238தொன்னூல்விளக்கம்
- தண்டி யலங்காரம். - "தன்மை யுவமை யுருவகந் தீவகம், பின்வரு நிலையே முன்ன
விலக்கே, வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை, யொட்டே யதிசயந்
தற்குறிப் பேற்ற, மேது நுட்ப மிலேச நிரனிறை, யார்வ மொழிசுவை தன்மேம்
பாட்டுரை, பரியா யம்மே சமாயித முதாத்த, மரிதுண ரவநுதி சிலேடை விசேட,
மொப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோத, மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி,
நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே, வாழ்த்தொடு சங்கீ ரணம்பா விகமிவை,
யேற்ற செய்யுட் கணியே ழைந்தே." இது மேற்கோள். எ-று. (1)
 
327. தன்மை யணியே தன்பொருட் குரிய
வன்மை பலவும் வழுவா துரைத்தலே.
 
     (இ-ள்.) தன்மை யலங்காரமாமாறுணத்துதும். பொருளதிகாரத்தி லுரிமை யெனும்
பெயரிட்டு வழங்கினதீண்டுத் தன்மை யணி யெனக் கொள்க. பொருளானுங்
குணத்தானுஞ் சாதியானுந் தொழிலானு முரி மையுந் தன்மையும் வழங்கு மென்றுணர்க.
(வ-று.) "மீனே தலையரும்ப வெண்மதியே தாளரும்பப், பானே யுடலரும்பப்
பாங்குருவே - தானே, ருடைத்தா டிருக்காவலூ ரகத்து வைத்தா, டுடைத்தாள்
வினைத்துயரே தொக்கு." - இது பொருட்டன்மையணி. - "உள்ளங் குளிர வுரோமஞ்
சிலிர்த்துறையுந், தள்ளவிழி நீர்த்ததும்பத் தன்மறந்தாள் - புள்ளொலிக்குஞ், சேந்தாமரை
வயல்சூழ்த் தில்லைத் திருநடஞ்செய், பூந்தாமரை தொழுத பொன்." - இது
குணத்தன்மையணி. - "பத்தித்த கட்டகறை மிடற்ற பைவிரியந், துத்திக்க வைந்ததுளை
யெயிற்ற - மெய்த்தவத்தோ, ராகத் தானம்ப லத்தா னாராவமிழ் தணங்கின், பாகத்தான்
சாத்தும் பணி." - இது சாதித்தன்மையணி. - "சூழ்ந்து முரண்டணவி வாசந்
துதைந்தாடித், தாழ்ந்து மது நுகர்ந்து தாதருந்தும் - வீழ்ந்தவிழ்ந்த, பாசத்தார் நீங்காப்
பரஞ்சுடரின் பைங்கொன்றை, வாசத்தார் நீங்காத வண்டு." - இது தொழிற்றன்மையணி.
தண்டியலங்காரம். - "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ், சொன்முறை
தொடுப்பது தன்மையாகும். - அதுவே, பொருள்குணஞ் சாதி தொழிலொடு புலனாம்."
இவை மேற்கோள். எ-று. (2)
 
328. உவமை யென்ப துரிக்குணத் தொழிற்பய
னிவற்றொன்றும் பலவு மிணைந்து தம்மு
ளொப்புமை தோன்றச் செப்பிய வணியே.
 
     (இ-ள்.) உவமை யென்னு மலங்காரப் பொது விலக்கணமாமாறுண ர்த்துதும்.
இருபொருடம்முட் குணத்தானுந் தொழிலானும் பயனானு மொத்தன வாகக் காட்ட
லுவமை யலங்கார மெனப்படும். இவற்று ளொரு பொருட் கொரு பொரு ளுவமையும்,
ஒரு பொருட்குப் பலபொரு ளுவமையும், பலபொருட் கொருபொரு ளுவமையும்,
பலபொருட்குப் பலபொருளுவமையும்,