(இ-ள்.) இசையந்தாதியாமாறுணர்த்துதும். ஒருவசனத்தீறாக நின்ற மொழிமற் றொருவசனத்தாதியாக வருவ திசையந்தாதி யெனப்படும். அவற்றிற்குருபு வேறெனினு மென்றமையால் வேறுருபுபெற்றும் பெறாமையு மாமெனக்கொள்க. இதுவே யோரடி யீற்றினின்றது மற்றோரடி முதலாக வரினந்தாதித் தொடையெனச்செய்யு ளிலக்கணத்துட் சொன்னார்புலவர். இயற்றமிழுதாரணம்:- "மாந்தர்க்கெல்லாங் கேள்வியாலறிவு மறிவினாற்கல் வியுங் கல்வியாற்புகழும் புகழாற் பெருமையும் விளைந்துவளரு மன்றோ." எ-ம். பிறவுமன்ன. எ-று. (3) |
317. | அடுக்கணி யொருபொருட் கடுக்கிய திரிசொ லடுக்கி வைப்ப தடுக்கணி யெனப்படும். | |
(இ-ள்.) அடுக்கணி யாமாறுணர்த்துதும். சிறப்புக் காட்டவும், அன்புதுயர் களிப்பிவற்றை மிக்கெனத் தோற்றவு, மொருபொருளைத்தரும் பல திரிசொல் லடுக்கி வைப்ப தடுக்கணி யெனப்படும். (வ-று.) "இகழ்ந்தொ ளித்தானோ வென்னை யிகழ்ந்தகன் றானோ கொடிய நெஞ்சான்." எ-ம். - வெண்பா. - "என்னுயிர் காத்துப் புரந்தாண்ட வென்னிறைவன், றன்னுயிர் பட்டிறந்து சாய்ந்தொழிந்தான் - பின்னுயிராய், மீண்டென்னைக் காத்தோம்ப மேவிப்புரந் தளிப்ப, யாண்டையும் யார்யா ரெனக்கு." என்பன விவற்றுட் டுயரின் மிகுதியைக் காட்டப் பலதிரி சொல் சிறப்பி லடுக்கி வந்தவாறு காண்க. எ-று. (4) |
.................................. |
மூன்றாவது:-சொல்லெஞ்சணி. |
3. Ellipsis. |
318. | எஞ்சணி யென்ப வெளிதுணர் பலமொழி துஞ்சில் சிறப்பிற் றோன்றா தொழித்தலே. | |
(இ-ள்.) சொல்லெஞ்சணி யிலக்கணமாமாறுணர்த்துதும். உணர்தற் கெளிதாயவிடத்துப் பெயர் வினைமுதலிய சொல்லொழித்துரைப்பது சொல்லெஞ்சணி யெனப்படும். இவையே யைந்திருவகையவாகி யீரைந்தெச்ச மென்மனார் முன்னோர். எ-று. (1) |
319. | பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை யெதிர்மறை யிசைக்குறிப் பெஞ்சணி பத்தே. | |
(இ-ள்.) எஞ்சணியாமாறுணர்த்துதும். பெயரெஞ்சணியும், வினை யெஞ்சணியும், உம்மையெஞ் சணியும், சொல்லெஞ்சணியும், பிரிநிலையெஞ் சணியும், எனவெஞ்சணியும், ஒழியிசையெஞ்சணியும், எதிர்மறை யெஞ்சணியும், இசையெஞ்சணியும், குறிப்பெஞ்சணியு, மெனச் சொல்லெஞ்சணி யொருபஃதாம். அவை. (வ-று.) "கொன்றன்ன வின்னாசெயினு மவர்செய்த, வொன்று நன்றுள்ளக் கெடும்." |