36தொன்னூல்விளக்கம்

 

டோரெழுத்தியல் பதமாறேழ்சிறப்பின
பகாப்பதமேழும் பகுபதமொன்பது
மெழுத்தீறாகத் தொடருமென்ப."
 
     (இ-ள்.) ஓரெழுத்தொருமொழியு மிருபதவெழுத்தளவு மாமாறுணர்த்துதும்,
பகாப்பத மொவ்வோரெழுத்துப் பதங்களாகவு நிற்கும். அவை எத்துணையோவெனில்,
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ எனத் தனியுயிர்ப் பதமாறும்; மா, மீ, மூ, மே, மை, மோ
எனத்தனிமகரப் பதமாறும்; தா, தீ, தூ, தே, தை எனத்தனித்தகரப் பதமைந்தும்; பா, பூ,
பே, பை, போ எனத் தனிப் பகரத் பதமைந்தும்; நா, நீ, நே, நை, நோ எனத்தனிநகரப்
பதமைந்தும்; கா, கூ, கை, கோ எனத்தனிக் ககரப் பதநாலும்; சா, சீ, சே, சோ எனத்
தனிச்சகரப் பதநாலும்; வா, வீ, வே, வை எனத்தனி வகரப்பதநாலும்; யா, எனத்தனி
யகரப்பதம் ஒன்றும்; ஆக நெட்டெழுத்துத் தனித்து நின்றுவரும் பதம்நாற்பதும்; நொ,
து, எனக்குற்றெழுத்துத் தனித்து நின்றுவரும்பதம் இரண்டுங் கூடிய நாற்பத்திரண்டுஞ்
சிறப்பின. இவையன்றிப் பகரவீகாரமுதலிய சிறப்பில்லனவுஞ்சிலவுள. அன்றியும்,
பலவெழுத்துத் தொடர்ந்துவரும் பதத்துட் பகாப்பதம் இரண்டெழுத்துமுதல்
ஏழெழுத்தீறாகவும் பகுபதம் இரண்டெழுத்துமுதல் ஒன்பதெழுத்தீறாகவுந்
தொடர்ந்துவருமெனக்கொள்க. ஈண்டுயிருமுயிர்மெய்யுமன்றி ஒற்றுமெண்ணுக. (உ-ம்.)
அணி, அறம், அகலம், அருப்பம், அருப்பலம், உத்திரட்டாதி என்பன பகாப்பதங்கள்;
கூனி, கூனன், குழையன், பொருப்பன், ஆரணத்தான், அரங்கத்தான், உத்திராடத்தான்,
உத்திரட்டாதியான், என்பன பகுபதங்கள். அருப்பலம், எ-து. அனிச்சமரம்.
அருப்பம்=ஊர், ஆ=பசு, ஈ=வண்டு, ஊ=ஊன், ஏ=அம்பு, ஐ=அரசன், ஓ=மடை
யடைக்குங்கதவு, மா=அழகு, மீ=மேல், மூ=மூப்பு, மே=ஏவல், மை=கறுப்பு,
மோ=மோவன்னேவல், தா=பகை, தீ=நரகம், தூ=சுத்தம், தே=கடவுள், தை=பூசநாள்,
பா=வெண்பா, பூ=பூமி, பே=நுரை, பை=நிறம், போ=ஏவல், நா=நாக்கு, நீ=முன்னிலை,
நே=அன்பு, நை=ஏவல், நோ=நோய், கா=சோலை, கூ=பூமி, கை=சிறுமை, கோ=கண்,
சா=ஏவல், சீ=இலக்குமி, சே=எருது, சோ=மதில், வா=விளித்தல், வீ=சாவு, வே=ஏவல்,
வை=வைக்கோல், யா=அஃறிணைப் பன்மைவினா, நொ=ஏவல், து=உண், கு, கௌ, வௌ,
பீ எனச் சிறப்பில்லனவுங் கொள்க, எ-று. (8)
 

49.

ஆகுபெயரென்ப தவ்வவமுதற்சினை
கருவிகாரியம் பண்பிவற் றொன்றன்பெயர்
பிறிதொன்றற்குரைக்கும் பெற்றிதானே.
 
     (இ-ள்.) ஆகுபெயரா மாறுணர்த்தும். ஆகு பெயர் ஐவகைப்படும்.
முதற்குச்சினையும், சினைக்குமுதலும், காரணத்திற்குக் காரியமும்,