"களிப்பனோ வழுவனோ கனிய தானெனை, விளிப்பனோ சுளிப்பனோ விழைந்த வாண்முக, மொளிப்பனோ தழுவிய வுவப்பின் முத்தமு, மளிப்பனோ வுலகெலா மளித்த நாதனே." என்பதைய வினாவணி. பிறவுமன்ன. எ-று. (37) | 363. | வினவில் விடையே வினவினா லெனப்பிறர் மனவுணர் வுரைத்து மறுவுரை கூறலே. | | (இ-ள்.) வினவில்விடை யலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றை யு ரைக்குங்காற் பிறரெதிர் பிறிதொன்றை யுணர்ந்து வினாவினதாகச் சொல்லித் தன்பொருள் விளங்க மறுமொழி யுரைப்பது வினவில் விடையணி யெனப்படும். (வ-று.) தேம்பாவணி. - "காதலே பாசமாய்க் கால்கை வீக்குத, லாதலே பிரிவுனக் கரியதா மென்பாய், காதலே பாசமாய்க் காதன் மிக்குளத், தாதலே நாடொறு மிறுக்க லாவதேன். - கொந்திய விரகநோய் கொழுந்து விட்டெரிந், தந்தில வழலவிப் பரியதா மென்பாய், கொந்தியதீ யுலை தூண்டிக் கொண்டுநீ, யந்தில நசைக்கற லீட்ட லாவதேன். - நெடிதுநா ளுற்றநோய் மருந்தி னீர்மையாற், கடிதுநீர் தரலருங் கருமமா மென்பாய், நெடிதுநா ளுற்றநோய் நீள மீண்டுயிர், கடிதுமாய்ந் தொழிதரக் கடுவுண் பாவதேன்." எ-ம். பிறவுமன்ன. எ-று. (38) | 364. | சித்திர வணியே தீட்டிய படவடி வத்திறத் தனைத்தையு மையென வகுத்தலே. | | (இ-ள்.) சித்திர வலங்காரமாமாறுணர்த்துதும். காதலுணர்ந்தவை கண்ணாற் கண்டாற் போலப் பிறர் தெளிந்துணர்வுற நுட்பவிபரத் தெடு த்தபொருளை விரித்துக் காட்டல் சித்திர வலங்கார மெனப்படும். - நைடதம். - "அவிர்பூ ணொலியா மலடக் கினளாய்க், கவர்வான் வரல்கண் டும கன் றிலதாற், றுவர்வாய் மயிறொட் டிடலாகு மென, நவைதீ ரனமெல்ல நடந் ததுவே." எ-ம். - தேம்பாவணி. - "புலம்பு மோதையி னொந்தெனப் பொன்னிடச், சிலம்பு மேல்வலச் சீறடி யூன்றிவிற், கலம்புனைந்த பொற்காலயற் பொன்மலைத், தலம்புனைந்த மின் சாயலொத் தாளரோ. - துகிற் கலாபமூ டொன்ற விளிம்பெடுத், துகிற்கொ டாலயர் கிள்ளி யுதிர்த்தடு, மகிற்கு லாம்புகை தூதுவிட் டங்குழன், முகிற்கு லாமினின் மின்முகங் கோட்டுவாள்." எ-ம். பிறவுமன்ன. இதற்கு மீண்டுச் சித்திர வணியைக் காண்க. அன்றியும், இதற்கு மிதன்மேற் கூறிய சுவையலங்காரத்திற்கும் வேற்றுமை யாதெனி லது மனத்தினிகழ்ந்த பற்றினை மாத்திரம் புறத்துத் தோன்றுங் குறிகளால் விரித்துக் காட்டலியல்பாம். அச்சித்திரமோவெனி லெவ்வகைப் பொருளுங் கண்முன் வைத்தாற்போல நுட்பமாகக் காட்டு மியல்புடைத்தாகுமென்றுணர்க. - தண்டியலங்காரம். - "கோமூத் திரியே கூட சதுக்க, மாலை மாற்றே யெழுத்து வருத்தனை, நாக பந்தம் வினாவுத் தரமே, காதை காப்பே கரந்துறைச் செய்யுள், சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திர, மக்கரச் சுத்தமு மவற்றின் பால." இது மேற்கோள். எ-று. (39) |
|
|