266தொன்னூல்விளக்கம்
பின்னரும் விரோதிப்பச் சிலேடிப்பது. (வ-று.) "விச்சாதர னெனினு மந்தரத்தின்
மேவானா, லச்சுதன் வண்ணத்தின் மாயனா - னிச்ச, நிறைவான் கலையான களங்கநீதி,
யிறையா னனகனெங் கோன்." என வரும். அவிரோதச் சிலேடையாவது:-
முன்னர்ச் சிலேடித்த பொருளைப் பின்னரும் விரோதியாமற் சிலேடிப்பது.
"சோதி யிரவி கரத்தா னிரவொழிக்கு, மாதிடத் தான் மன்மதனை மாற்றழிக்கு - மீதா,
மனக மதிதோற்றிக் குமுதளிக்குந், தனத னிருநிதிக்கொன் றான்." எனவரும்.
பிறவுமன்ன. எ-று. (42)
 
368. சங்கீரண மென்ப தகும்பல வணிவகை
கொங்கீரத் தொடையெனக் கூட்டிக் கூறலே.
 
     (இ-ள்.) சங்கீரண வலங்கார மாமாறுணர்த்துதும். மேற்கூறிய வல ங்காரங்களிற்
பலவுந் தம்முட்கலந்து கூடிவரத் தாமுரைப்பது சங்கீரண வணி யெனப்படும். (வ-று.)
திருக்காவலூர்க்    கலம்பகம்.   -   வெண்பா.  -   'காந்தடகை கஞ்சத்தாள்
காவிக்கண்ணாம்பல்வாய், வேய்ந்தலர்ந்த காவலூர் மென்கொடையே - யீந்தமது,
வுண்ணளிகாள் சொன்மினீ ரொத்து ளதோ பூவுலகிற், பண்ணளிப்பூத் தீந்தேன்
பனித்து." என்பதிதனு ளுருவகமு மொட்டும் விடையில் வினாவும் பிறிதுரையுமென
விவ்வலங்காரங்கள் கலந்து கூடி வந்தவாறு காண்க. அன்றியும், "தண்டுறை நீர்நின்ற
தவத்தா லளிமருவும், புண்டரிக நின்வதனம் போன்றதா - லுண்டோ,
பயின்றா ருளம்பருமே பான்மொழியாய் பார்மேன், முயன்றான் முடியாப் பொருள்"
எனவரும் - தண்டி யலங்காரம். - "மொழியப் பட்ட வணிபல தம்முட்,டழுவ வுரைப்பது
சங்கீ ரணமே." இது மேற்கோள். எ-று. (43)
 
369. சொல்லணி யாறைந்தும் பொருளணி யையாறும்
புல்லணி யிருவகை புணர்ந்த தொகையென
முத்தமிழ்க் கிவையெலா முகமறை சிகைபொறை
யத்தகைத் தாகா வணிகல னாகக்கொண்
டெந்நூற்கு முதலாம் யுத்தி யஃதில்லா
லந்நூல் பித்த னகங்கை வாளென்ப.
 
     (இ-ள்.) இவ்வதிகாரத்துள் விளக்கிய சொல்லணி முப்பதும் பொரு ளணி முப்பது
மியலிசை நாடக மென்னு முத்தமி ழழகுறப் புனைதற்குரி யன. ஆயினு மொளிதரு
மின்மணி குயிற்றிய வணிகலன் றாமு மிருளுற விருகண் மூடிவரின் மாசென
வகற்றல்போல விவ்வணி வகையானுந் தானுரைக்கும் பொருட்கிரு ளுறாமைபேணி
யின்னதற் கின்ன துரிய தெனவு மின்னதற்குரிய விடமின்ன தெனவு முணர்ந்து கூருதல்
சான்றோர் கடனெனக் கொள்க. அன்றியுந் திருமணி யணிகல னாயினு மொழுங்கு மின்றி
மட்டு மின்றித் திரளாய்த் திரட்டிக் குவித்தது தலைச்சுமையாக வெடுத் தல் சிங்கார
மன்றதுபோல விவ்வகைய வணிகளும் பொருட்குப் பாரமாக்குவிந் தேற்றாம லணிகலனா
யலங்காரந்தோன்ற வரைவு மிகாமலு மொழுங்