53பெயர். - வேற்றுமையியல்
தனிக்குறிலீற்ற வொற்றெழுத்துயிர்வரி னிரட்டுமென் றமையான் மற்றவிடத்தீற்று
மெய்யெழுத்திரட்டி நான்காம் வேற்றுமை யிடத்தும் ஆறாம் வேற்றுமையிடத்து
முயிரொடுபுணரினுமிரட்டா." (உ-ம்.) தன்னை, தன்னால், தனக்கு, தன்னின், தனது,
தன்கண், எ-ம். தம்மை, நம்மை, என்னை, எம்மை, நின்னை, நும்மை, எ-ம். பிறவுமன்ன.
நீர், நீவீர், நீயீர், ஒருவழியாக நும்மாம். அன்றியுஞ்சூத்திரத்துட் பிறவென்றதனால் நீ,
எ-து. உன் - நுன், எ-ம். நீர், எ-து. உம் - நும், எ-ம். வரும். அன்றியு மிவையெல்லாந்
தன்மொற்றிரண்டின விடத்துஞ் செய்யுள்வேண்டுழி இரட்டாமல் வரவும் பெறும். (உ-ம்.)
எனை, நினை, நமை, நுமை, தனை, தமை, எ-ம். பிறவுமன்ன. எ-று. (16)
 

69.

"எட்டனுருபே யெய்துபெயரீற்றின்
றிரிபுகுன்றன் மிகுதலியல்பயற்
றிரிபுமாம்பொருள் படர்க்கையோரைத்
தன்முகமாகத் தானழைப்பதுவே."
 
     (இ-ள்.) எட்டாம் வேற்றுமையிலக்கண மாமாறுணர்த்துதும், எட்டாம்வேற்றுமைக்கு
உருபு:- தன் பெயரீற்றினதுதிரிபும், ஈற்றினது கேடும், மிகுதலும், இயல்பும்,
ஈற்றயலின்றிரியும், ஈறுகெடுதலு, மீற்றயற்றிரிதலும், ஈறுகெட்டீற்ற யறிரிந்தேமிகுதலுமாம்.
இதற்குப்பொருள் அழைப்பது. அழைத்தலும் விளித்தலு மொக்கும். இஃது
விளிவேற்றுமை; விளித்தற் குக்கருவியானவுருபை விளி, எ-து. காரியவாகுபெயர். (உ-ம்.)
நம்பீ - அன்னா, தன்பெயரீற்றினது திரிபு; ஐய - மன்ன, ஈற்றினதுகேடு, ஐயனே -
மன்னனே, மிகுதல்; ஐயன்கூறாய் - நம்பிவாராய், இயல்பு; ஐயான்கேள் - ஊரீர்
வம்மின், ஈற்றியலின்றிரிபு; ஐயா - கண்ணா, ஈறுகெட்டீற்றயற்றிரிதல்; ஐயாவே -
கண்ணவே, ஈறுகெட்டீற்றயற் றிரிந்தீற்றின் மிகுதல்; இவ்வாறெல் லாப்பெயர்க்கு
மேலாமையால் வேறு வேறாகத்தருவோம். அவற்றைத்தத்தமிடத்திற்காண்க. இதனை
வடநூலார் சம்போதனமென்பர். எ-று. (17)
 

70..

எப்பெயர்க்கண்ணு மியல்புமேயு
மிகரநீட்சியு முருபாமன்னே.
 
     (இ-ள்.) மூவகைப் பெயர்களுக்கும் பொதுவாகிய விளியுருபாமாறுணர்த்துதும்,
உயர்திணைப்பெயருக்கும் அஃறிணைப் பெயர்க்கும் பொதுப்பெயர்க்கும்
விளியுருபாவன:- இயல்பாதலும் ஏகாரமிகுதலும் இகரமீகாரமாதலுமாம். (உ-ம்.)
முனிகூறாய், நம்பிகூறாய், வேந்துகூறாய், ஆடூஉக்கூறாய், விடலைகூறாய், கோக்கூறாய்,
இறைவன்கூறாய், மகள்கூறாய், மாந்தர்கூறீர், குருசில்கூறாய், ஆய்கூறாய், இயல்பாயின.
வேந்தே, வேளே, மாந்தரே, சேயே, ஏகாரமிக்கன. நம்பீகூறாய், தோழீவாராய்,
இகரமீகாரமாயின. இவை