46தொன்னூல்விளக்கம்
வடநூலார் எழுவாய்க் கருத்தனை அபியிதகருத்தன், எ-ம். மூன்றனுருபின் கருத்தனை
அநபியிதகருத்தன், எ-ம். ஏவுதற்கருத்தனை எதுகருத்தன், எ-ம். இயற்றுதற்கருத்தனை
பிரயோச்சியகருத்தன், எ-ம். கூறுவர். உலகத்தோடொப்ப வொழுகல், தவத்தொடு
தானஞ்செய்வார், கனலொடுபுகை, குடையொடுநிழல், நூலொடுபுகழ், இவை
உடனிகழ்ச்சிப்பொருள். ஆல், ஆன், இவ்வுருபுகட்குக் கருத்தாவுங் காரணமுஞ்
சிறந்தனவாம். ஒடு, ஓடு இவ்வுருபுகட்கு உடனிகழ்ச்சிப் பொருள் சிறந்தனவாம்.
அன்றியும் ஆல், ஆன், நிற்குமிடங்கட்கு கொண்டு, எ-து. உருபாம். (உ-ம்.)
வாள்கொண்டு வெட்டினான், எனவரும். ஒடு, ஓடு, நிற்குமிடங்கட்கு உடன், எ-து.
உருபாம். (உ-ம்.) மகளுடன் மருமகன்வந்தான். எனவரும். ஆல், ஆன், உருபுகள்
தொறுவெனும் பொருளையுந்தரும். (உ-ம்.) ஊராலோராலயம், எ-து.
ஊர்தோறுமொவ்வோராலயம், என வரும். ஆல் ஆன், சினைப்பொருளாகவும்
வேற்றுமை செய்யும். (உ-ம்.) கண்ணாற்குருடன், காலால்முடவன், என வரும். ஒடு, ஓடு,
நால்வகையாகவேற்றுமை செய்யும். (உ-ம்.) தொடியொடு தொல்கவின்வாடியதோள், எ-து.
வேறு வினையுட னிகழ்ச்சிப்பொருள். மலையொடு பொருதமாலியானை, எ-து.
வினையில்பொருள். எழுத்தொடுபுணர்ந்தசொல், எ-து. ஒற்றுமைப்பொருள். பாலொடு
தேன்கலந்தற்றே, எ-து. கலப்புறுபொருள். சிறுபான்மை கருவிப் பொருளானது
எழுவாயுருபோடும், நான்கனுருபோடும், ஐந்தனுருபோடும், ஆறனுருபோடும்வரும்.
(உ-ம்.) கண்ணானதுகாணும், எழுவாய்; கண்ணிற்குக்காணலாம், கு; கண்ணிற்காணலாம்,
இன்; கண்ணதுகாட்சி, அது; என வரும். கருவியை வடநூலார் கரணம் என்பர், எ-று.
(6)
 

59.

"நான்காவதற்குரு பாகுங்குவ்வே
கொடைபகைநோச்சி தகவதுவாதல்
பொருட்டுமுறையாதியி னிதற்கிதெனல்பொருளே."
 
     (இ-ள்.) நான்காம் வேற்றுமையிலக்கணமாமாறுணர்த்துதும். நான்
காம்வேற்றுமைக்கு உருபு கு ஒன்றேயாகும். இதற்குப்பொருள்:- கொடை, பகை, நேர்ச்சி,
தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, இவைமுதலியனவாம். (உ-ம்.) புலவற்குப்
பொன்னைக்கொடுத்தான் என்புழி, பொன் கொடைப்பொருள், அதனோடு
சம்பந்தமுடைய பொருள் புலவனாதலால் புலவன் கோளிப்பொருள். கொடுத்தலும்
ஏற்றலும் பலவகைப்படும். (உ-ம்.) அரசனுக்கமைச்ச னணிகொடுத்தான், எ-து.
இழிந்தோனளித்தல். அமைச்சனுக் கரசனாடை யளித்தான், எ-து. உயர்ந்தோனளித்தல்.
பாண்டியனுக்கு விருந்திட்டான் சோழன், எ-து. ஒப்போனளித்தல். கள்ளனுக்குக்
கசையடிகொடுத்தான், எ-து. வெறுப்பாயளித்தல். கணவனுக் கின்பங் கொடுத்தாள், எ-து.
விருப்பாயளித்தல். மருமகனுக்கு மகளைக் கொடுத்தான், எ-து. வழக்கத்தி லளித்தல்.
மகனுக் கரசு கொடுத்தான், எ-து. உரிமைலளித்தல்.