250தொன்னூல்விளக்கம்
பெய்யுமழை முகிலைப்பேணுவரால்-வையத், திருள்பொழியுங் குற்றம் பலவெனினும்
யார்க்கும், பொருள் பொழிவார் மேற்றேபுகழ்." எனவரும். சிலேடையின் முடித்தலாவது:-
முன்னர்வைத்த பொருளையும் பின்னதனையு மொருசொற்றொடர்பாற் சொல்லுவது.
(வ-று.) "எற்றே கொடிமுல்லை தன்னைவளர்த் தெடுத்த, முற்றிழையாள் வாட
முறுவலிக்கு - முற்று, முடியாப் பரவைமுழங்குலத் தேதன்றுங், கொடியார்க்கு முண்டோ
குணம்." என வரும். கூடாவியற்கையாவது:- கூடாததனைக் கூடுவதாகக் கூறுவது. (வ-று.)
"ஆர வடமு மதிசீத சந்தனமு, மீர நிலவு மெரிவிரியும் - பாரிற், றுதிவகையான்
மேம்பட்ட துப்புரவுந் தத்தம், விதிவகையான் வேறு படும்." எனவரும்.
கூடுமியற்கையாவது:- கூடுமதனைக் கூடுவதாகக் கூறுவது. (வ-று.) "பொய்யுரையா நண்பா
புனைதேர் நெறிநோக்கிக், கைவளைசோர்ந் தாவி கரைகுவார் - மெய்வெதும்பப், பூத்த
கையுஞ் செங்காந்தாள் பொங்கொலிநீர் ஞாலத்துத், தீத்தகையார்க் கீதோ செயல்."
எனவரும். இருமையியற்கையாவது:- கூடாததனையுங் கூட்டுவ ததனையுங்
கூடுவதாகக்கூறுவது. (வ-று.) "கோவலர்வாய் வேய்ங்குழலே யன்றிக் குரைகடலுங், கூவித்
தமியோரைக் கொல்லுமாற் - பாவாய், பெரி யோரும் பேணாது செய்வரே போலுஞ்,
சிறியோர் பிறர்க்கியற்றுந் தீங்கு." என வரும். விபரீதமாவது:- விபரீதப்படச்
சொல்லுவது. (வ-று.) "தலை யிழந்தா னெவ்வுயிருந் தந்தான் பிதாவைக்,
கொலைபுரிந்தான் குற்றங்கடிந்தா - னுலகிற், றனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவ
ரேற்றப்பா, வினையும் விபரீதமாம். என வரும். எ-று. (17)
 
343. வேற்றுமை யென்ப முன்னாற்றிய விருபொருள்
சாற்றிய வுவமையில் வேற்றுமைப் படுத்தலே.
 
     (இ-ள்.) வேற்றுமை யலங்காரமாமாறுணர்த்துதும். இருபொருளைத் தம்முள்
ளுவமித்துப் பின்னரவற்றுள் வேற்றுமை தோன்றக் கூறுதல் வேற்றுமை யலங்கார
மெனப்படும். ஆகையி லிதுவுமுவமை விகற்பத்து ளடங்கும். (வ-று.) "மீனணியும்
பாற்கதிரும் வெண்மதிக்கு மம்மதியைத், தானணியு நாய்க்குஞ் சரல்பூண்டு-வானணியுந்,
திங்கட் குண்டல்லா தோர் தேய்வு மிருண்மறுவு, மெங்கட்குண் டாளரசாட்கில்." எ-ம்.
அன்றியும். - தண்டி யலங்காரம். - "கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள்,
வேற்றுமை படவரின் வேற்றுமை யதுவே." என்றாராதலின். (வ-று.) "அனைத்துலகுஞ்
சூழ்போ யரும்பொருள் கைக்கொண், டினைத்தளவைத் தோற்ற கரிதாம் - பனிக்கடன்,
மன்னவநின் சேனைபோன் மற்றதுநீர் வடிவிற், றென்னுமிது வன்றே வேறு." எ-து.
ஒருபொருள். "சென்று செவி யளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுளே, நின்றளவி
யின்பநிறை பவற்று - ளொன்று, மணலிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன்று,
மணலிவருங் கூந்தறன் வாக்கு." எ-து. இருபொருள். "மலிதேரான் கச்சியு மாகடலுந்
தம்மு,