63 | பெயர். - தொகைநிலைத்தொடர்மொழிப்பெயரியல் | ஆயுதமில்லான் - நிராயுதன், உவமையில்லான் - நிருவுவமன், எ-ம். பிறவுமன்ன. மூ வழியும் பகுபதப்பெயர் வடைநடையால் வந்தவாறு காண்க. வடநூலார் பகுபதத்தை தத்திதம் என்பர். எ-று. (5) இரண்டாவது:-பகுபதப்பெயரியல்.-முற்றிற்று. | மூன்றாவது:-தொகைநிலைத்தொடர்மொழிப் பெயரியல். Chapter III. - Noun Phrases. | 88. | தொகைநிலை யென்ப தொடரும் பெயரொடு வினைபெயர் புணர்புளி வேற்றுமை முதலொழித் தொருமொழி போற்பல வொன்றிய நெறியே. | | (இ-ள்.) மேலே கூறிய விருவகைத் தொடர்மொழிகளினுட் டொகா நிலைவிட்டுத் தொகைநிலையாகத் தொடர்ந்து வருமொழிக் கீண்டுச் சிலவி தியாமாறுணர்த்துதும். பெயருடனே பெயரும், பெயருடனே வினையும், புணருமிடத்து வேற்றுமை முதலிய வுருபுகள் தோன்றாதொழிய நிற்ப இரண்டு சொற்பல சொற்றொடர்ந்த தன்மையால் ஒரு பெயர்ச் சொற் போலவும் ஒரு வினைச்சொற்போலவும் வழங்குவன தொகைநிலைத் தொடர்மொழிகளாம். இவற்றுள் வினைச்சொல் விட்டுத் தொகைநிலையாகத் தொடர்ந்துவரும் பெயர்ச்சொற்களாவன:-பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்றிவ்வறுவகைப்பெயர் தொக்குநிற்பனவாம். (உ-ம்.) பூண்மார்பன், மலையருவி, மாரிநாட்பயிர், கைம்மா, கருங்குவளை, கொடைக்கோமான், என முறையே பொருளாதி யறுவகைப்பெயர் தொக்குநின்று தொகைநிலைத் தொடர்மொழி வந்தவாறுகாண்க. இவற்றைவிரிக்க, பூணையணிந்தமார்பன், மலையினின்றுவீழ்கின்றவருவி, மாரிநாளிலுள்ளபயிர், கையையுடையமா, கருமையையுடையகுவளை, கொடையையியற்றுகின்ற கோமான், எ-ம். வரும். எ-று. (1) | 89. | தொகைநிலை வகைப்படின் றொகும்வேற் றுமைவினை யுவமை பண்பும் மையோ டன்மொழி யாறே. | | (இ-ள்.) தொகைநிலைத் தொடர்மொழிகளா மாறுணர்த்துதும். வேற்றுமை யுருபுதொக்குநிற்பது வேற்றுமைத்தொகையும், காலத்தைக் காட்டாமல் வினையிற் பிறந்த பெயரெச்சந் தொக்குநிற்பது வினைத்தொகையும், உவமையுருபு தொக்கு நிற்பது உவமைத்தொகையும், குணப்பெயர் தொக்கு நிற்பது பண்புத்தொகையும், உம்மைதொக்குநிற்பது உம்மைத்தொகையும், |
|
|