3

சிறப்புப்பாயிரம்.

SPECIAL PREFACE.
1. சொன்னூலடையாத் தொகைக்குணத்தொன்றா
முன்னூறந்த முதல்வனைப்போற்றி
நன்னூலாய்ந்தோர் நவின்றவைம்பொருட்
டொன்னூல்விளக்கமுன் சொற்றுதுமெழுத்தே.
 
     (இ-ள்.) சொல்லத்தகு மெந்நூல்வகையானு மடையப்படாத தேவகுணங்களி
யாவையுந் தொகுத்துளனாகி மிக்காரு மொப்பாருமின்றி யொன்றாய் நிற்குங் கடவு
ளிவனென முதனூலாகிய வேதநூலைத் தந்த முதல்வனைப் பணிந்து நானே வழுவில
வுரைக்கவு மற்றவர் பயனொடு கேட்பவுந் துணைச் செயல் வேண்டி யவனடி
தலைமேலணிந்து போற்றி முன் செந் தமிழ்நூற் கற்றோருரைத்த வெழுத்துச்
சொற்பொருளியாப்பணி யென வைம்பொரு ளிலக்கணங்களை விளக்கத் தொடங்கி
முன்னீண்டெழுத்தியல் பின்னதென வுரைத்துக் காட்டுது மாகையி லிதுசிறப்புப்பாயிரம்.
என்னை, தெய்வ வணக்கமுஞ் செய்பொருள் விளக்கமுஞ் செப்புவதாகுஞ்
சிறப்புப்பாயிரம். ஆதலா லிலக்கிய வகையான் மூத்தோர்புதைத்த வரும் பயனாகிய
பொருளைக் கண்டறிந் தெடுப்பதற் கிலக்கணநூலே விளக்காம். விளக்குதலால்
விளக்கென்னப்பட்டது. ஒளிவிடா மூடினதீபத்தாற் பயனில்லை யென்றதுபோல
முன்னோர்தந்த விலக்கணநூலெலாஞ் செந்தமிழ்ச் சிறந்த மொழியோடு மூடிக்கிடப்ப
விக்காலத் தவ்விளக்கொளியைக் காண்பாரில்லாததற் கொருபயனு மில்லை.
தென்மொழியார்க்கு வட மொழியைத் தானுணர்த்தக் கருதி யவர்முன்னறிந்த
தமிழ்ச்சொற் கொண்டலவோ வடமொழிப்பயனை யுரைத்தல் வேண்டு மாகையான்
மூத்தோர் புதைத்த நூனலம் விளங்கவுங் கல்லாதவரும் பயன்கொண்டுணரவு
நானேயதன் மேற்கவித்த போர்வைநீக்கி யறிஞர் முன் கொளுத்தின தீபமெவர்க்கு
மெறிப்பக் கையிலேந்தினாற்போல வவர்முன் செந்தமிழ் மொழியான் மறைத்த
விலக்கணநூலை யிளந்தமிழுரையால் வெளிப்பொருளாக்க நினைத்தேனாயினு
முன்னோர்தந்த யாவையும் விரித்துரைத்தா லிந்நூலும் பெருகிக் கண்டவ ரஞ்சித்
துணியாரென்று கருதி முனமிகவறிய வேண்டுவ தொன்றைத் தெரிந்து தருவேன். இறகு
முளைத்து முற்றாமுன்னே தாயிரை கொண்டு வருவதன்றியே பறக்கும் பருவம் வந்தபின்
றாமேமெய் வன பறவை யலவோ வவ்வாறிங்ஙன நானு மூத்தோர் சொன்னதை
அவரவர் தாமே கண்டுபிடிக்க வேண்டுவதை மாத்திரம் விதிவிரித்துரைப்பேன்.
அதன்பின் முளைத்த சிறகை விரித்து மேற் பறந்து மேய்ந்தாற் போலவுந் தந்த
பாசத்தைப்பற்றி மலையொத்துயர் மதயானையையேறி நடாத்தினாற்