254தொன்னூல்விளக்கம்
பொய்வல்லா ரென்று பொதுமாதர் மார்பீயாய், மொய்வல்லார்க் கீயாய் முதுகு." எ-து.
பழித்தாய் போலப் புகழ்ந்தது. - வெண்பா. - "ஏனையோர் கைப்பொருட்கொண்
டேற்றல்லா லுன்பொருளைத், தானிடா யென்றார்பொய் தாமுரைத்தார் - வேனெவர்க்கு,
மண்டா திரவா தளவின்றி யெந்நாளு, நுண்டாதர வீவாய் நோய்." என்பது புகழ்ந்தாற்
போலப் பழித்தது. - குறள். - "எற்றிற் குரியர் கயவ ரொன் றுற்றக்கால், விற்றற் குரியர்
விரைந்து." என்பதிதுவும் புகழ்ந்தாற்போலப் பழித்தது. பிறவுமன்ன. - தண்டியலங்காரம்
- "பழிப்பது போலும் பான்மையின் மேன்மை, புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி".
இது மேற்கோள். எ-று.
 
349. தன்மேம் பாட்டுரை தான்றற் புகழ்தலே.
 
     (இ-ள்.) தம் மேம்பாட்டுரை யலங்காரமாமாறுணர்த்துதும். ஒரு வன் றனக்கு
மேம்பாட்டாகத் தோன்றத் தன்னைத்தானே புகழ்வது தன் மேம்பாட்டுரை யெனப்படும்.
(வ-று.) - வெண்பா. - "எஞ்சினா ரில்லையெனக் கெதிரா யின்னுயிர்கொண், டஞ்சினா
ரஞ்சாதுபோ யகல்க - வெஞ்சமத்துப், பேராத வராகத் தன்றிப் பிறர்முதுகிற், சாரா
வென்கையிற் சரம்." எ-ம். "யானு மென்னெஃகமுஞ் சாலு மவனுடை, யானைக்குஞ்
சேனைக்கு நேர்." எ-ம். பிறவுமன்ன. - தண்டியலங்காரம். - "தான்றற் புகழ்வது தன்
மேம் பாட்டுரை." இது மேற்கோள். எ-று. (24)
 
350. பின்வரு நிலையே பிறழ்ந்தெனப் பலவயின்
முன்வருஞ் சொல்பொருள் பின்னும் வருவதே.
 
     (இ-ள்.) பின்வரு நிலையலங்காரமாமாறுணர்த்துதும். மேற்சொன்ன
மடக்கணிபற்றிய வொழுங்கில்லாமையு முன்னர்வந்த சொல்லாயினும் பொருளாயினும்
பின்னர் பலவிடத் தலைவரிற் பின்வரு நிலையலங்கார மெனப்படும். (வ-று.) வெண்பா. -
"மலர்விழியே வாய்மலரே வாய்ந்த வதன, மலரேகை கண்மலரே வாடா - மலர்மாலை,
யானா ளிருண்மாலை யற்றா ளருண்மாலை, தானாந் தனிக்கன்னித் தாய்." எ-து.
சொற்பின் வருநிலையாகையின் சொல்லணியாமாயினும் பொருளானும்
வழங்குமிதுவென்றமை யாலிங்கண் வைக்கப்பட்டது. அன்றியும். - வெண்பா. -
"அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா, நெகிழ்ந்தன நேர்முகை முல்லை -
மகிழ்ந்திதழ், விண்டன, கொன்றை விரிந்த கருவிளை, கொண்டன காந்தள் குலை."
எ-து. பொருட்பின்வருநிலையலங்காரம். - "வைகலும் வைகல் வரக் கண்டு மஃது
ணரார், வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர், வைகலும் வைகற் றம்
வாழ்நாண்மேல் வைகுதல், வைகலைவைத் துணரா தார்." எ-து. சொற்
பொருட்பின்வருநிலை. "செங்கமல நாட்டஞ் செழுந்தாமரை வதனம், பங்கயமென்
செவ்வாய்ப் பதுமம்போற்-செங்கரங்க, ளம்போருகந் தாள ரவி ந்த மாரனார்,
தம்போருகந் தாடனம்." எ-து. பொருட்பின் வருநிலை. "மால் கரி காத்தளித்த
மாலுடைய மாலைசூழ், மால்வரைத்தோ ளாதரித்த மாலையார் - மாலிருள் கூர்,