267பொருளணியியல்
கு கெடாமலு மவற்றை வகுத்துப் பூணல் வேண்டும். இவற்றிற் கெல்லாம் யுத்தியே
முதற் காரணமாக வேண்டிற் றென்றஃ தில்லாதாயிற் கற்றநூலெலாந் தன்னைக்
கொல்வதற் கேதுவாக நிற்கும் பித்தன்கைப் பிடித்தவாளே யொக்கு மென்மனார்
புலமையின் மிக்கோரெனக் கண்டுணர்க. எ-று. (44)
 
370. எந்நூ னிலையினு மியைபெலா முணர்த்துது
மந்நூ லரியதென வஃ கினு மொறு நூல்
காட்டிய பலநடைக் கடைப்பிடித் தவற்றொடு
கூட்டிய மற்றவை கொள்ப நல்லோரென
வெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யென்றிவண்
வழுத்திய வைம்பொருள் வழக்கஞ் சுருக்கித்
தொன்னூ னடையொடு சிறந்த புறநிலைப்
பன்னூ னடையிற் பழையன கழிதலும்
புதியன புகுதலும் புலமையின் மிக்கோர்
விதியென விம்முறை விரும்பி வழுவில
முந்நூல் விளக்கிய முத்தமிழ்த்
தொன்னூல் விளக்கந் துலங்கிய வாறே.
 
     (இ-ள்.) எவ்வகைநூலினு மவ்வவற்றுரியன வெல்லாவற்றையு முழுதுரைத் திறுவது
முற்றுணர்ந் தோர்க்கு மேலாவருமையாகையி லிங்கணு ரைத்தவைப் பற்றுக்கோடாகக்
கொண்டுரையா தனவு முணர்வ தறிவோர் தொழிலெனக் கொள்க. அன்றியுந்
தொன்னூலை விளக்கிய புதுநூலாக வீண்டுச் சொல்லப்பட்ட வைந்திலக் கணவழியே
தொன்மையிற் செந்தமிழ் நூலில் வழங்கிய சிற்சில வொழிப்பினு மின்று மந்நூலிற்
புதியன சிற்சில விதிப்பினு மவையெலாங் காலவேற்றுமையானும் புறநிலை நூலின் வழி
வந்தமையானும் வழுவென் றிகழப்படாவென நன்னூற் கலைவல்லோன் முதற் றொன்னூற்
புலவருள்ளும் பலரென்றுணர்க. எ-று. (45)
 

இரண்டாமோத்துப் பொருளணியியல். - முற்றிற்று.

.................................

அதிகார மொன்றிற்கு ஓத்திரண்டிற்கு ஆக சூத்திரம். 70.
மேற்கோள் சூத்திரம். 56. ஆக சூ. 126.
அதிகார மைந்திற்கு மேற்கோளோடு கூடிய ஆக சூத்திரம். 829.

.................................

ஐந்தாவது:-அணியதிகாரம்.-முற்றிற்று.