58தொன்னூல்விளக்கம்

82.

"எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுணர்ந்தோர்
செப்பின ரப்படி செப்புதன் மரபே."
 
     (இ-ள்.) மரபாமாறுணர்த்துதும். வேற்றுமைவகையினும், பெயர்க்கும் வேற்றுமைக்கு
மிடைநிலையென வருஞ்சாரியை வகையினு, மற்றைத்தமிழ் மொழி நடையினும்,
இலக்கியவழியே வழங்கும் விகற்பங்களி யாவையும் ஒவ்வொன்றாய்ச் சிறப்பித்துரைப்பது
இலக்கணநூல்களி லடங்குந் தன்மையன்றே; ஆகையின் முன்னோர் காட்டின
மாத்திரையாய்ந் துணர்ந்தொப்பநடப்ப தறிவோரியல் பெனக்கொள்க. ஈண்டுப்பெயரிய
லுரைத்தலி னொரு பொருளைக் குறித்த பலசொல்லாகவருஞ் சில திரிசொல்லுரிமையை
விளக்கிக்காட்டலே நன்றென முன்னோர் வழியைப்பற்றிச் சில திரிசொற்
பெயரியல்பினை விளக்குதும். இளைமையைக் காட்டுஞ் சொற்பலவாகியவற்றுள் வரும்.
(உ-ம்.) குழவி, எ-து. மக்கள், யானை, பசு, எருமை, மான், மரை, கரடி, சீயம், வருடை,
மதிக்குமுரித்து. மக, எ-து. மக்கள், முசு, குரங்குகட்கு முரித்து. பிள்ளை, எ-து. மக்கள்,
பூனை, தாண்டுவன, தவழ்வன, பறப்பன, கோட்டில்வாழ்விலங்கு, ஓரறிவுயிர்கட்குமுரித்து.
பார்ப்பு, எ-து. பறவை, தவிழ்வன. கோட்டில்வாழ் விலங்குகட்முரித்து. பறழ், எ-து.
பன்றி, முயல், நீர்நாய், கோட்டில்வாழ்விலங்குகட்முரித்து. குருளை, எ-து. யாளி, புலி,
பன்றி, நாய், மான், முசு, பாம்புகட்குமுரித்து. மறி எ-து. ஆடு, மான், குதிரை,
மேடவிராசிக்குமுரித்து. கன்று, எ-து. பசு, எருமை, ஆமா, மரைமா, கவரிமா, மான்,
ஒட்டகம், யானை, ஒரு சாரோரறிவுகட்கு முரித்து. குட்டி, எ-து. சிங்கம், புலி, கரடி,
யானை, குதிரை, ஒட்டகம், மான், ஆடு, நாய், பன்றி, முயல், நரி, குரங்கு, முசு, கீரி,
நாவி, வெருகு, பாம்பு, அணில், எலிகட்குமுரித்து. பொரி, எ-து. எருமைக்குரித்து.
களபம், எ-து. யானைக்குரித்து. இவையெலாமிளைமைச் சொற்களாகி யிவ்வாறு வருவன
மரபெனப்படும். - தொல்காப்பியம். - "மாற்றருஞ் சிறப்பின் மரபியல்கிளப்பிற்,
பார்ப்பும்பறழுங்குட்டியுங்குருளையுங், கன்றும்பிள்ளையு மகவுமறியுமென்,
றொன்பதுங்குழவியோடிளைமைப்பெயரே." எ-து. மேற்கோள். இவ்வாறன்றி
ஆமைக்குழவி, குதிரைப்பார்ப்பு, அன்னப்பறழ், யானைமறி, பூனைக்கன்று, எலிக்குருளை
முதலியவரின் மரபுவழுவாம். - தொல்காப்பியம். - "மரபுநிலைதிரிதல்செய்யுட்கில்லை,
மரபுவழிப்பட்ட சொல்லினான." எ-து. மேற்கோள். அன்றியு முறுப்புவகைக்குள்
பலசொல்லுள்ளும் வரும். (உ-ம்.) கை, எ-து. மக்கள், யானை, புலி, கரடி,
கோட்டில்வாழ்விலங்குகட்கு முரித்து. விரல், எ-து. மக்கள், கரடி, நாய்,
கோட்டில்வாழ்விலங்கு கட்குமுரித்து. நுதல், எ-து. மக்கள், யானை,
ஒருசார்புவிலங்கிற்குமுரித்து. முலை, எ-து. மக்கள், ஆ, எருமை, ஆடு,
நாய்கட்குமுரித்து. விலங்கிற்குட் டிக்குரிய வொருசாரானவற்றிற்கு முரித்து. கூந்தல், எ-து.
பெண்டீர், பிடி, குதிரை, பனை, கமுகுகட்முரித்து. கண், எ-து. கட்பொறியுளவுயிர்