(உ-ம்.) பாம்பினிற்கடைந்தகடல், வாளின்வெட்டினான், ஆல்; சிதலெறும்பாதி மூக்கறிவின் மூவறிவுயிர், கு; எ-ம். வரும். மதுரை யைநீங்கினான் என இரண்டனுருபுபோடு நீக்கப் பொருளும், புதுவைக்குத் தெற்குப் புலியூர் என நான்கனுருபோடு எல்லைப்பொருளும், வந்தவாறறிக. வடநூலார் நீக்கப்பொருளை அபாதானம், எ-ம். எல்லைப்பொருளை அவதி, எ-ம். கூறுவர். சிறுபான்மை இல், இன், இவ்வுருபுகளோடு உம் சேர்ந்துவரும். (உ-ம்.) அவனிலும் பாமரன், இவனினும் பெரியன், என வரும். இல், இன் எல்லைப் பொருளில் ஐ யுருபோடு காட்டிலும் பார்க்கிலுஞ்சேர்ந்து சொல்லுருபுகளாகவரும். (உ-ம்.) அவனைக் காட்டிலும் வல்லவனிவன், இவனைப் பார்க்கினு மூடனவன், எனவரும். நீக்கப்பொருளில் இல், இன் உருபுகளின்மேல், நின்று, இருந்து, தனித்தும் உகரம்பெற்றுஞ்சொல்லுருபுகளாகவரும். (உ-ம்.) ஊரினின்று நீங்கினான், ஊரிலிருந்துபோனான், ஊரினின்றும்வந்தான், ஊரிலிருந்துபோனான், எ-ம். வரும், எ-று. (8) | 61. | ஆறனொருமைக் கதுவுமாதும் பன்மைக்கவ்வு முருபாம்பண்புறுப் பொன்றன்கூட்டம் பலவினீட்டந் திரிபினாக்கஞ்சேர்ந்த தற்கிழமையும் பிறிதின்கிழமையும் பேணுதல்பொருளே. | | (இ-ள்.) ஆறாம்வேற்றுமை யிலக்கண மாமாறுணர்த்துதும். ஆறாம் வேற்றுமைக்கு உருபு அது, ஆது, அ இம்மூன்றுமாகும். ஒருமைப் பெயர்க்கு அது, ஆது, உருபாம். பன்மைப் பெயர்க்கு அ உருபாம். இதற்குப்பொருள்:-குணம், உறுப்பு, ஒருபெருட்டிரட்சி, பலபொருட்டிரட்சி, ஒன்றுதிரி ந்தொன்றாதல் ஆகியதற்கிழமை ஐந்தும், பிறிதின்கிழமைமூன்றும், இவை முதலியனவாம். தன்னோடொற்றுமை யுடையபொருள் தற்கிழமை. தன்னின்வேறாகியபொருள் பிறிதின்கிழமை. கிழமை எ-து. உரிமை. (உ-ம்.) எனதுகை, எனாதுகை, நினதுநிலம், நினாதுநிலம், ஒருமையில் அது ஆது வந்தன. எனகைகள், தனதாள்கள், புலியநகங்கள், பன்மையில் அ வந்தது. சிந்தாமணி, "நுனசீறடி நோவநடந்து செலே, லெனதாவியகத் துறைவாயெனுநீ, புனைதாரவனே பொய்யுரைத் தனையால், வினையே னொழியத் தனியேகினையே." எ-ம். வரும். தற்கிழமை, (உ-ம்.) காக்கையதுகருமை, கொக்கதுவெண்மை, இவைபண்புத்தற்கிழமை. சாத்தனதுகை, யானையதுகோடு, செய்யுளதடி, இவை உறுப்புத்தற்கிழமை, நெல்லது குப்பை, மாந்தரதுதொகுதி, எள்ளதீட்டம், இவை ஒன்றன் கூட்டத்தற்கிழமை. மஞ்சளதுபொடி, நெல்லது சோறு, இவை ஒன்றுதிரிந் தொன்றாயதன்றற்கிழமை. சிலநூலார் சாத்தனதுசெலவு, வருகை, இருக்கை, இவை தொழிற்றற்கிழமை என்பர். பிறிதின்கிழமை. (உ-ம்.) சாத்தனதுதாடை, அரசனதுதாழி, ஆவினதுகன்று,* நன்னூல் 300-ம் சூத்திரத்தைக்காண்க. |
|
|