47பெயர். - வேற்றுமையியல்
அரசனுக்குத் திறை கொடுத்தான். எ-து. அச்சத்தி லளித் தல். தாய்தந்தைக்ககுத்
திவசங்கொடுத்தான், எ-து. பாவனையளித்தல். இவை கொடைப்பொருள். தனக்குத்தான்
சோறிட்டான், எ-து. ஈவோனற்றல். குருவிற்குக் கொடைகொடுத்தான், எ-து.
மிக்கோனற்றல். சோற்றிற்கு நெய்விட்டான், எ-து. உணர்வின்றியேற்றல். ஆவிற்கு
நீர்விட்டான், எ-து. கேளாதேற்றல். இரப்போர்க்கீந்தான், எ-து. கேட்டேயேற்றல்.
மாணாக்கனுக்கு கறிவுகொடுத்தான், எ-து. எலாதேற்றல். இவையேற்றல். மக்கட்குப் பகை
வெகுளி, தன்னோய்க்குத் தானே மருந்து, பாம்புக்குப்பகை கருடன், எலிக்குப்பகை
பூனை, இவை பகைப் பொருள். அறத்திற்குப் பொருணேர்ந்தான், விளக்கிற்குநெய்,
இவை நேர்ச்சிப் பொருள். புலவர்க்குரித்தே புகழ், அறத்திற்குத்தக்கதருள், இவை
தகுதிப்பொருள். ஆடைக்குநூல், ஆழிக்குப்பொன், இவை முதற்காரணகாரியமாகிய
அதுவாதற் பொருள். முதற்காரணம் ஆதிகாரணம், சமவாயிகாரணம், முக்கியகாரணம்,
என்பன ஒரு பொருட் கிளவி. கூலிக்குழைத்தான், கூழிற்குக்குற்றேவல், இவை
நிமித்தகாரண காரியமாகிய பொருட்டுப் பொருள். எனக்குத்தாய், உனக்குமகள்,
இவைமுறைப்பொருள். ஆதியென்ற மிகையால் கைக்குக்கடகம், கரும்பிற்குவேலி,
மயிருக்கெண்ணெய், உயிருக்குண்டி, நாய்க்குநட்பு, தாய்க்குக்காதல், எனக்குநல்லவன்,
அரசற்கமைச்சன், ஊருக்குப் பொய்கையணி, பொய்கைக்கணி கான்யாறு, எ-ம். வரும்.
சிறுபான்மை கோடற்பொருளானது எட்டாம்வேற்றுமையொழிந்த மற்
றையுருபகளோடும்வரும். (உ-ம்.) இரப்பவரென்பெறினுங்கொள்பவர், எழுவாய்;
செய்யவடவ்வையைக் காட்டிவிடும், ஐ; நாகராற்பலி, ஆல்; நாகரினன்பு செய்தான், இன்;
நாகரது பலி, அது; ஊர்க்கட்சென்றான், கண்; என வரும். இதனைவடநூலார்
சம்பிரதானம் என்பர், எ-று. (7)
 

60.

"ஐந்தாவதனுரு பில்லுமின்னு
நீங்கலொப்பெல்லை யேதுப்பொருளே."
 
     (இ-ள்.) ஐந்தாம் வேற்றுமை யிலக்கண மாமாறுணர்த்துதும். ஐந்
தாம்வேற்றுமைக்கு உருபு இல், இன், என இவ்விரண்டுமாகும். இதற்குப் பொருள்:-
நீக்கப்பொருளும், ஒப்புப்பொருளும், எல்லைப்பொருளும், ஏதுப் பொருளுமாம். (உ-ம்.)
ஊரினீங்கினான், எ-ம். குறள் - தலையினிழிந்த மயிரனையர்மாந்தர்
நிலையினிழிந்தக்கடை - எ-ம். இவை நீக்கப்பொருள். காக்கையிற்கரிதுகளம்பழம், எ-ம்.
குறள்.-'சிறுமைபலசெய்து சீரழிக்குஞ்சூதின் வறுமைதருவ தொன்றில்.' எ-ம். இவை
ஒப்புப்பொருள். அதனின் மெல்லிதிது, அதனிற்பெரிதிது, இவை ஒப்பொடுநீங்கல்.
திருக்காவலூரின் மேற்கு, யாற்றின்வடக்கு, மதுரையின் வடக்குச் சிதம்பரம், இவை
எல்லைப் பொருள். அறிவிற்பெரியன், பொருளிலெளியன், எ-ம். இவைஏதுப்பொருள்.
சிறுபான்மை இவ்வைந்தனுருபு மூன்றனுருபோடும் நான்கனுருபோடும் வரும்.