52தொன்னூல்விளக்கம்

66.

"எல்லாமென்ப திழிதிணையாயி
னற்றோடுருபின் மேலும்முறுமே
யன்றேனம்மிடை யடைந்தற்றாகு
மெல்லாருமெல்லீரு மென்பவற்றும்மை
தள்ளிநிரலே தம்நும்சாரப்
புல்லுமுருபின் பின்னரும்மே."
 
     (இ-ள்.) இதுவுமது. எல்லாமெனும் பெயர் அஃறிணையானகாலை அற்றுச்சாரியையு
முருபின்மே லும்மையும் பெறும். (உ-ம்.) எல்லாவற்றையும் - எல்லாவற்றோடும், எ-ம்.
அவ்வாறடைமொழியாக வரினுமாம். (உ-ம்.) எல்லாவற்றுத்தலையும் -
எல்லாவற்றுக்காதும், எ-ம். அதுவே உயர்திணையானகாலை இடையே
நம்மெனுஞ்சாரியை யுருபின் மேலும்மும்பெறும். (உ-ம்.) எல்லாநம்மையும் -
எல்லாநம்மாலும் எ-ம். அவ்வாறடைமொழியாக எல்லாந்தலையும் - எல்லாங்காதும்,
எ-ம். அன்றியும், எல்லாரு மெல்லீருமென இருமொழியுமீற்றும்மை ஒழிந்து முறையே
தம் நும் எனச்சாரியையு முருபின்மேலும்மையும் பெறும். (உ-ம்.) எல்லார் தம்மையும் -
எல்லார்தம்மாலும், எ-ம். எல்லீர் நும்மையும் - எல்லீர் நும்மாலும், எ-ம். அவ்வாறடை
மொழியாக எல்லார்தங்காதும் - எல்லீர்நுங்காதும், எ-ம். வரும். பிறவுமன்ன எ-று. (14)
 

67.

"ஆமாகோனவ் வணையவும்பெறுமே."
 
     (இ-ள்.) இதுவுமது. ஆ, மா, கோ என்னு மிம்முப்பெயரும் னவ்வெனுஞ்
சாரியைபெற் றாறுருபோடு புணரும். (உ-ம்.) ஆன், மான், கோன், ஆனை, மானை,
கோனை, ஆனால். மானால், கோனால், எ-ம். பிறவுமன்ன. அவ்வாறடைமொழியாக
ஆன்கன்று, மான்றலை, கோன்குணம், எ-ம். வரும். பிறவுமன்ன. இங்ஙன மா, எ-து.
விலங்கு, மரம், இவையெனக் கொள்க. அன்றியும், னவ்வணையவுமென்றமையா
லச்சாரியை யணையாமலும் பொது வழியால் உருபு பெற்றுவரும். (உ-ம்.) ஆவை,
ஆவினை, மாவை, மாவினை, கோவை, கோவினை, எ-ம். வரும். பிறவுமன்ன. எ-று. (15)
 

68.

"தான் தாம் நாமுதல் குறுகும்யான்யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அவ்வரு நான்காறிரட்டா."
 
     (இ-ள்.) இதுவுமது. தான், தாம், நாம், என முப்பெயரு முதலுயிர்குறுகி, தன், தம்,
நம் எனவாகி ஐம்முதலாறுருபுகளைப் பெறும். அன்றியும் யான் எ-து. என், யாம் எ-து,
எம் நீ எ-து. நின், நீர் எ-து. நும், எனவாகி அவ்வுருபுகளைப் பெறும். அன்றியும்,
குவ்வெனு நான்காம் வேற்றுமையில் அ எனுஞ்சாரியைபெற்றுக் ககரமிரட்டும். அன்றியு
மெழுத்தின் விகாரங்களுட்சொன்னபடி