68தொன்னூல்விளக்கம்
எ-ம். வரும். பத்துமுன் னிரண்டுவ ரின் - பன்னிரண்டாம். ஒன்பதும் - பத்தும்வரின்
இன்சாரியை பெறா. (உ-ம்.) பதிற்றொன்பது, பதிற்றுப்பத்து, எ-ம். வரும்.
தொல்காப்பியம். - "ஒன்றன் முதலா வெட்டீறாக, வெல்லாவெண்ணும் பத்தன்முன்வரிற்,
குற்றியலுக ரமெய்யொடுங் கெடுமே. - முற்றவின்வரூஉ மிரண்டலங் கடையே பத்த
னொற்றுக்கெட னகரமிரட்ட, லொத்தென்ப விரண்டுவருங்காலை.-ஆயிரம் வரினு
மாயியறிரியாது. - நிறையுமளவும் வரூஉங்காலையுங், குறையாதாகு மின்னென்சாரியை. -
ஒன்பானிறுதி யுருபுநிலைதிரியா, தின்பெறல்வேண்டுஞ் சாரியைமரபே."
இவைமேற்கோள். எ-று. (8)
 

96.

ஒன்று முதலெட் டளவூர்ந் தபத்தொற்
றொழிதலு மாய்த முறழ்தலு மாம்பல
வொன்றுட னானா மொன்பது மிற்றே.
 
     (இ-ள்.) ஒன்றுமுதலா வெட்டீறாக வருமெண்ணின் கீழ்ப்பத்துத் தொடர்ந்து
புணருமா றுணர்த்துதும். ஒன்றுமுதலெட் டெண்களின்முன்னே தொடர்ந்து வரும்
பத்தனொற்றாகிய தகரங்கெட்டுப் பதுவாதலும் அவ்வொற்றிடமாய் தம்வந்து.
பஃதுவாதலும் பகரமொன்றே நின்று மற்றவைபோய் ஆன்சாரியை பெற்றுமுடிதலுமாம்.
(உ-ம்.) ஒன்று - பத்து, ஒருபது, இரண்டு - பத்து, இருபது, மூன்று - பத்து, முப்பது,
எ-ம். ஒருபஃது, இருபஃது, முப்பஃது, எ-ம். ஒருபான், இருபான், முப்பான், எ-ம். வரும்.
பிறவுமன்ன. அன்றியுமிம்மூன்றாந் திரிபொன்பதென்னு மெண்ணிற்குமாகி
யொன்பானெனவும் படுமெனக் கொள்க. தொல்காப்பியம். - "ஒன்றுமுத லொன்
பானிறுதி முன்னர், நின்றபத்தனொற்றுக் கெடவாய்தம், வந்திடைநிலையு
மியற்கைத்தென்ப, கூறியவியற்கை குற்றியலுகர, மாறனிறுதி யல்வழியான." எ-து.
மேற்கோள். எ-று. (9)
 

97.

'ஒன்ப தொழித்தவெண் ணொன்பது மிரட்டின்'
முன்னது குறுகிமற் றோட 'வுயிர்வரின்
வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி.'
 
     (இ-ள்.) மற்றொருவகை யெண்ணின்றொகையா மாறுணர்த்துதும். ஒன்பதென்னு
மெண்ணொன்றொழிந்த ஒன்றுமுதற் பத்தெண்களுந் தம் மொடுதாம் புணருமிடத்து
நிலைமொழி முதனெடிலெனின் முதல்குறுகி மற்றவைகெட்டும் வருமொழி முதலுயிரெனில்
வகரமிரட்டி மெய்யெனில் வருமெய்யிரட்டியும் புணரும். (உ-ம்.) ஒன்று-ஒன்று,
ஒவ்வொன்று, இரண்டு - இரண்டு, இவ்விரண்டு, மூன்று - மூன்று, மும்மூன்று, நான்கு -
நான்கு, நந்நான்கு, ஐந்து-ஐந்து, ஐவ்வைந்து, ஆறு-ஆறு, அவ்வாறு, ஏழு - ஏழு
எவ்வேழு, எட்டு - எட்டு, எவ்வெட்டு, பத்து - பத்து, பப்பத்து, எ-ம்.