அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம். பொருளையுடையான் என்புழி, ஈட்டல், கூட்டன்முத லிய செயல்செய்பவன்றொழிலாம். தனதாகக்கொள்ளுதன் முதலியகாரி யம் அத்தொழிலின்பயனாம். அப்பயனுக்கிடம் பொருளாதலால் பொருள் செயப்படுபொருளாம். அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம். செயப்படுபொருண் மூவகைப்படும். (உ-ம்.) சோற்றை யுண்டான், எ-து. கருத்துண்டாய்ச் செயப்படுவது. சோற்றைக்குழைத்தான், எ-து. கருத்தின்றிச்செயப்படுவது. பதரையுநெல்லையும் பணத்திற்குக் கொண்டான், எ-து. இருமையுமாய்ச் செயப்படுவது, எ-ம். வரும். உண்டலைச்செய்தான், எ-து. அகநிலையாயிற்று. தன்னைப்புகழ்ந்தான், எ-து. செயப்படுபொருளே கருத்தாவாயிற்று. இச்செயப்படுபொருள் ஐயுருபோடன்றி மற்றையுருபுகளோடும்வரும். (உ-ம்.) அடி சிலடப்பட்டது, எழுவாய்; அரிசியாலடிசிலாக்கினான், ஆல்; மலையொடொக்குமுலை, ஒடு; இவட்குக்கொள்ளுமிவ்வணிகலன், கு; பழியினஞ்சும்பாவலன், இன்; பிள்ளைத்தமிழது குற்றங்கூறினார், அது; தலைவன்கட்சார்ந்தாள், கண்; எ-ம். வரும். செயப்படுபொருள்குன்றாத தன்வினைகளினும் பிறவினைகளினும் இரண்டுருபுக ளிணைந்திரண்டு செயப்படுபொருள் வருதலுமுண்டு. (உ-ம்.) பசுவினைப்பா லைக்கறந்தான், யானையைக் கோட்டைக்குறைத்தான், எ-ம். பகைவரைச் சிறைசாலையை யடைவித்தான், சாத்தனைச் சாதத்தையுண்பித்தான், எ-ம். வரும்; முறையேகாண்க. செயப்படுபொருளை வடநூலார் கர்மம், என்பர். காரியம், எ-ம். வரும். ஆதியென்றமிகையால் பலவகை வினைகளும் இதற்குப் பொருளாம். (உ-ம்.) வீட்டைவிரும்பினான், நூற்பொருளையறிந்தான், என்பவற்றுள் விரும்பலும், அறிதலு முதலிய வினைமுதற் றொழில்களுக்கு வீடும், பொருளும், விடயமாயினும் இவையுஞ் செயப்படு பொருளாம். மற்றை வேற்றுமைகளு மிவ்வாறறிக, எ-று. (5) | 58. | "மூன்றாவதனுரு பாலானோடொடு கருவிகருத்தா வுடனிகழ்வதன்பொருள்." | | (இ-ள்.) மூன்றாம்வேற்றுமை இலக்கணமாமாறுணர்த்துதும். மூன்றாம் வேற்றுமைக்கு உருபு, ஆல், ஆன், ஓடு, ஒடு இந்நான்குமாம். இதற்குப்பொருள்:- கருவிப்பொருளும், கருத்தாப்பொருளும், உடனிகழ்ச்சிப்பொருளுமாம். கருவி காரணம், எ-து. ஒருபொருட்கிளவி. கருவிப்பொருள் இருவகைப்படும். (உ-ம்.) மண்ணாற்குடத்தை வனைந்தான், கண்ணாற்கண்டான், உணர்வினாலுணர்ந்தான், இவை முதற்கருவிப்பொருள். தண்டசக்க ரத்தாற் குடத்தைவனைந்தான், நாழியாலளந்தான், இவை துணைக்கருவிப் பொருள். கருத்தாப்பொருள் இருவகைப்படும். (உ-ம்.) அரசனாற் கோயிற் கட்டுவிக்கப்பட்டது, தேர்செய்விக்கப்பட்டது, இவை ஏவுதற் கருத்தாப் பொருள், தச்சனாலாகிய கோயில், கோட்டை, இவை இயற்றுதற் கருத்தாப் பொருள். |
|
|