235சொல்லொப்பணி
     (இ-ள்.) திரிபியைபணியாமாறுணர்த்துதும். ஒருபெயரு மொருவினையும்
பலவேறுருபுபெற்றும், பலபெயர் பலவினை யோருருபுபெற்றும், பல வழிவரத்தொடுப்ப
தியைபு திரிபாகித் திரிபியைபெனப்படும். (வ-று.) - தேம்பாவணி. - "மாண்டகையா
ரறஞ்சார்பா ரல்லதின மனுச்சாரா, ராண் டகையா ரருட்சாரார்க் கல்லதொரு துயர்சாரா,
சேண்டகையா ரிவன்சார்பாற் செல்லுதுநா மெனவானார், பூண்டகையா லறஞ்சார்ந்தாள்
புரசாரப் புகல்செய்தாள்." எ-ம். இதனுளியைந்த வொரு சொல் லாறுதிரிபாக வந்தவாறு
காண்க. - தாழிசை. - "வழுவார்க்கு நீநிலையே மருள்வார்க்கு நீதெளிவே, யழுவார்க்கு
நீகளியே யயர்வார்க்கு நீதிதியே, கல்லார்க்குக் கலைக்கடனீ கடவார்க்கு நிலைத்திறநீ,
யில்லார்க்கு மிரணியநீ யெல்லார்க்கு மெல்லாநீ." எ-ம். "விரைவினாற் காற்றெனவு
முழக்கத்தாற் கடலெனவு மச்சத்தா லிடியெனவுஞ் செய்குலையாற் கூற்றெனவு மதகரிவந்
தெதிர்த்த படை முருக்கினதே." எ-ம். இவற்றுட் பலபெயரோருருபு பெற்றுத் திரி
பியைபாயினவாறு காண்க. எ-று. (2)
 
322. ஒழுகிசைச் சீரொத் தொழுகிய செய்யுள்போல்
வழுவில வியற்றமிழ் வருதலு மாகும்.
 
     (இ-ள்.) ஒழுகிசையணியாமாறுணர்த்துதும். மேற்காட்டிய செய்யு யிலக்கணத்தா
லொத்தசீரொடு வருவதொழுகிய வோசை யென்பது போல வியற்றமிழிடத்தும் பெயரு
மீரெச்சமு முரிச்சொல்லு மிடைச் சொல்லும் பலபல வசனத்தி லொப்பவந்து வருமெழுத்
தெண்ணு மொன்றுவ தொழுகிசை யலங்கார மெனப்படும். (வ-று.) 'விடாது நறுநெய் பூசி
நீங்கா தொளி மணிசேர்த்தி மங்கா மதுமலர் சூடி யொழுங்கிட வகுத்து
வனப்புறவளைத்துப் புடைப்பெழச் சொருகித் தமக்கழகாகவும் பிறர்க் கிழிவாகவும்
நள்ளிருட் கூந்தலை யளகமாக சேர்த்துவ ரிழிவிலை மாதரன்றோ.' எ-று. (3)
 
323. இயைபிசை சொல்லுரு பீற்றிலொத் தாதலே.
 
     (இ-ள்.) இயைபிசையணியாமாறுணர்த்துதும். பற்பல வசனத்திறுதி
மொழிகடம்மு ளுருபினொப்புமையா லியைந்துவருவ தியைபிசை யலங் காரமெனப்படும்.
இதுவே செய்யுளிலக்கணத் தியைபுத் தொடையென் றெண் விகற்பமாக வழங்குவ தெனக்
கண்டுணர்க. (வ-று.) 'செங்கதிர் நெடுங்கை நீட்டி மல்கிருட் கங்குலோட்டிப் படரொளி
முகத்தைக்காட்டிப் பருதியே கடன்மேலெழுந்துழிச் செவ்விதட்டாமரை பூப்பச்
சோலைவாய்ப் பறவைகளார்ப்ப வம்புவி யிராவிருணீப்ப வணியழகொப்பொன் றிலதே.'
என வியற்றமிழ். இனிச் செய்யு ளியைபிற் குதாரணந் தொடை விகற்பத்துடன் காண்க.
எ-று. (4)
 
324. சமமென்ப மாத்திரை தவுதல் வேற்றெழுத்
தொன்றுற லன்றி யொன்றிய சொல்லே