எ-து. உண்-ட்-அன்-அன், என வம்மூன்றுடன் சாரியைபெற்றுமுடிந்தது. பிடித்தனன், எ-து. பிடி-த்-த்-அன்-அன், என வந்நான்குடன் சந்திபெற்று முடிந்தது. நடந்தனன், எ-து. நட-த்-த்-அன்-அன், என வவ்வைந்தும் பெற்றுச் சந்தியால் வந்த தகர வல்லொற்றுமெல் லொற்றாதலாகிய விகாரமும் பெற்றுமுடிந்தது. பொருளாதி யறுவகைப் பகாப் பதங்களே பகுபதங்கட்குப் பகுதிகளாம். அவை:-பொன், மணி முதலிய பொருள்களும்; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என வைந்திணைகளும்; தேசம், ஊர், வான், அகம், புறமுதலியவிடங்களும்; பருவம், மாதம், வருடம், நாண்முதலிய காலங்களும்; கண், கால், கை, தலை, காது, கொம்பு, தளிர், பூ, காய், கனிமுதலிய வுறுப்புகளும்; அளவு, அறிவு, ஒப்பு, வடிவு, நிறம், கதி, சாதி, குடி, சிறப்பு முதலிய குணங்களும்; ஓதல், ஈதல், ஆடல், பாடல் முதலிய தொழில்களும் பிறவுமாம். இப்பகுதிக ணால்வகையாம். பொன், பொருப்பு, தை, கண், கருமை, கூத்து, இவ்வாறும் பெயர்ப் பகுதிகளாம். (உ-ம்.) பொன்னன், பொருப்பன், தையான், கண்ணன், கரியன், கூத்தன், எ-ம். வரும். நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு, இவை வினைப்பகுதிகளாம். (உ-ம்.) நடந்தான், வந்தான், மடிந்தான், சீத்தான், விட்டான், கூவினான், வெந்தான், வைத்தான், நொந்தான், போயினான், வௌவினான், உரிஞினான், உண்டான், பொருநினான், திருமினான், தின்றான், தேய்த்தான், பார்த்தான், சென்றான், வவ்வினான், வாழ்ந்தான், கேட்டான், அஃகினான், எ-ம். வரும். போல், நிகர், இவை இடைப்பகுதிகளாம். (உ-ம்.) பொன்போன்றான், புலிநிகர்த்தான், எ-ம். வரும். சால், மாண், இவை உரிப்பகுதிகளாம். (உ-ம்.) சான்றான், மாண்டான், எ-ம். வரும். செம்மை, சிறுமை, இவை பண்புப் பெயராகிய விகாரப் பகுதிகளாம். (உ-ம்.) செந்தாமரை, சிறியிலை, எ-ம். வரும், புகு, பெறு, விடு, இவைகாலங்காட்டும் விகாரப்பகுதிகளாம். (உ-ம்.) புக்கான், பெற்றான், விட்டான், எ-ம். வரும். கேள், கொள், செல், தா, சா, வா, கல், சொல், இவையும் விகாப்பகுதிகளாம். (உ-ம்.) கேட்டான், கொண்டான், சென்றான், தந்தான், செத்தான், வந்தான், கற்றான், சொன்னான், எ-ம். வரும். உழு, தொழு, உண், தின், இவை இயல்புப் பகுதிகளாம். (உ-ம்.) உழுதான், தொழுதான், உண்டான், தின்றான், எ-ம். வரும். வடநூலார், பகுதியை தாது என்பர். எ-று. (1) | 84. | அன்ஆன் அள்ஆள் அர்ஆர் துஐ அபிற வுமைம்பாற் பெயர்ப்பகு பதவி குதியே. | | (இ-ள்.) பகுபதவி குதிகளாமாறுணர்த்துதும். அன், ஆன், இரண்டும் ஆண்பால் விகுதி. (உ-ம்.) மலையன், மலையான், எ-ம். அள், ஆள், இரண்டும் பெண்பால் விகுதி. |
|
|