59 | பெயர். - பகுபதப்பெயரியல் | கட்கன்றி, கமுகு, கரும்பு, மூங்கில், பீலித்தோகை, கருவி, தேங்காய்கட்கு முரித்து. ஏடு, - எது. பனை, பூவிதழ்கட்குமுரித்து. தோடு, எ-து. பனை, தெங்கு, தாழை, பூவிதழ்கட்குமுரித்து. இதழ், எ-து. கண்ணிமை, உதடு, பூவிதழ், பனைகட்குமுரித்து. ஓலை, எ-து. பனை, தெங்கு, தாழைகட்குமுரித்து. ஈர்க்கு, எ-து, தெங்கு, பனை, மாவென்பவற்றிற்குமுரித்து. மடல், எ-து. பனை, தெங்கு, கமுகு, மூங்கில், வாழை, தாழை, ஈந்திற்குமுரித்து, பாளை, எ-து. தெங்கு கமுகுகட்குமுரித்து. குரும்பை, எ-து. தெங்கு, பனைகட்கு முரித்து. குலை, எ-து. தெங்கு, கமுகு, வாழை, ஈந்து, பனை, காந்தட்குமுரித்து குலை, எ-து. கமுகு, வாழை, ஈந்திற்குமுரித்து. சுளை, எ-து, பலா, பருத்தி, பாகற்பழங்கட்குமுரித்து. வீழ், எ-து. ஆல், இறலி, தாழை, சீந் தில்கட்குமுரித்து. நுகும்பு, எ-து. பனை, வாழை, மரல், புல்லென்பனவற் றிற்குமுரித்து. இலை, எ-து. தெங்கு, ஈந்து, பனைகட்குமுரித்து. அடை, எ-து. தாமரை, ஆம்பல், நெய்தற்றொடக்கத்துக்கு முயிர்நிலையோ ரறிவு கட்குந் தாம்பூலத்திற்கு முரித்து. பொகுட்டு, எ-து. தாமரைக்கும், கோங்கிற்குமுரித்து. குரல், எ-து. பெண்டீர்மயிர், மிடறு, தினை, வரகு, பூளை, நொச்சி, புதவம்புற்கட்குமுரித்து. நெல், எ-து. சாலி முதலியவற்றிற்கும், மூங்கிற்கும், ஐவனத்திற்குமுரித்து. இவையெலா முறுப்புச் சொற்களாகி இவ்வாறு வருவது மரபெனப்படும். இவ்வாறன்றி, (உ-ம்.) எருமைக்கை, குதிரைநுதல், கமுகோலை, பலாக்குலை, மாந்தாறு, வாழைச்சுளை, புல்லிலை முதலியவரின் மரபுவழுவாம். இவ்வாறே முன்னோர்காட்டிய வழியைப்பற்றியதற்கதற்குரிய சொல்லுதல் மரபெனப்படும். (அன்றியுமிதற்குப் பொருளதிகாரத்திற் சொல்லுரிமை விளக்கிய வழியைக்காண்க.) எ-று. (30)முதலாவது: - வேற்றுமையியன் - முற்றிற்று. | இரண்டாவது:-பகுபதப்பெயரியல். Chapter II. - Divisible Words. | 83. | பகுபத மொன்றாய்ப் பலவொருங் குணர்த்திற் பகாப்பத மவற்றுட் பகுதி யென்ப. | | (இ-ள்.) பகுபதப்பகுதிகளாமாறுணர்த்துதும். ஒருமொழியாகநின்றே ஒருப்படப்பொருளை யுணர்த்தும் பகுபதங்கட்கு, பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம், இவ்வாறுறுப்புளவாம். பகுக்கப்பட்டுப் பகாப்பதமாய் முதனிற்பது பகுதி, இடைநிற்பது இடைநிலை, கடைநிற்பது விகுதியாம். (உ-ம்.) கூனி, எ-து. கூன், இ, எனப்பகுதி விகுதியான் முடிந்தது. உண்டான், எ-து. உண்-ட்.ஆன், என வவ்விரண்டுட னிடைநிலைபெற்று முடிந்தது. உண்டனன், |
|
|