25மூன்றாவதெழுத்தின்விகாரம்
வாழைப்பழம், எ-ம். வரும். இவை புணர்ச்சி விகாரம். புணர்ச்சி யில்விகாரம் ஏழாகும்.
முதலாவது தோன்றல். (உ-ம்.) குன்று - குன்றம், செல் - வழி, செல்வுழி, எ-ம்.
இரண்டாவது, திரிதல். (உ-ம்.) மாகி, மாசி, எ-ம். மூன்றாவது, கெடுதல். (உ-ம்.) யார்-
ஆர், யாவர்-யார், எ-ம். நான்காவது நீளல். (உ-ம்.) பொழுது - போது, பெயர் - பேர்,
எ-ம். ஐந்தாவது, நிலைமாறுதல். (உ-ம்.) வைசாகி, வைகாசி, நாளிகேரம், நாரிகேளம்,
தசை, சதை, ஞிமிறு, மிஞிறு, சிவிறி, விசிறி, எ-ம். ஆறாவது, மருவி வழங்குதல். (உ-ம்.)
என்றந்தை, எந்தை, எ-ம். ஏழாவது, ஒத்துநடத்தல். (உ-ம்.) நண்டு, ஞண்டு, நெண்டு,
ஞெண்டு, நமன், ஞமன், எ-ம். வரும். எ-று. (17)
 
38. இருமொழி யொருமொழி யெனச்சங்கீர்தமாய்
நிலைமொழியீற்றுயிர் நீங்கலுமதனோ
டணைமொழிமுதற்கண் அ ஆவாதலும்
இ ஈ ஏ யாதலும் உ ஓ வாதலுமாம்.
 
     (இ-ள்.) ஆதியிற் காட்டிய நால்வகை விகாரங்களுட் டிரட்டெனும் விகாரமா
மாறுணர்த்துதும், திரட்டெனினுஞ் சங்கீர்தமெனினுமொக்கும். ஆகையி லிருபத
மொருபதமாக ஒரோ விடத்து நிலைப்பதவீற் றெழுத்தும் வரும்பத முதலெழுத்தும்
ஒன்றாகத் திரண்டு விகற்பமாகும். இது வடமொழிகளின்கண் மிகவழங்கு மென்றுணர்க.
ஆகையின் முந்தி நிலைப்பத வீற்றுயிர்கெடும். அதுவே கெட்டதன் மெய்ம்மேல்
வரும்பதமுதலுயிரேறும். இவ்வாறு வருதல் தீர்க்கசந்தி, குணசந்தி, விருத்திசந்தி
எனப்படும். அவை வருமாறு. அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் அவ்விரண்டி லொன்று
வந்தால் ஆகாரமும், இகர ஈகாரங்களில் ஒன்றன்முன் அவ்விரண்டில் ஒன்று வந்தால்
ஈகாரமும், உகர ஊகாரங்களில் ஒன்றன்முன் அவ்விரண்டி லொன்று வந்தால்
ஊகாரமும், முறையே நிலைப்பத வீறும் வரும்பதமுதலும் கெடத் தோன்றுதல் தீர்க்க
சந்தியாகும். (உ-ம்.) வேத + ஆகமம் = வேதாகமம், குள + ஆம்பல் = குளாம்பல்,
பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம், சிவ + ஆலயம் = சிவாலயம், சரண + அரவிந்தம் =
சரணாரவிந்தம், சேநா + அதிபதி = சேநாதிபதி, பாத + அரவிந்தம் = பாதாரவிந்தம்,
அக + அரி = அகாரி, மர + அடி = மராடி, சுசி + இந்திரம் = சுசீந்திரம், கிரி + ஈசன் =
கிரீசன், மகீ + இந்திரன் = மகீந்திரன், மகீ + ஈசன் = மகீசன், குரு + உதயம் =
குரூதயம், தரு + ஊனம் = தரூனம், சுயம்பூ + உபதேசம் = சுயம்பூபதேசம், சுயம்பூ +
ஊர்ச்சிதம் = சுயம்பூர்ச்சிதம், எ-ம். வரும். அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் இகர
ஈகாரங்களில் ஒன்று வந்தால் ஏகாரமும், அவ்விரண்டில் ஒன்றன் முன் உகர
ஊகாரங்களில் ஒன்று வந்தால் ஓகாரமு முறையே நிலைப்பத வீறும் வரும்பதமுதலுங்
கெடத் தோன்றதல் குணசந்தியாகும். (உ-ம்.) சுர + இந்திரன் = சுரேந்தின், நர +
இந்திரன் = நரேந்தின், தரா + இந்திரன் = தரேந்திரன்,