5

முதலாவது:-
எழுத்ததிகாரம்.
PART I. - LETTERS
முதலாவதெழுத்தியல்.
Chapter I - Nature of Letters
 

2.

தோற்றமும்வகுப்புந் தோன்றும்விகாரமுஞ்
சாற்றுளித்தோன்றுந் தானெழுத்தியல்பே.
 
     (இ-ள்.) எழுத்திலக்கண மாமாறுணர்த்துதும். எழுத்தின் றோற்றமும் வகுப்பும்
விகாரமும் என்றிம்மூன்றனுள் எழுத்து வகைப்பாடெல்லா மடங்கும். என்னை,
தோற்றமென்புளி, எழுத்துப்பிறக்குமிடமும்,முறையும், எண்ணுமெனவும்; வகுப்பென்புளி,
முதல்சார்புயிர் மெய்முதலியகூறுபாடெனவும்; விகாரமென்புளி, பதத்திலும்புணர்பிலும்
வருந்திரிபாக்கமுதலியவேறு பாடெனவுந்தோன்றும், எ-று.உளி எ-து.இடம்,
உழியென்பாருமுளர். (1)
 
3. உயிரிடை யினமிடறுரம்வலியுச்சிமெலியியை
முதலிடமாயிதழ் மூக்கணம்பன்னா
வைந்துணையிடத்தா மக்கரப்பிறப்பே.
 
     (இ-ள்.) எழுத்தின்றோற்ற மாமாறுணர்த்துதும். உதானவாயுவின் காரணமாக
எழுத்தெல்லாம் பிறக்குமாயினும் அவற்றுட்பன்னீருயிர்க்கும், ஆறிடை யினத்திற்கும்,
மிடறேமுதலிடமாகவும்; ஆறுவல்லினத்திற்கும், நெஞ்சே முதலிடமாகவும்;
ஆறுமெல்லினத்திற்கும், உச்சியேமுதலிடமாகவும்; அன்றி உதடும், மூக்கும், அண்ணமும்,
பல்லும், நாவும் என விவ்வைந்தே துணையிடமாகவும்; எழுத்தெல்லாம்
பிறக்குமென்றுணர்க. ஆயினும் இவற்றையும் எழுத்தின்முறையையும் எண்ணையும்
உணர்த்துவ துறுபயனின்றிப் பொழுதழிவாகையானும், இனிச் சிலவுரைப்பது முறையா
மென்றமையானும், இங்ஙன மவற்றைநீக்கி எழுத்தின்வகுப்பும் விகாரமுமென
மற்றிரண்டையும் விளக்கிக்கூறுதும். இதன் விரிவையுணரவேண்டில் தொல்காப்பியத்துட்
காண்க. அதனினும்விரிவு பேரகத்தியம் நன்னூல், எ-று. (2)

முதலாவதெழுத்தின் தோற்றம். - முற்றிற்று.