24தொன்னூல்விளக்கம்

மெய் + மாண்டது = மெய்ம்மாண்டது, மெய் + நீண்டது = மெய்ந்நீண்டது, என
அல்வழியிலும், கைஞ்ஞாற்சி, மெய்ந்நீட்சி, மெய்ம்மாட்சி, என வேற்றுமையிலும்,
ஒற்றுமிக்கன; துந்நாடா, தும்மாடா, நொந்நாகா, நொம்மங்கா, எனஏவற்சொல்லினு
மிக்கன. அன்றியும், துய்யவனா, துவ்வளவா, நொய்யவனா, நொவ்வளவா, எ-ம். வரும்
எ-று. (15)

36. தனிக்குறின்மெய்யுயிர் சார்புளிமிகும்ரழத்
தனிக்குறிற்சாரா தாமுமிகாவென்ப.
     (இ-ள்.) தனிக்குறில் நிலைப்பதத்தீற்று ஒற்றெழுத்தெல்லாம் உயிர்
தொடர்ந்துவரின் இரட்டும். (உ-ம்.) கண் + அழகு = கண்ணழகு, கம் + அழகு =
கம்மழகு, பொன் + அழகு = பொன்னழகு, மெய் + அழகு = மெய்யழகு, கல் + அழகு =
கல்லழகு, தெவ் + அழகு = தெவ்வழகு, புள் + அழகு = புள்ளழகு, எ-ம். வரும்.
அன்றியும், ர ழ வென இரண்டொற்றுந் தனிக்குறின் மொழியீற்றின்கண் வரவும்
இரட்டவும் பெறாதெனக் கொள்க. - நன்னூல். "தனிக்குறின்முன்னொற்
றுயிர்வரினிரட்டும்." எ-து. "ரழத்தனிக்குறிலணையா." எ-து. மேற்கோள். எ-று. (16)
 
37. மெலிவுறிற்பாவிடை மென்மைவன்மை
குறுமைநீட்சி குறுந்தொகைவிரிவே
மற்றொருமொழிமூ வழிகுறைதலுமென
வேண்டுளித்தனிமொழி விகாரமொன்பதே.
 
     (இ-ள்.) சந்திகாரணமாக வரு முன் காட்டிய எழுத்தின் விகாரங்க ளன்றியே
தனித்தொரு மொழியின் வரும் விகாரங்களீண் டுணர்த்துதும். அவையொன்பதாம்.
மெலித்தலும் வலித்தலும் குறுக்கலும் நீட்டலும் தொகுத்தலும் விரித்தலும் அன்றி,
ஒருமொழிதானே முதல் இடை கடை என மூவிடத்துக் குறைதலுமாம். (உ-ம்.) வாய்ந்தது,
எ-து. வாய்த்தது என வலித்தல் விகாரம். தட்டை, எ-து. தண்டை என மெலித்தல்
விகாரம். நிழல், எ-து. நீழல் என நீட்டல் விகாரம். பாதம், எ-து. பதம் எனக்குறுக்கல்
விகாரம். தண்டுறை, எ-து. தண்ணந்துறை என விரித்தல் விகாரம். வேண்டாதார், எ-து.
வேண்டார் எனத்தொகுத்தல் விகாரம். அன்றியும், தாமரை, எ-து. மரையிதழ்புரையு
மஞ்செஞ்சீறடி என மொழிமுதற் குறைந்த விகாரம். யாவர், எ-து. யார் என
மொழியிடைக்குறைந்த விகாரம். நீலம், எ-து. நீலுண்டகண், நீனிறப்பகடு என
மொழிக்கடைக் குறைந்த விகாரம். இவ்வொன்பது விகாரங்களுள் சில சிறு பான்மை
யாகையிற் றானேவழங்காதவற்றை இலக்கியங்க ளுட் காண்புழி யறிந்துகொள்க. இவை
செய்யுள் விகாரம். அன்றியும், புணர்ச்சிவிகாரம், புணர்ச்சியில் விகாரமும் சிலவுள.
(உ-ம்.) நிலவலையம், பொற்குடம்,