தனிக்குறிலீற்ற வொற்றெழுத்துயிர்வரி னிரட்டுமென் றமையான் மற்றவிடத்தீற்று மெய்யெழுத்திரட்டி நான்காம் வேற்றுமை யிடத்தும் ஆறாம் வேற்றுமையிடத்து முயிரொடுபுணரினுமிரட்டா." (உ-ம்.) தன்னை, தன்னால், தனக்கு, தன்னின், தனது, தன்கண், எ-ம். தம்மை, நம்மை, என்னை, எம்மை, நின்னை, நும்மை, எ-ம். பிறவுமன்ன. நீர், நீவீர், நீயீர், ஒருவழியாக நும்மாம். அன்றியுஞ்சூத்திரத்துட் பிறவென்றதனால் நீ, எ-து. உன் - நுன், எ-ம். நீர், எ-து. உம் - நும், எ-ம். வரும். அன்றியு மிவையெல்லாந் தன்மொற்றிரண்டின விடத்துஞ் செய்யுள்வேண்டுழி இரட்டாமல் வரவும் பெறும். (உ-ம்.) எனை, நினை, நமை, நுமை, தனை, தமை, எ-ம். பிறவுமன்ன. எ-று. (16) | 69. | "எட்டனுருபே யெய்துபெயரீற்றின் றிரிபுகுன்றன் மிகுதலியல்பயற் றிரிபுமாம்பொருள் படர்க்கையோரைத் தன்முகமாகத் தானழைப்பதுவே." | | (இ-ள்.) எட்டாம் வேற்றுமையிலக்கண மாமாறுணர்த்துதும், எட்டாம்வேற்றுமைக்கு உருபு:- தன் பெயரீற்றினதுதிரிபும், ஈற்றினது கேடும், மிகுதலும், இயல்பும், ஈற்றயலின்றிரியும், ஈறுகெடுதலு, மீற்றயற்றிரிதலும், ஈறுகெட்டீற்ற யறிரிந்தேமிகுதலுமாம். இதற்குப்பொருள் அழைப்பது. அழைத்தலும் விளித்தலு மொக்கும். இஃது விளிவேற்றுமை; விளித்தற் குக்கருவியானவுருபை விளி, எ-து. காரியவாகுபெயர். (உ-ம்.) நம்பீ - அன்னா, தன்பெயரீற்றினது திரிபு; ஐய - மன்ன, ஈற்றினதுகேடு, ஐயனே - மன்னனே, மிகுதல்; ஐயன்கூறாய் - நம்பிவாராய், இயல்பு; ஐயான்கேள் - ஊரீர் வம்மின், ஈற்றியலின்றிரிபு; ஐயா - கண்ணா, ஈறுகெட்டீற்றயற்றிரிதல்; ஐயாவே - கண்ணவே, ஈறுகெட்டீற்றயற் றிரிந்தீற்றின் மிகுதல்; இவ்வாறெல் லாப்பெயர்க்கு மேலாமையால் வேறு வேறாகத்தருவோம். அவற்றைத்தத்தமிடத்திற்காண்க. இதனை வடநூலார் சம்போதனமென்பர். எ-று. (17) | 70.. | எப்பெயர்க்கண்ணு மியல்புமேயு மிகரநீட்சியு முருபாமன்னே. | | (இ-ள்.) மூவகைப் பெயர்களுக்கும் பொதுவாகிய விளியுருபாமாறுணர்த்துதும், உயர்திணைப்பெயருக்கும் அஃறிணைப் பெயர்க்கும் பொதுப்பெயர்க்கும் விளியுருபாவன:- இயல்பாதலும் ஏகாரமிகுதலும் இகரமீகாரமாதலுமாம். (உ-ம்.) முனிகூறாய், நம்பிகூறாய், வேந்துகூறாய், ஆடூஉக்கூறாய், விடலைகூறாய், கோக்கூறாய், இறைவன்கூறாய், மகள்கூறாய், மாந்தர்கூறீர், குருசில்கூறாய், ஆய்கூறாய், இயல்பாயின. வேந்தே, வேளே, மாந்தரே, சேயே, ஏகாரமிக்கன. நம்பீகூறாய், தோழீவாராய், இகரமீகாரமாயின. இவை |
|
|