எ-ம். அவற்றுள் ஒரு செடியைமாத்திரம் உணர்த்துங்கால் காரணவிடுகுறி, எ-ம். கூறுவர். கறுப்பன், எ-து. கறுப்பையுடையவனை உணர்த்துங்கால் காரணக்குறி, எ-ம். கறுப்பில்லானை உணர்த்துங்கால் இடுகுறி, எ-ம். கூறுவர். வடநூலார் இடுகுறியை ரூடி, எ-ம். காரணக்குறியை, யோகம், எ-ம். காரணவிடுகுறியை, யோகரூடி, எ-ம். கூறுவர். இவற்றைத் தனித்தனி விளக்குதும், எ-று. (2) | 55. | வேற்றுமைப்படுத்தலின் வேற்றுமையாமிவை பெயர்ஐஆல்குஇன் அதுகண்விளியெட்டே. | | (இ-ள்.) பெயர்க்குரிய வேற்றுமையாமாறுணர்த்துதும். எவ்வகைப் பொருளும் வேறுபட அதன்பெயரீறாகவரும் உருபெல்லாம் வேற்றுமை யெனப்படும். இவற்றை வடநூலார் பிரத்தியமென்பர். அவையே பெயர் முதற் சூத்திரத்திற்காட்டிய எட்டெனக்கொள்க, எ-று. (3) | 56. | எழுவாயுருபா மியல்பிற்பெயரே மீண்டதன்பொருளாம் வினைபெயர்வினாவே. | | (இ-ள்.) முதல்வேற்றுமை யிலக்கணமாமாறுணர்த்துதும். முதல்வேற்றுமைக்கு உருபாவது, திரிபின்றித்தன்னியல்பாக நிற்கும் பெயர்தானேயாம். இதற்குப்பொருளாவன:- வினையைக்கொள்ளலும், பெயரைக்கொள்ளலும், வினாவைக்கொள்ளலும், இதற்குப்பொருள்களாம். (உ-ம்.) சாத்தன் வந்தான், கொற்றன்வாழ்க, அவன்பெரியன், என்பவை வினைகொளவந்தன. அரசனவன், ஆவொன்று, என்பவை பெயர்கொளவந்தன. அவன்யாவன், அவள்யாவள், என்பவை வினாக்கொள வந்தன. பிறவுமன்ன. வினைமுதல், கருத்தா, செய்பவன், இவை பொருபொருட்கிளவி. வடநூலார் கருத்தாவென்பர். வினைமுதற்பொருளாவது, தன்புடைபெயர்ச்சியாகிய செயலிற்சு தந்தரமுடையபொருளாம். வேந்தன்வந்தான் என்புழி, வேந்தன் என்கிற பெயர்ப்பொருளாகிய ஒருவன் தன்புடைபெயர்ச்சியாகிய வருதற்றொழிலிற் சுதந்தரமுடைய பொருளாய் வினைமுதலாதல்காண்க. இம்முதல் வேற்றுமைக்கு ஐம்முதலிய உருபுகளின்றாயினுஞ் சிறுபான்மை ஆனவன், ஆகின்றவன், ஆவான் முதலாக ஐம்பாலிலும்வருகிற சொல்லுருபுகளுண்டு. (உ-ம்.) கொற்றனானவன், கொற்றியானவள், கொற்றரானவர், கோவானது, கோக்களானவை, எனச் சிலவிடங்களில்வரும். அன்றியுஞ் சாத்தனென்பவன் என வருதலுமறிக, எ-று. (4) | 57. | "இரண்டாவதனுரு பையேயதன்பொரு ளாக்கலழித்த லடைதனீத்த லொத்தலுடைமை யாதியாகும்." | |
|
|