237பொருளணியியல்
நீரோட்டமு மொற்றுப்பெயர்த்தலு மாத்திரைவருத்தனமு மு ரசபந்தனமுந் திரிபங்கியும்
பிறிதுபதரிபாட்டு மென்றிவை யிருபது மிறை கவி யென்பராயினு மிவை சிறுபான்மை
யாகையி லிங்கண் விரிவுக்கஞ்சி யொழித்தனம். எ-று. (5)
 
325. சொல்லணி மறிநிலை யைந்துங்கோ ளெட்டுஞ்
சொன்மிக் கணிமூன்றுஞ் சொல்லெஞ் சணிபத்துஞ்
சொல்லொப் பணிநான்குந் தொகையா றைந்தே.
 
     (இ-ள்.) முறையே சொல்லணி யோத்தினுள் விளக்கியவற்றின் றொகைச் சூத்திரம்
வந்தவாறு காண்க. எ-று. (6)
 

முதலோத்துச் சொல்லணியியன். - முற்றிற்று.

...........................

இரண்டாமோத்துப் பொருளணியியல்.
Chapter II. - Rhetorical figures.
 

326. பொருளணி யாறைம் புணர்ப்பெனத் தன்மை
யுரியபல விகற்ப வுவமை யுருவகம்
வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை தானே
யொட்டணி யவநுதி யூகாஞ் சிதமே
நுட்பம் புகழ்மாற்றே தன்மேம்பாட் டுரையே
பின்வரு நிலையே முன்ன விலக்கே
சொல்விலக் கிலேசஞ் சுவையே யுதாத்த
மொப்புமைக் கூட்ட மொப்புமை யேற்றம்
விபாவனை விசேடம் விரோதப் பிறிதுரை
விடையில் வினாவே வினவில் விடையே
சித்திர மொழிபமைவு சிலேடை சங்கீரண
மித்திறத் தனையவு மியம்பினர் கற்றோர்.
 
     (இ-ள்.) பொருளணி யிலக்கணமாமாறுணர்த்துதும். ஆதியி னிறு த்த முறையானே
சொல்லால் வருமணி யியல்பினை விளக்கிய பின்னர் பொருளால் வருமணி யியல்பினை
விளக்கலால் பொருளணி யெனும் பெயர்த்து. இதனுள் செந்தமிழ் நன்குணர்ந்தோர்
முன்றந்தவற்றுள் வேண்டாதன சிலவொழித்து வேண்டிய சிற்சில கூட்டித் தன்மை
முதற்கொண் டுரைத்த வணிக ளாறைந்தையுந் தனித்தனி விளக்குதும். சூத்திரத்தி
லனையவு வென்ற மிகையா லிவ்வாசிரியர் சொல்லாதவற்றை யிந்நூற் கண்ணே சொல்ல
வேண்டிய விடத்திற் பன்னூலினுஞ் சிற்சில வெடுத்துக் கூறுதும்.