39சொற்பொதுவியல்
     (இ-ள்.) திணைபாலா மாறுணர்த்துதும். உயர்திணை, எ-ம். அஃறிணை, எ-ம்.
திணை இருவகைப்படும். மக்களும் தேவரும் நரகரும் உயர்திணை. உயிருள்ளனவும்
உயிரில்லனவும் அஃறிணை. இவ்விருதிணையும் ஐம்பாலாகப்பிரிக்கப்படும். ஐம்பாலை
வடநூலார் பிரகிருதி யென்பார். அவை ஆண்பால் பெண்பால் உயர்திணைஒருமை,
பலர்பால் உயர்திணைப் பன்மை, ஒன்றன்பால் அஃறிணைஒருமை, பலவின்பால்
அஃறிணைப்பன்மை. (உ-ம்.) வந்தான், வந்தாள், வந்தார் என்பன உயர்திணைமுப்பால்,
வந்தது, வந்தன என்பன அஃறிணைஇருபால். - நேமிநாதம். "மக்கணரகரே
வானோரெனும் பொருள்க, டொக்கவுயர்திணையாந் தூய்மொழியாய் - மிக்க -
வுயிருள்ளனவு முயிரில்லனவுஞ், செயிரிலஃறிணையாஞ் சென்று." "ஒருவனொருத்திபல
ரொன்று பலவென்று, மருவியபாலைந்தும் வகுப்பின் - பொருவிலா - வோங்கு
திணைப்பாலொரு மூன்றொழிந்தவை, பாங்கிலஃறிணைப்பாலாம்."இவை மேற்கோள்.
எ-று. (10)
 

51.

மூவிடந்தன்மை முன்னிலைபடர்க்கை
தன்மையாகு நான்யான்நாம்யா
முன்னிலைநீநீயிர் நீவிர்நீரெல்லீ
ரேனையபடர்க்கை யெல்லாம்பொதுவே
யானானீதா னொருமையாநாநீர்நீவி
ரெல்லீர்நீயீர்தா மெல்லாம்பன்மை.
 
     (இ-ள்.) மூவிடமாமாறுணர்த்துதும். அவற்றுள் தன்மை. (உ-ம்.) நான், யான், நாம்,
யாம், எ-ம். முன்னிலை. (உ-ம்.) நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர், எ-ம். படர்க்கை. (உ-ம்.)
அவன், அவள், அவர், எ-ம். வரும். எல்லாமென்பது, மூவிடத்திற்கும்
பொதுவெனக்கொள்க. ஒருமையும்பன்மையும் வருமாறு. (உ-ம்.) யான், நான், தன்மை
ஒருமை; யாம், நாம், தன்மைப்பன்மை; நீ முன்னிலை ஒருமை; நீவீர் நீயீர்
முன்னிலைப்பன்மை; அவன், அவள், படர்க்கை ஒருமை; அவர்கள், படர்க்கைப்பன்மை,
தன்மைக்கு உத்தமன், எ-ம். முன்னிலைக்கு மத்தியமன், எ-ம். படர்க்கைக்கு பிரதமன்,
எ-ம். வடநூலார் கூறுவர், எ-று. (11)
 

52.

சாரியையென்ப சார்பதமெழுத்தென்ப
பதத்தொடுவிகுதியும் பதமுமுருபும்
புணர்புளியிடையிற் புணர்வனவவற்றுள்
அ எ உ ஐ குன் அன்னானின்ன
லற்றிற்றத்தந் தம்நம்நும்மெனப்
பதினேழன்றிப் பிறவுமாம்பொதுச்
சாரியையவற்றோர் வழியன்றாகும்விகற்பமே.