249பொருளணியியல்
குழலின் புறமலிந்த கொம்பர் - சுருளளகந், தாங்கிய வன்னந் தடங்கொங்கையார் மாதந்,
தேங்கொள் கமலத் திரு." எ-ம். இவை சிறப்புருவகம். "மன்றற்குழ லாருயிர் மேன்மதன்
கடவுந், தென்றற் கிரிதடுக்குந் திண்கணைய - மன்றவரைக், கங்குற் கடலின் கரையேற்று
நீள்புணையாம், பொங்கு நீர்நாடன் புயம்." இது அற்புதவுருவகம். "நல்லார்கட் பட்ட
வறுமையி னின்னாதே, கல்லார்கட் பட்ட திரு." இது தேற்றவுவமை. "அடிநோக்கி
னாழ்கடல் வண்ண னவன்றன், படிநோக்கிற் பைங்கொன்றைத் தாரோன் - முடிநோக்கிற்,
றேர்வள்வ னாத றெளிந்தே னவன்முடிமே, லாரலங்க லோங்கியது கண்டு." இது
பலவயிற்போலி. "முத்துக் கோத்தன்ன முறுவன் முறுவலே, யொத்தரும்பு
முல்லைக்கொடி மருங்குன் - மற்றதன்மேன், மின்னளிக்குங் கார்போன்ம் விரைக்கூந்தன்
மெல்லியலி, தண்ணளிக்கு முண்டோ தரம்" இது மெய்யுவமை. பிறவுமன்ன எ-று. (16)
 
342. வேற்றுப்பொருள் வைப்பே விளங்கினது தொடங்கி
யீற்றி னுதலிய வேற்றி யுரைத்தலே.
 
     (இ-ள்.) வேற்றுப்பொருள்வைப்பலங்காரமாமாறுணர்த்துதும். எவ ருமறிந்த
வொன்றைக் கூறிய பின்ன ரெடுத் ததன்பொரு ளத்தன்மைத் தாகுமெனக் கூறுவது
வேற்றுப்பொருள்வைப்பெனப்படும். இதுவு முவ மை விகற்பத்து ளடங்கவும் பெறும்.
(வ-று.) "நெட்டொளி வேங்கையா னிசிப்பட நீத்தீங் குயிராய்க், கட்டொளியைக் காட்டுங்
கதிர்வேந்தன் - பட்டொளிநீ, ராங்கொழியக் கண்டன்பின் னாசையுட்கொள் வாரோவீங்,
கோங்கழியாச் செல்வமுண் டென்று." எ-ம். "வெய்யகுர றோன்றி வெஞ் சினவேறுட்
கொளினும், பெய்யு மழை முகிலைப் பேணுவரால் - வையத், திருள்பொழியுங் குற்றம்
பலவெனினும் யார்க்கும், பொருள் பொழிவார் மேற்றே புகழ்." என வரும். அன்றியும்,

      அவ்வலங்கார விரிவு வருமாறு:- தண்டியலங்காரம். - முழுவதூஉஞ் சேற
லொருவழிச்சேறன், முரணிற் றோன்றல் சிலேடையின் முடித்தல், கூடா வியற்கை கூடு
மியற்கை,யிருமை விபரித மெனவத னியல்பே." என்றாராகலின், முழுவதுஞ் சேறலாவது:-
ஒருதிறமுரைத்தா லத்திற மெல்லா வற்றுமேலுமுற்றச்செல்லவுரைப்பது. (வ-று.) "புறந்தந்
திருளிரியப் பொன்னேமி யுய்த்துச், சிறந்த வொளிவளர்க்குந் தேரோன் - மறந்தாற்,
புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி, யிறவாது வாழ்கின்றார் யார்." எனவரும். ஒரு
வழிச்சேறலாவது:- ஒரு திறமுரைத்தாலத்திற மெல்லாவற்றுமேலு முற்றச்செல்லாது
சிலவற்றின்மேலே சென்றொழிவது. (வ-று.) "எண்ணும் பயன்றூக்கா தியார்க்கும்
வரையாது, மண்ணுலகில் வாமனருள் வார்க்குந், தண்ணுறுந்தேன், பூத்தளிக்குந் தாராய்
புகழாளர்க் கெவ்வுயிருங், காத்தளிக் கையன்றோ கடன்." என வரும்.
முரணிற்றோன்றலாவது:- தம்முண் மாறுபட்டிருக்கு மியல்புடைத்தாயப் பொருள்வைத்தல்.
(வ-று.) "வெய்யகுரற் றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும்,