72தொன்னூல்விளக்கம்
பிறவரி னவையுந் தூக்கிற் சுட்டு, நீளின் யகரமுந் தோன்றுத னெறியே." -
தொல்காப்பியம். - 'அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு.' இவை மேற்கோள்.
எ-று. (2)
 

102.

"எயா முதலும் ஆ ஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே
யெவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால்."
 
(இ-ள். வினாவெழுத்தும் வினாப்பெயரு மாமாறுணர்த்துதும். எகரமும், யாவு
மொழிக்குமுதலினும், ஆகாரமும் - ஓகாரமுமொழிக்கீற்றினும், ஏகாரமொழிக்கு முதலினு
மீற்றினும் வினாவாகிவரும். (உ-ம்.) எவன், எவள், எவர், யாவன், யாவள், யாவர், இவை
உயர்திணை முப்பால். எது - எவை, யாது-யாவை, இவை யஃறிணை யிருபால். எகரமும்
யாவு மொழியகத்துவந்தன. எக்கொற்றன், யாங்ஙன, மொழிப்புறத்து வந்தன. நீயா, நீயோ,
ஆகாரமும் ஓகாரமு மொழியீற்றிற் புறத்துவந்தன. எவன் - கொற்றனே,
எகாரமுதலிலகத்து மீற்றிற் புறத்து வந்தது. அன்றியும், எகரமும், யாவு, மேற்கூறிய
சுட்டெழுத்தைப்போல பிறபெய ரொடுபுணர்ந்து வினாவாம். (உ-ம்.) எ - குதிரை,
எக்குதிரை, யா - செய்தி, யாச்செய்தி, எ-ம். வரும். யா, எ-து. வினாவெழுத் தாவதன்றி
வினாச்சொல்லாகி வினையொடு புணரப்பட் டஃறிணை யிருபாலுக் கேற்பன. (உ-ம்.)
குறள். - "யாகாவாராயினு நாகாக்ககாவாக்காற், சோகாப்பர் சொல் லிழுக்கப்பட்டு." எ-ம்.
வரும். அன்றியும், எவன் என்னும் வினாச்சொல்லஃறிணையிரு பாலிடத்து
வினைக்குறிப்பாக வேற்கும். (உ-ம்.) எவனது, எவனவை, எ-ம். அன்றியும் வினைக்குறிப்
பாகாமையும் ஏது, எனு மஃறிணை வினாவிற்கு எவன், என்பதுமாம். குறள். -
"சிறைகாக்குங் காப்பெவன் செய்யுமகளீர் நிறைகாக்குங் காப்பேதலை." இப்பயன்
கொண்டவனென்னும் வினாவென் னெனவுமாம். குறள். - "ஒலித்தக்கா லென்னா முவரி
யெலிப்பகை, நாகமு யிர்ப்பக்கெடும், என வருதலுமறிக. - தொல்காப்பியம். - "ஆ ஏ ஓ
அம் மூன்றும் வினா," எ-து. மேற்கோள். எ-று. (3)

நான்காவது:- சுட்டுவினா. - முற்றிற்று.

இரண்டாமோத்துப்பெயர். - முற்றிற்று.
 

மூன்றாமோத்துவினைச்சொல்லியல்.
Part III. - Verbs.
 

103.

வினைமுற் றொருமூன் றெச்ச மிரண்டு
வினைக்குறிப் பெனவிவை வினையின் வகுப்பே.