51பெயர். - வேற்றுமையியல்
எ-ம். புலவரானுரைத்த நூல், எ-து. புலவரானவுரைத்த நூல், எ-ம். கடிநிலையின்றே
யாசிரியற்கு, எ-து. ஆசிரியற்க, எ-ம். வரும். அஃறிணைப்பெயர்களோடோவெனில்,
ஆனெனு முருபு திரியவும் பெறும், ஒழிந்த ஐயும் குவ்வுந்திரியா. (உ-ம்.) புள்ளினா
னெழுந்த வோதை, எ-து. புள்ளினான வெழுந்தவோதை, எ-ம். வரும்.
ஆயினுமிவையெலாஞ் சிறுபான்மை யெனக்கொள்க. எ-று. (12)
 

65.

உவ்வீறுவினாச்சுட் டெண்ணிவைவேற்றுமை
வழியன்சாரியை மருவவும்பெறுமே
யற்றுறும்பன்மையாம் வினாச்சுட்டென்ப
வவ்விறுமஃறிணைப் பன்மைக்கற்றே.
 
     (இ-ள்.) ஐம்முதலாறுருபுஞ் சாரியையும் புணர்ச்சியாமா றுணர்த்துதும். உகரவீற்று
வினாப்பெயருஞ் சுட்டுப்பெயரும் எண்ணின்பெயரும் ஐம்முதலாறு வேற்றுமை
யுருபுகளோடு புணருங்காலும், வேற்றுமைப் பொருளாய் மற்றொரு பெயரொடு
தொடருங்காலும், அன்சாரியையணையவும் பெறும். (உ-ம்.) யாதனையுமியான்,
யாதன்கொம்பு, எ-ம். அதனை, இதனை, உதனை, அதனியல்பு, இதனிலை, உதன்வழி,
எ-ம். ஒன்றனை, இரண்டனை, மூன்றனை, ஒன்றன்பால், ஆறனுருபு, எட்டனியல்பு, எ-ம்.
மூவகைப் பெயருமிருவழி அன்சாரியை பெற்றவாறுகாண்க. மருவவுமென்றும்மை
வந்தமையாலச் சாரியையின்றியும் வேற்றுமையுருபு பெறுமென்றுணர்க. (உ-ம்.) யாதை,
அதை, ஒன்றை, பிறவுமன்ன. மீளவும் பொது முறையால் இன்சாரியை பெற்றுவரும்.
(உ-ம்.) யாதினால், அதினால், ஒன்றின்முதலிய, எ-ம். தொடர்மொழியாக நிற்புழி அன்,
இன், என்றிரு சாரியையி லொன்றின்றி வழங்கா. (உ-ம்.) இதன் பொருள், இதின்
பொருள், ஒன்றன்பால், ஒன்றின்பால், எ-ம். பிறவுமன்ன. இவற்றுள்ளும் அன்சாரியை
சிறப்பெனக்கொள்க. அன்றியுஞ் சுட்டுச்சொற்பன்மை. (உ-ம்.) இவை, அவை, உவை,
இவ், அவ், உவ், எ-ம். வினாச்சொற்பன்மை. (உ-ம்.) எவை, எவ், யாவை, எ-ம்.
இவையெலாம் அற்றுச்சாரியை பெற்றாறுருபோடு புணரும். (உ-ம்.) இவற்றை, அவற்றை,
உவற்றை, எவற்றை, யாவற்றை, எ-ம். பிறவுமன்ன. மீளவும் அற்றுச்சாரியையோடு
இன்சாரியை பெற்றாறுருபோடு புணரவும்பெறும். (உ-ம்.) இவற்றினை, இவற்றினால்,
இவற்றிக்கு, இவற்றினின், இவற்றினது, இவற்றின்கண், எ-ம். பிறவுமன்ன. அன்றியு
மினிச்சொல்லும்படி அஃறிணைப் பெயருட்சில பன்மையில் அ வென முடியும்.
இவையெல்லாம், அற்றுச்சாரியை பெற்றாறுருபோடு புணரும். (உ-ம்.) பல-பலவற்றை,
சில-சிலவற்றை, அரிய-அரியவற்றை, பறப்பன- பறப்பனவற்றை, எ-ம். பிறவுமன்ன.
தொல்காப்பியம். - "எண்ணினிறுதியன்னொடு சிவணும்." எ-து. மேற்கோள். எ-று. (13)