7 | இரண்டாவதெழுத்தின்வகுப்பு | தேழென்றுணர்க. அன்றியுந் தென்மொழிக் கில்லனவாகி வடமொழிக் குரியவெழுத் தெத்துணையோவெனில், ஆரியமொழியில் வழங்கு முயிர்பதி னாறுள்ளும் மெய்முப்பத்தேழுள்ளும் சொன்ன பொதுவெழுத்தன்றி உயிராறும், ஒற்றிருபத்திரண்டுமாக வடமொழிக் குரியவெழுத் திருபத்தெட்டெனக்கொள்க. இங்ஙனம் ஆரியமொழிகளைத் தமிழிடத் துரைக்குங்காலைப் பொதுவெழுத்தால் வரும்பதமே சிறப்புடைத்து; அல்லன வருதல் சிறப்பன்றெனக்கண்டுணர்க. - நன்னூல். "ற ன ழ எ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள பல்லாச்சார்புந்தமிழ் பிறபொதுவே," எ-று. (3) | 7. | இடுகுறிகாரண மிவைபொதுச் சிறப்பென வீரிரண்டாகு மெழுத்தின்பெயரே. | | (இ-ள்.) தமிழில் வழங்கு நாற்பதுவகை எழுத்திங்ஙனம் வேறுவேறாய் விளக்கா முன்னர் வழங்கு மவற்றின் பெயரைக் கூறுதும்.அவைநால்வகைப்படும். இடுகுறிப் பொதுப்பெயரும், இடுகுறிச் சிறப்புப்பெயரும், காரணப் பொதுப்பெயரும், காரணச் சிறப்புப்பெயரு மென்றுணர்க. (உ-ம்) உயிரே, உயிர்மெய்யே, உடம்பே, என்பன இடுகுறிப்பொதுப்பெயர், அவற்றுள் அ, ஆ, க, ங முதலிய இடுகுறிச் சிறப்புப்பெயர். குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் முதலிய காரணப் பொதுப்பெயர். குற்றியலுகரங் குற்றியலிகரமுதலிய காரணச்சிறப்புப் பெயரெனக்கொள்க. ஆகையில், (உ-ம்) நாகு, எனுமொழி யீற்றெழுத்து இடுகுறிப் பொதுப்பெயரால் உயிர், மெய், எ-ம். இடுகுறிச்சிறப்புப்பெயரால், கு, எ-ம். காரணப்பொதுப் பெயரால், குற்றெழுத்து, எ-ம். காரணச் சிறப்புப் பெயரால், குற்றெழுத்து, எ-ம். காரணச் சிறப்புப் பெயரால், குற்றியலுகரம் எ-ம். பிறவுமேற்கும் பெயரொடு வழங்கும், எ-று. (4) | 8. | அம்முதலீராறுயிர் கம்முதன்மூவாறுடல் குறில் அ, இ, உ, எ, ஒவ்வைந்தேநெடில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள வேழே. | | (இ-ள்.) உயிரு முடலுங் குறிலு நெடிலு மாமாறுணர்த்துதும், உயிரெழுத்துப் பன்னிரண்டு; (உ-ம்) அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எ-ம். மெய்யெழுத்துப் பதினெட்டு; (உ-ம்) க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன். எ-ம். பன்னீருயிர்களுட் குற்றெழுத்தைந்து, (உ-ம்.) அ, இ, உ, எ, ஒ எ-ம். நெட்டெழுத்தேழு, (உ-ம்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள எ-ம். வரும். உயிராய்வரினு மொற்றெடுத் துயிர்மெய்யாய் வரினுங் குறில் குறிலே, நெடில் நெடிலேயாம். உயிருக்கு ஆவி, அச்சு, சுரம் எ-ம். மெய்க்கு, புள்ளி, உடல், உடம்பு, ஒற்று, அல், வியஞ்சனம் எ-ம். குற்றிற்கு, குறில், குறுமை, இரச்சுவம் எ-ம். நெடிற்கு, நெடில், நெடுமை, தீர்க்கம் எ-ம். கூறுவர், எ-று. (5) |
|
|