38தொன்னூல்விளக்கம்
நூலுக்காதலால் காரியவாகுபெயர். திருவள்ளுவர், எ-து. திருவள்ளுவ ரென்னுங்
கருத்தாவின்பெயர் அவராற் சொல்லப்பட்ட நூலுக்காதலால் கருத்தாவாகுபெயர்.
தோகைவந்தாள், எ-து. தோகை யென்னு முவமையின் பெயர் அதை
யுவமானமாகக்கொண்ட பெண்ணிற்காதலால் உவமையாகு பெயர். அன்றியும்,
விடாதவாகுபெயர், விட்டவாகுபெயர், இருமடியாகுபெயர், மும்மடியாகுபெயர்,
நான்மடியாகுபெயர், அடையடுத்தவாகுபெயர், இருபயரொட்டாகுபெயர், எ-ம்.
பெயர்பெற்று வழங்கும். (உ-ம்.) ஆயிரங்குதிரையால் அவ்வூர்கொள்ளை யிடப்பட்டது,
எ-து. குதிரையென்னும் பெயர் தன்னியற் பொருளாகிய பரிமாவை விடாமல்
அவைகளை நடாத்துஞ் சேவகரையும் உணர்த்துதலால் விடாதவாகு பெயர். கங்கைக்கணி
டைச்சேரி, எ-து. கங்கையென்னும்பெயர் தன்னியற்பொருளாகிய வெள்ளத்தைவிட்டு
அதன் கரையை மாத்திரம் உணர்த்துதலால் விட்ட வாகுபெயர். கார், எ-து. காரென்னுங்
கருநிறத்தின்பெயர் மேகத்திற்கு ஆகுபெயராயும், அம்மேகம்பெய்யும் பருவத்திற்கு
இருமடியாகு பெயராயும், அப்பருவத்தில் வளரும்பயிருக்கு மும்மடியாகு
பெயராயும்வரும். நான்மடியாகுபெயர் இவ்வாறு வருதல் காண்க. வெற்றிலை நட்டான்,
எ-து. இலை என்னுஞ் சினைப் பெயர் அடையடுத்து முதற் பொருளுக் கானமையால்
அடையடுத்த வாகுபெயர். வகரக்கிளவி, எ-து. வகரமாகிய அடைமொழியானது கிளவி
என்னும் இயற்பெயர்ப் பொருளை விசேடித்து நிற்காது எழுத்தாகிய ஆகுபெயர்ப்
பொருளை விசேடித்துநிற்க, கிளவி என்பதே ஆகுபெயர்ப்பொருளை யுணர்த்த
அவ்விருபெயரும் ஒட்டி நிற்கையால் இருபெயரொட்டாகு பெயர். விட்டும்விடாத
வாகுபெயர்வருமாறு. (உ-ம்.) அவனிவன், எ-து. அவன் என்னும் பெயர்க்கு
இயற்கைப்பொருள் அவ்விடத்தில் அக்காலத்தோடு கூடினவன், இவன் என்பதற்கு
இயற்கைப்பொருள் இவ்விடத்தில் இக்காலத்தோடு கூடினவன் என்புழி, இவ்விடத்து
இக்காலத்தோடுகூடி இருக்கிறவனிடத்தில் அவ்விடத்து அக்காலத்தோடு கூடுகை
இராதாதலால், அவன் என்னும்பெயர் விசேடணப் பொருளைவிட்டு விசேடியத்தை
மாத்திரம் உணர்த்தலால் விட்டும் விடாதவாகு பெயர். தேவர்முதலிய பெயரை
மக்களுக்கிட்டு வழங்குவனவுங் கொள்க. - நன்னூல். "பொருண்முதலாறோ
டளவைசொற்றாணி, கருவிகாரியங்கருத்தனாதியு, ளொன்றன் பெடுயரானதற்கியை
பிறிதைத், தொன்முறை யுரைப்பன வாகுபெயரே," எ-து. மேற்கோள். எ-று. (9)
 

50.

திணையிரண்டென மக்கடேவர்நரக
ராவருயர்திணை யஃறிணைபிறவே
பாலைந்தாண்பெண் பலருயர்திணையே
யன்றியுமொன்று பலவஃறிணையென்ப.