71பெயர். - சுட்டுவினா
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன், மொழிப்புறத்து வந்தன. அன்றியும்,
ஒன்றன்பாற் சுட்டுச் சொல்லிடையே வாய்தம்வரவும் பெறும். (உ-ம்.) அஃது, இஃது,
உஃது, எ-ம். வரும். பலவின்பாற் சுட்டுச்சொல் வகரவொற்றொடு முடியவும்பெறும்.
(உ-ம்.) அவ், இவ், உவ், எ-ம். வரும். - சிந்தாமணி. - "வெவ்வினை
செய்யுமாந்தருயிரென நிலத்தில்வித்தி, யவ்வினை விளைவுளுண்ணு மவ்விட த்தாவதுன்ப,
மிவ்வெனக்கிளர்த்து மென்று நினைப்பினும் பிணிக்கு முள்ளஞ், செவ்விதின் சிறிதுகூறக்
கேண்மதிச் செல்வவேந்தே." என்பதில், இவை என்பதற்கு, இவ் வென வந்தவாறு
காண்க. அங்ஙனம் வகரவொற்றீற்ற சுட்டுவந்தவற்றின் கீழிடையினம்வரின் வகரந்திரியா
தியல்பாய்நிற்ப தன்றியே வல்லினம்வரி னாய்தமாகவும் மெல்லினம்வரி
னொத்தமெல்லின மாகவும் வகரந்திரிந்து கெடும். (உ-ம்.) அவை - வலிய, சிறிய, நீடிய,
என்பதற்கு அவ்வலிய அஃசிறிய, அந்நீடிய, எ-ம். வரும். தொல்காப்பியம். - "அவ்வழி
அவனிவனுவ வென வரூஉம் பெயரு, மவ ளிவ ளுவ ளென வரூஉம் பெயரும், யாவன்
யாவள் யாவரென்னு, மாவயின்மூன்றோ டப்பதினைந்தும், பாலறிவந்த வுயர்திணைப்
பெயரே. அது, இது, உது வென வரூஉம் பெயரு, மவைமுதலாகிய வாய்தப் பெயரு,
மவை, யிவை, யுவை, யென வரூஉம் பெயரு, மவைமுதலாகிய வகரப்பெயரும், யாது,
யா, யாவை, யென்னும்பெயரு, மாவயின்மூன்றோ டப்பதினைந்தும்,
பாலறிவந்தவஃறிணைப்பெயரே." இவை மேற்கோள். எ-று. (1)
 

101.

தொடர் அ இ உச் சுட்டெழுத் தென்ப
வவைவந் தணைய வனைத்துமெய் யிரட்டு
முயிர்வரி னிருவவ் விடைவரலு ரித்தா
மெகர வினாவு மிந்நடை யுடைத்தே.
 
     (இ-ள்.) சுட்டெழுத்துக்களுஞ் சுட்டெழுத்துக் கட்புணர்ச்சியு மா மாறுணர்த்துதும்.
அ, இ, உ, என விம்மூன்றுஞ் சுட்டெழுத்துக்களாம். இவை பெயரொடு புணருங்கால்
வருமொழிமுதலொற்றாயி னவ்வொற்றி ரட்டலும் வருமொழிமுதலுயிராயி னிரண்டு வகரம்
புணர்தலுமாம். இங்ஙனம் வினாவெழுத்தாகிய வெகரமும் புணரப்படும். (உ-ம்.) அ-படை,
அப்படை, அ-நிலம், அந்நிலம், அ-வழி, அவ்வழி, அ-அணி, அவ்வணி, எ-ம்.
இப்படை, இந்நிலம், இவ்வழி, இவ்வணி. எ-ம். உப்படை, உந்நிலம், உவ்வழி, உவ்வணி,
எ-ம். எப்படை, எந்நிலம், எவ்வழி, எவ்வணி, எ-ம். வரும். சுட்டுநீளின் யகரவுடம்படு
மெய்யாம். (உ-ம்.) ஆ-இடை, ஆயிடை, ஈ-இடை, ஈயிடை, எ-ம். வரும். அ-யானை,
அவ்யானை, என வருதலுமறிக. - நன்னூல். - "எகரவினாமுச்சுட்டின் முன்ன, ருயிரும்
யகரமு மெய்தின் வவ்வும்,