாண்டையும் யார்யா ரெனக்கு."
என்பன விவற்றுட் டுயரின் மிகுதியைக் காட்டப் பலதிரி சொல் சிறப்பி லடுக்கி
வந்தவாறு காண்க. எ-று. (4)

..................................

மூன்றாவது:-சொல்லெஞ்சணி.

3. Ellipsis.
 

318. எஞ்சணி யென்ப வெளிதுணர் பலமொழி
துஞ்சில் சிறப்பிற் றோன்றா தொழித்தலே.
 
     (இ-ள்.) சொல்லெஞ்சணி யிலக்கணமாமாறுணர்த்துதும். உணர்தற்
கெளிதாயவிடத்துப் பெயர் வினைமுதலிய சொல்லொழித்துரைப்பது சொல்லெஞ்சணி
யெனப்படும். இவையே யைந்திருவகையவாகி யீரைந்தெச்ச மென்மனார் முன்னோர்.
எ-று. (1)
 
319. பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை
யெதிர்மறை யிசைக்குறிப் பெஞ்சணி பத்தே.
 
     (இ-ள்.) எஞ்சணியாமாறுணர்த்துதும். பெயரெஞ்சணியும், வினை யெஞ்சணியும்,
உம்மையெஞ் சணியும், சொல்லெஞ்சணியும், பிரிநிலையெஞ் சணியும், எனவெஞ்சணியும்,
ஒழியிசையெஞ்சணியும், எதிர்மறை யெஞ்சணியும், இசையெஞ்சணியும், குறிப்பெஞ்சணியு,
மெனச் சொல்லெஞ்சணி யொருபஃதாம். அவை. (வ-று.) "கொன்றன்ன வின்னாசெயினு
மவர்செய்த, வொன்று நன்றுள்ளக் கெடும்."