243பொருளணியியல்
களிக்குங் கயலுங் கனிவாய்த் - தளிர்க்கொடியே, தாமரைபோன் மலரு நின்முக
நின்முகம்போற், றாமரையுஞ் செவ்வி தரும்." எ-ம். - வெண்பா. - "தளிர்பெற்று
வைகிய தண்சுனை நீல, மளிபெற்றார் கண்போ லலரு - மிளிபெற்ற, நல்லார்
திருமுகத்தி னாற்றத் தளிபெற்றக், கல்லாரம் போன்மலருங் கண்." எ-ம். பிறவுமன்ன
எ-று. (6)
 
332. விபரீத பொருளா விளம்பிய வுவமையே.

 

     (இ-ள்.) விபரீத வுவமையலங்காரமாமாறுணர்த்துதும். காட்டவெடுத்த பொருளை
யுவமைப் பொருட்கோ ருவமையாக மாறுபாடா வுரைப்பது விபரீதவுவமை யெனப்படும்.
(வ-று.) "திருமுகம்போன் மலருஞ் செய்ய கமலங், கருநெடுங்கண் போலுங் கயல்." எ-ம்.
வெண்பா. - "தாயேநின் னானனம்போற் சந்திரனே முற்றியபின், மேயாநின்
றுன்னுதல்போற் சீர்த்ததுவே - நோயாக, வீரெதிரிற் றோற்றாரா தேங்கி வரங்கேட்டுன்,
சீரடியைப் பூண்டிறைஞ்சுஞ் சேர்ந்து." எ-ம். பிறவுமன்ன. எ-று. (7)
 
333. மறுபொரு ளாம்பொருள் வந்தொப் புரைத்தலே.
 
     (இ-ள்.) மறுபொருளுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். பொரு ளைக்கூறிய
பின்னதற்குவமை கூறுவது மறுபொருளுவமை யெனப்படும். (வ-று.) வெண்பா. -
"அன்னையா யெவ்வுயிர்க்கு மாதரவா யன்பருளு, நின்னையா ரொப்பார் நிலவேந்த-
ரன்னதே, பாரிடையே தோன்றிப் பயன்றருதற் கில்லையாஞ், சூரியனேபோலுஞ் சுடர்."
எ-ம். பிறவுமன்ன. எ-று. (8)
 
334. நியமமாம் பிரிநிலை யேகா ரம்வந்
தியனிக ரொன்றுரைத் தேனைய நீக்கலே.
 
     (இ-ள்.) நியமவுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்தபொரு ளுக்
கின்னதுவமையன்றி மற்றொன்றில்லை யென்று காட்டிக் கூறியவுவ மைப்பொருண்மேற்
பிரிநிலை யேகாரந் தந்து முடிப்பது நியமவுவமையெனப்படும். என்னை. நியமமெனினு
மிணையின்மை யெனினு மொக்கும். (வ-று.) "செங்கமல வாயொழுகுந் தேனே யுன்சொற்
கிணையாம்." எ-ம். 'சுடுமூழித் தீயே நிகருஞ் சொற்சொன்னான்' எ-ம். - வெண்பா. -
"தேன் மலரே வாடுமெனச் செங்கதிரோன் காயுமெனப், பான்மதியே தேயுமெனப்
பாங்கினையா - நான்மருவுந், தாயே திருக்காவலூ ரரசே தாரணிமே, னீயே நினக்கு
நிகர்." எனவே நினக்கு நிகரில்லை யென்பது கருத்து. இதனைப் பொதுநீங்குவமை
யென்மருமுள ரெனக்கொள்க. எ-று. (9)
 
ஐயங் கொண்டன விருபொரு ளறைத
லைய வுவமை யாகு மென்ப.
 
335.
     (இ-ள்.) ஐயவுவமையலங்காரமாமாறுணர்த்துதும். உவமையோ பொருளோ
வென்றுளத் தையந் தோன்றினதாகக் கூறுவ தைய வுவமையெனப்படும்.