73வினைச்சொல்லியல்
     (இ-ள்.) மேலேவகுத்துக்கூறிய நால்வகைச் சொற்களுளிவ்வோத்தின் கண்ணே
வினைச்சொல் லியல்பினைவிளக்குதும். வினையெனப்படுவன: - இனிவரு மிறப்பெதிர்வு
நிகழ்வென முக்காலமுற்று வினையும், ஏவன் முற்; றுவினையும், வியங்கோண்
முற்றுவினையும், என வினைமுற்று மூன்றும் பெயரெச்சம், வினையெச்சமென
வினையிலெஞ்சிய மொழிக ளிரண்டும்; வினைச்சொல்லல்லவாயினும் வினையைப்போல
நடந்து குறிப்பினால்வினை யியன்றொழிலைக் காட்டும் வினைக்குறிப் பொன்றும்;
இவ்வோத்தினுள் விளங்கும். இவ்வினையே தெரிநிலைவினை குறிப்புவினை
எனப்பொதுவகை யாலிருவகைப் பட்டுஞ் சிறப்புவகையா லறுவகைப்பட்டுஞ் சிறப்பே
வேறு வேறு வகைப்பட்டுவரும். (உ-ம்.) உண்டுவந்தான் - தெரிநிலை வினைமுற்று,
உண்டுவந்த - தெரிநிலைவினைப்பெயரெச்சம், உண்டுவந்து - தெரிநிலைவினை
வினையெச்சம், உண்டுவந்தவன் - தெரிநிலை வினையாலணையும் பெயர், உண்டு
வருதல் தெரிநிலை வினைத்தொழிற்பெயர், முடிந்தான் - செய்பொருள் குறைவினை,
பணமுடிந்தான்-செய்பொருள் குறையாவினை, நடந்தான் - தன்வினை, நடப்பித்தான் -
பிறவினை, தின்றான் - செய்வினை, தின்னப்பட்டான் - செயப்பாட்டுவினை, நடந்தான் -
விதிவினை, நடந்திலன் - மறைவினை, நோவான் - பொதுவினை, இவை
தெரிநிலைவினை குழையினன் - குறிப்புவினைமுற்று, நெடிய - குறிப்பு வினைப்பெய
ரெச்சம், அன்றி - குறிப்புவினை வினையெச்சம், நல்லனாயினான் - ஆக்கவினைக்
குறிப்பு, நல்லன் - இயற்கை வினைக்குறிப்பு, இவை குறிப்புவினை. மற்றவை தத்தஞ்
சூத்திரத்திற்காண்க. தொல்காப்பியம். - "வினை யெனப்படுவது வேற்றுமை கொள்ளாது,
நினையுங்காலைக் காலமொடுதோன்றும்." எ-து. மேற்கோள். வடநூலார் வினையை -
கிரியாபதம், என்பர். எ-று. (1)
 

104.

பெயரே யேற்றிமற் றொன்றனை வேண்டா
தேற்பது வினைவினைக் குறிப்பு முற்றே.
 
     (இ-ள்.) வினைமுற்றும் வினைக்குறிப்புமுற்றுமா மாறுணர்த்துதும்.
பொருளிடங்காலஞ் சினைகுணந்தொழி லென்னு மறுவகைப் பெயரையும் பயனிலையாகக்
கொண்டு மற்றொன்றை வேண்டாது முடிவன தெரி நிலைவினைமுற்றுங்
குறிப்புவினைமுற்றுமாம். (உ-ம்.) செய்யாதவன், குளிர்ந்தது நிலம், வந்தது கார்,
குவிந்ததுகை, பரந்தது பசப்பு, ஒழிந்தது பிறப்பு, இவை தெரிநிலைவினைமுற்று.
நல்லனவன், நல்லதுநிலம், நல்லதுகார், நல்லதுகை, நல்லதுபசப்பு, நல்லதுபிறப்பு,
இவைகுறிப்புவினைமுற்று. நன்னூல். - "செய்பவன்கருவிநிலஞ் செயல்காலஞ்,
செய்பொருளாறுந்த ருவது வினையே. - பொதுவியல்பாறையுந் தோற்றிப் பொருட்பெயர்,
முதலறுபெயரல தேற்பில முற்றே" இவைமேற்கோள். எ-று. (2)