எ-ம். புலவரானுரைத்த நூல், எ-து. புலவரானவுரைத்த நூல், எ-ம். கடிநிலையின்றே யாசிரியற்கு, எ-து. ஆசிரியற்க, எ-ம். வரும். அஃறிணைப்பெயர்களோடோவெனில், ஆனெனு முருபு திரியவும் பெறும், ஒழிந்த ஐயும் குவ்வுந்திரியா. (உ-ம்.) புள்ளினா னெழுந்த வோதை, எ-து. புள்ளினான வெழுந்தவோதை, எ-ம். வரும். ஆயினுமிவையெலாஞ் சிறுபான்மை யெனக்கொள்க. எ-று. (12) | 65. | உவ்வீறுவினாச்சுட் டெண்ணிவைவேற்றுமை வழியன்சாரியை மருவவும்பெறுமே யற்றுறும்பன்மையாம் வினாச்சுட்டென்ப வவ்விறுமஃறிணைப் பன்மைக்கற்றே. | | (இ-ள்.) ஐம்முதலாறுருபுஞ் சாரியையும் புணர்ச்சியாமா றுணர்த்துதும். உகரவீற்று வினாப்பெயருஞ் சுட்டுப்பெயரும் எண்ணின்பெயரும் ஐம்முதலாறு வேற்றுமை யுருபுகளோடு புணருங்காலும், வேற்றுமைப் பொருளாய் மற்றொரு பெயரொடு தொடருங்காலும், அன்சாரியையணையவும் பெறும். (உ-ம்.) யாதனையுமியான், யாதன்கொம்பு, எ-ம். அதனை, இதனை, உதனை, அதனியல்பு, இதனிலை, உதன்வழி, எ-ம். ஒன்றனை, இரண்டனை, மூன்றனை, ஒன்றன்பால், ஆறனுருபு, எட்டனியல்பு, எ-ம். மூவகைப் பெயருமிருவழி அன்சாரியை பெற்றவாறுகாண்க. மருவவுமென்றும்மை வந்தமையாலச் சாரியையின்றியும் வேற்றுமையுருபு பெறுமென்றுணர்க. (உ-ம்.) யாதை, அதை, ஒன்றை, பிறவுமன்ன. மீளவும் பொது முறையால் இன்சாரியை பெற்றுவரும். (உ-ம்.) யாதினால், அதினால், ஒன்றின்முதலிய, எ-ம். தொடர்மொழியாக நிற்புழி அன், இன், என்றிரு சாரியையி லொன்றின்றி வழங்கா. (உ-ம்.) இதன் பொருள், இதின் பொருள், ஒன்றன்பால், ஒன்றின்பால், எ-ம். பிறவுமன்ன. இவற்றுள்ளும் அன்சாரியை சிறப்பெனக்கொள்க. அன்றியுஞ் சுட்டுச்சொற்பன்மை. (உ-ம்.) இவை, அவை, உவை, இவ், அவ், உவ், எ-ம். வினாச்சொற்பன்மை. (உ-ம்.) எவை, எவ், யாவை, எ-ம். இவையெலாம் அற்றுச்சாரியை பெற்றாறுருபோடு புணரும். (உ-ம்.) இவற்றை, அவற்றை, உவற்றை, எவற்றை, யாவற்றை, எ-ம். பிறவுமன்ன. மீளவும் அற்றுச்சாரியையோடு இன்சாரியை பெற்றாறுருபோடு புணரவும்பெறும். (உ-ம்.) இவற்றினை, இவற்றினால், இவற்றிக்கு, இவற்றினின், இவற்றினது, இவற்றின்கண், எ-ம். பிறவுமன்ன. அன்றியு மினிச்சொல்லும்படி அஃறிணைப் பெயருட்சில பன்மையில் அ வென முடியும். இவையெல்லாம், அற்றுச்சாரியை பெற்றாறுருபோடு புணரும். (உ-ம்.) பல-பலவற்றை, சில-சிலவற்றை, அரிய-அரியவற்றை, பறப்பன- பறப்பனவற்றை, எ-ம். பிறவுமன்ன. தொல்காப்பியம். - "எண்ணினிறுதியன்னொடு சிவணும்." எ-து. மேற்கோள். எ-று. (13) |
|
|