(இ-ள்.) திணைபாலா மாறுணர்த்துதும். உயர்திணை, எ-ம். அஃறிணை, எ-ம். திணை இருவகைப்படும். மக்களும் தேவரும் நரகரும் உயர்திணை. உயிருள்ளனவும் உயிரில்லனவும் அஃறிணை. இவ்விருதிணையும் ஐம்பாலாகப்பிரிக்கப்படும். ஐம்பாலை வடநூலார் பிரகிருதி யென்பார். அவை ஆண்பால் பெண்பால் உயர்திணைஒருமை, பலர்பால் உயர்திணைப் பன்மை, ஒன்றன்பால் அஃறிணைஒருமை, பலவின்பால் அஃறிணைப்பன்மை. (உ-ம்.) வந்தான், வந்தாள், வந்தார் என்பன உயர்திணைமுப்பால், வந்தது, வந்தன என்பன அஃறிணைஇருபால். - நேமிநாதம். "மக்கணரகரே வானோரெனும் பொருள்க, டொக்கவுயர்திணையாந் தூய்மொழியாய் - மிக்க - வுயிருள்ளனவு முயிரில்லனவுஞ், செயிரிலஃறிணையாஞ் சென்று." "ஒருவனொருத்திபல ரொன்று பலவென்று, மருவியபாலைந்தும் வகுப்பின் - பொருவிலா - வோங்கு திணைப்பாலொரு மூன்றொழிந்தவை, பாங்கிலஃறிணைப்பாலாம்."இவை மேற்கோள். எ-று. (10) | 51. | மூவிடந்தன்மை முன்னிலைபடர்க்கை தன்மையாகு நான்யான்நாம்யா முன்னிலைநீநீயிர் நீவிர்நீரெல்லீ ரேனையபடர்க்கை யெல்லாம்பொதுவே யானானீதா னொருமையாநாநீர்நீவி ரெல்லீர்நீயீர்தா மெல்லாம்பன்மை. | | (இ-ள்.) மூவிடமாமாறுணர்த்துதும். அவற்றுள் தன்மை. (உ-ம்.) நான், யான், நாம், யாம், எ-ம். முன்னிலை. (உ-ம்.) நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர், எ-ம். படர்க்கை. (உ-ம்.) அவன், அவள், அவர், எ-ம். வரும். எல்லாமென்பது, மூவிடத்திற்கும் பொதுவெனக்கொள்க. ஒருமையும்பன்மையும் வருமாறு. (உ-ம்.) யான், நான், தன்மை ஒருமை; யாம், நாம், தன்மைப்பன்மை; நீ முன்னிலை ஒருமை; நீவீர் நீயீர் முன்னிலைப்பன்மை; அவன், அவள், படர்க்கை ஒருமை; அவர்கள், படர்க்கைப்பன்மை, தன்மைக்கு உத்தமன், எ-ம். முன்னிலைக்கு மத்தியமன், எ-ம். படர்க்கைக்கு பிரதமன், எ-ம். வடநூலார் கூறுவர், எ-று. (11) | 52. | சாரியையென்ப சார்பதமெழுத்தென்ப பதத்தொடுவிகுதியும் பதமுமுருபும் புணர்புளியிடையிற் புணர்வனவவற்றுள் அ எ உ ஐ குன் அன்னானின்ன லற்றிற்றத்தந் தம்நம்நும்மெனப் பதினேழன்றிப் பிறவுமாம்பொதுச் சாரியையவற்றோர் வழியன்றாகும்விகற்பமே. | |
|
|