61பெயர். - பகுபதப்பெயரியல்
(உ-ம்.) மலையள், மலையாள், எ-ம். அர், ஆர், இரண்டும் பலர்பால் விகுதி. (உ-ம்.)
மலையார், மலையார், எ-ம். இவை உயர்திணை. து, ஒன்றன்பால் விகுதி. (உ-ம்.)
மலையது, எ-ம். ஐ, அ, இரண்டும் பலவின்பால் விகுதி. (உ-ம்.) மலையவை, மலையவ,
எ-ம். இவை அஃறிணை. பிறவுமென்றமிகையால் பெருமாள், முன்னோன், வில்லி, வாளி,
தட்டாத்தி, வண்ணாத்தி, வலைச்சி, எ-ம். வரும். - தொல்காப்பியம். - "அன் ஆன்
அள் ஆள் என்னுநான்கு, மொருவர்மருங்கிற் படர்க்கைச்சொல்லே. அர் ஆர்
பவ்வெனவரூஉ மூன்றும், பல்லோர் மருங்கிற்படர்க்கைச் சொல்லே. அ ஆ வ
எனவரூஉ மிறுதி, யப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. ஒன்றன் படர்க்கை
தடறவூர்ந்த, குன்றியலுகரத்திறுதியாகும்." இவைமேற்கோள். வடநூலார் விகுதியை
பிரத்தியயம் என்பர். எ-று. (2)
 

85.

ந ஞ விடைப் பகுபத நண்ணலு நெறியே.
 
     (இ-ள்.) காலங்காட்டா விடைநிலைகளாமாறுணர்த்துதும், பெயர்ப்
பகாப்பதமும் வினைப்பகாப்பதமும்பகுதியாகநிறுத்தி நச்சாரியையும் ஞச்சாரியையு
மிடைநிலை யாகவைத்து அவ்வப்பாலுக்குரிய விகுதியை ஈற்றின் கண்ணே தந்தது
பகுபதமாகும். (உ-ம்.) கிளை, இளை, கடை, நடை, எனப் பெயர்ப்பகுதியும்; அறி, துணி,
குறை, மொழி, என வினைப்பகுதியு நிறுத்தி ந், ஞ், என இடைநிலையும் அர், என
இறுதி நிலையுங்கூட்டி கிளைநர், இளைநர், கடைநர், நடைநர், எ-ம். கிளைஞர்,
இளைஞர், கடைஞர், நடைஞர், எ-ம். அறிநர், துணிநர், குறைநர், மொழிநர், எ-ம்.
அறிஞர், துணிஞர், குறைஞர், மொழிஞர், எ-ம். புணர்ந்து வருதல் காண்க. நண்ணலு
நெறியே யென்ற மிகையால் வலைச்சி, வண்ணாத்தி, இவற்றுள் சகரமெய்யுந் தகர
மெய்யும் இடைநிலையாயின. பிறவுமன்ன. எ-று. (3)
 

86.

வடநடைப் பகுபதம் வரமொழி முதற்கண்
இ ஏ யென ஐ ஒளவும் உ ஓ வென ஒளவும்
அவ்வென ஆவுமாம் ஐயிறி னீறுபோய்
எயனீட் டீன்ற வெச்சமா முளபிற.
 
     (இ-ள்.) வடநடைப்பகுபதங்களாமாறுணர்த்துதும். மேற்கூறியபகுபத மெல்லாஞ்
செந்தமிழ் நடையனவாம். பகுதியாக நிற்கும் பகாப்பத முதற்கண் உயிராயினும்
உயிர்மெய்யாயினும்வரின் நிலைமொழி, இ, எ, எனவிரண்டும் ஐயாகத்திரிந்து
பகுப்பதங்களாகும். (உ-ம்.) இந்திரனிருக்குங்குண திசை - ஐந்திரி, எ-ம். கிரியிலுள்ளன
- கைரிகம், எ-ம். சிலையாலாயமலை - சைலம், எ-ம். மிதுலையுட் பிறந்தாள் - மைதுலி,
எ-ம். நியாயநூலுணர்ந்தோன், - நையாயிகன், எ-ம். வியாகரணமுணர்ந்தோன் -
வையாகரணன், எ-ம். வரும். ஒரோவிடத்து இ ஒளவாகத்திரியும். (உ-ம்.)
கிரியிற்பிறந்தாள்.