50தொன்னூல்விளக்கம்
முன், காட்டுச்சாரோடுங்குறுமுயால்-சார், கைவலத்துள்ளது கொடுக்கும் - வலம்,
இல்லிடப்பரத்தை - இல், தன்மேற்கடுவரை நீரிற்கடுத் துவரக்கண்டும் - மேல்,
பிண்டிக்கண்ணார் நிழற்கீழெந்தமடிகள் - கீழ், எயிற்புடைநின்றான் - புடை,
சுரன்முதல்வந்தவுரன்மாய்மாலை-முதல், காதலிபின்சென்றதம்ம-பின்,
நாம்பாடணையாதநாள் - பாடு, கல்லளைச்சுனைநீர் - அளை, தோழிக்குரியவை
கோடாய்தேத்து - தேம், அவனுழைவந்தான் - உழை, நின்றதோர் நறவேங்கை
நிழல்வழியசைந்தன்ன-வழி, உறையுழியோலைபோல-உழி, குயில்சேர் குளிர்காவுளி
சேர்ந்துறையும்-உளி, முல்லையங்குவட்டுள்வாழும்-உள், பயன் சாரப்பண்பில்
சொற்பல்லாரகத்து - அகம், செல்லு மென்னுயிர்ப் புறத்தி றுத்தமருண்மாலை - புறம்,
ஊரிலிருந்தார்-இல், கண்ணகன்ஞாலம், வீட்டின் புறத்திலிருந்தான், எ-ம். வரும்.
இவ்வுருபுகட்கு இன்னும் வேறுபொருளுண்டு. கூட்டிப்பிடிக்குங் கூட்டமும்,
பிரித்துக்கூட்டுங் கூட்டமும், இருவரின் முடியுமொருவினைத் தொழிலுமாகிய
விடமில்லாத விடங்களும் அவ்வுருபுகளின் பொருளாம் (உ-ம்.) குறிலைந்தனுள் அ, இ,
உ, என்னு மிம்மூன்றுஞ் சுட்டு. அவருள் வல்லவனிவன் - கூட்டிப்பிரிக்குங் கூட்டம்,
விஞ்சையில்லாதவனை விலங்கினுள்வைத் தெண்ணப்படும் - வித்தையுள்ளவன்
விண்ணவருள்வைத் தெண்ணப்படும் - பிரித்துக்கூட்டுங் கூட்டம், அவனுமிவனும்
போர்செய்தற்கண் மழைபெய்தது - சூதாடற்கட்டூக்கம் வந்தது - இருவரின்
முடியுமொருவினைத் தொழில், எ-ம். வரும். சிறுபான்மை இவ்விடப்பொருள்
எழுவாயுருபோடும் இரண்டனுருபோடும் நான்கனுருபோடும் வரும். (உ-ம்.)
தூண்போதிகையைத் தொட்டது - எழுவாய், தூணைச்சார்த்தான் - ஐ, இன்றைக்கு
வருவான். கு - எ-ம். வரும். இதனைவட நூலார் அதிகரணம் என்பர். எ-று. (10)
 

63.

அதனோடைம்முத லாறுமேற்கும்.
 
     (இ-ள்.) இனிச்சில விகற்ப மாமாறுணர்த்துதும். அதுவென்பது ஆறாம்
வேற்றுமைக்கு உருபாமெனினும் அதுவே முதற்பெயரோடு கூடி அன்சாரியை பெற்று
ஐம்முதல் கண்ணீறாகிய ஆறுருபுகளோடு புணர்ந்து வருமெனக்கொள்க. (உ-ம்.)
சாத்தனதனை, சாத்தனதனால், சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனது, சாத்தனதன்கண்,
எ-ம். வரும். நன்னூல். "ஆறனுருபுமேற்குமவ்வுருபே." எ-து. மேற்கோள். எ-று. (11)
 

64.

ஐஆன்குச்செய் யுட்கவ்வுமாகு
மாகாவஃறிணைக் கானல்லாத.
 
     (இ-ள்.) சிலவேற்றுமையுருபு திரிதற்குப் புறனடையா மாறுணர்த்துதும்,
செய்யுளிடத் துயர்திணைப் பெயரொடுவந்த ஐ ஆன் கு என்னு மூன்று வேற்றுமை
யுருபுகடிரியவும் பெறும், திரிந்துழி அகரமா மெனக் கொள்க. (உ-ம்.)
காவலோனைக்களிறஞ்சும், எ-து. காவலோனக்களிறஞ்சும்,