48தொன்னூல்விளக்கம்
(உ-ம்.) பாம்பினிற்கடைந்தகடல், வாளின்வெட்டினான், ஆல்; சிதலெறும்பாதி
மூக்கறிவின் மூவறிவுயிர், கு; எ-ம். வரும். மதுரை யைநீங்கினான் என
இரண்டனுருபுபோடு நீக்கப் பொருளும், புதுவைக்குத் தெற்குப் புலியூர் என
நான்கனுருபோடு எல்லைப்பொருளும், வந்தவாறறிக. வடநூலார் நீக்கப்பொருளை
அபாதானம், எ-ம். எல்லைப்பொருளை அவதி, எ-ம். கூறுவர். சிறுபான்மை இல், இன்,
இவ்வுருபுகளோடு உம் சேர்ந்துவரும். (உ-ம்.) அவனிலும் பாமரன், இவனினும் பெரியன்,
என வரும். இல், இன் எல்லைப் பொருளில் ஐ யுருபோடு காட்டிலும்
பார்க்கிலுஞ்சேர்ந்து சொல்லுருபுகளாகவரும். (உ-ம்.) அவனைக் காட்டிலும்
வல்லவனிவன், இவனைப் பார்க்கினு மூடனவன், எனவரும். நீக்கப்பொருளில் இல், இன்
உருபுகளின்மேல், நின்று, இருந்து, தனித்தும் உகரம்பெற்றுஞ்சொல்லுருபுகளாகவரும்.
(உ-ம்.) ஊரினின்று நீங்கினான், ஊரிலிருந்துபோனான், ஊரினின்றும்வந்தான்,
ஊரிலிருந்துபோனான், எ-ம். வரும், எ-று. (8)
 

61.

ஆறனொருமைக் கதுவுமாதும்
பன்மைக்கவ்வு முருபாம்பண்புறுப்
பொன்றன்கூட்டம் பலவினீட்டந்
திரிபினாக்கஞ்சேர்ந்த தற்கிழமையும்
பிறிதின்கிழமையும் பேணுதல்பொருளே.
 
     (இ-ள்.) ஆறாம்வேற்றுமை யிலக்கண மாமாறுணர்த்துதும். ஆறாம் வேற்றுமைக்கு
உருபு அது, ஆது, அ இம்மூன்றுமாகும். ஒருமைப் பெயர்க்கு அது, ஆது, உருபாம்.
பன்மைப் பெயர்க்கு அ உருபாம். இதற்குப்பொருள்:-குணம், உறுப்பு, ஒருபெருட்டிரட்சி,
பலபொருட்டிரட்சி, ஒன்றுதிரி ந்தொன்றாதல் ஆகியதற்கிழமை ஐந்தும்,
பிறிதின்கிழமைமூன்றும், இவை முதலியனவாம். தன்னோடொற்றுமை யுடையபொருள்
தற்கிழமை. தன்னின்வேறாகியபொருள் பிறிதின்கிழமை. கிழமை எ-து. உரிமை. (உ-ம்.)
எனதுகை, எனாதுகை, நினதுநிலம், நினாதுநிலம், ஒருமையில் அது ஆது வந்தன.
எனகைகள், தனதாள்கள், புலியநகங்கள், பன்மையில் அ வந்தது. சிந்தாமணி, "நுனசீறடி
நோவநடந்து செலே, லெனதாவியகத் துறைவாயெனுநீ, புனைதாரவனே பொய்யுரைத்
தனையால், வினையே னொழியத் தனியேகினையே." எ-ம். வரும். தற்கிழமை, (உ-ம்.)
காக்கையதுகருமை, கொக்கதுவெண்மை, இவைபண்புத்தற்கிழமை. சாத்தனதுகை,
யானையதுகோடு, செய்யுளதடி, இவை உறுப்புத்தற்கிழமை, நெல்லது குப்பை,
மாந்தரதுதொகுதி, எள்ளதீட்டம், இவை ஒன்றன் கூட்டத்தற்கிழமை. மஞ்சளதுபொடி,
நெல்லது சோறு, இவை ஒன்றுதிரிந் தொன்றாயதன்றற்கிழமை. சிலநூலார்
சாத்தனதுசெலவு, வருகை, இருக்கை, இவை தொழிற்றற்கிழமை என்பர். பிறிதின்கிழமை.
(உ-ம்.) சாத்தனதுதாடை, அரசனதுதாழி, ஆவினதுகன்று,

* நன்னூல் 300-ம் சூத்திரத்தைக்காண்க.