263பொருளணியியல்
"களிப்பனோ வழுவனோ கனிய தானெனை, விளிப்பனோ சுளிப்பனோ விழைந்த
வாண்முக, மொளிப்பனோ தழுவிய வுவப்பின் முத்தமு, மளிப்பனோ வுலகெலா மளித்த
நாதனே." என்பதைய வினாவணி. பிறவுமன்ன. எ-று. (37)
 
363. வினவில் விடையே வினவினா லெனப்பிறர்
மனவுணர் வுரைத்து மறுவுரை கூறலே.
 
     (இ-ள்.) வினவில்விடை யலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றை யு ரைக்குங்காற்
பிறரெதிர் பிறிதொன்றை யுணர்ந்து வினாவினதாகச் சொல்லித் தன்பொருள் விளங்க
மறுமொழி யுரைப்பது வினவில் விடையணி யெனப்படும். (வ-று.) தேம்பாவணி. -
"காதலே பாசமாய்க் கால்கை வீக்குத, லாதலே பிரிவுனக் கரியதா மென்பாய், காதலே
பாசமாய்க் காதன் மிக்குளத், தாதலே நாடொறு மிறுக்க லாவதேன். - கொந்திய
விரகநோய் கொழுந்து விட்டெரிந், தந்தில வழலவிப் பரியதா மென்பாய், கொந்தியதீ
யுலை தூண்டிக் கொண்டுநீ, யந்தில நசைக்கற லீட்ட லாவதேன். - நெடிதுநா
ளுற்றநோய் மருந்தி னீர்மையாற், கடிதுநீர் தரலருங் கருமமா மென்பாய், நெடிதுநா
ளுற்றநோய் நீள மீண்டுயிர், கடிதுமாய்ந் தொழிதரக் கடுவுண் பாவதேன்." எ-ம்.
பிறவுமன்ன. எ-று. (38)
 
364. சித்திர வணியே தீட்டிய படவடி
வத்திறத் தனைத்தையு மையென வகுத்தலே.
 
     (இ-ள்.) சித்திர வலங்காரமாமாறுணர்த்துதும். காதலுணர்ந்தவை கண்ணாற்
கண்டாற் போலப் பிறர் தெளிந்துணர்வுற நுட்பவிபரத் தெடு த்தபொருளை விரித்துக்
காட்டல் சித்திர வலங்கார மெனப்படும். - நைடதம். - "அவிர்பூ ணொலியா மலடக்
கினளாய்க், கவர்வான் வரல்கண் டும கன் றிலதாற், றுவர்வாய் மயிறொட் டிடலாகு
மென, நவைதீ ரனமெல்ல நடந் ததுவே." எ-ம். - தேம்பாவணி. - "புலம்பு மோதையி
னொந்தெனப் பொன்னிடச், சிலம்பு மேல்வலச் சீறடி யூன்றிவிற், கலம்புனைந்த
பொற்காலயற் பொன்மலைத், தலம்புனைந்த மின் சாயலொத் தாளரோ. - துகிற் கலாபமூ
டொன்ற விளிம்பெடுத், துகிற்கொ டாலயர் கிள்ளி யுதிர்த்தடு, மகிற்கு லாம்புகை
தூதுவிட் டங்குழன், முகிற்கு லாமினின் மின்முகங் கோட்டுவாள்." எ-ம். பிறவுமன்ன.
இதற்கு மீண்டுச் சித்திர வணியைக் காண்க. அன்றியும், இதற்கு மிதன்மேற் கூறிய
சுவையலங்காரத்திற்கும் வேற்றுமை யாதெனி லது மனத்தினிகழ்ந்த பற்றினை மாத்திரம்
புறத்துத் தோன்றுங் குறிகளால் விரித்துக் காட்டலியல்பாம். அச்சித்திரமோவெனி
லெவ்வகைப் பொருளுங் கண்முன் வைத்தாற்போல நுட்பமாகக் காட்டு
மியல்புடைத்தாகுமென்றுணர்க. - தண்டியலங்காரம். - "கோமூத் திரியே கூட சதுக்க,
மாலை மாற்றே யெழுத்து வருத்தனை, நாக பந்தம் வினாவுத் தரமே, காதை காப்பே
கரந்துறைச் செய்யுள், சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திர, மக்கரச் சுத்தமு மவற்றின்
பால." இது மேற்கோள். எ-று. (39)