74தொன்னூல்விளக்கம்

முதலாவது:-முக்காலமுற்றுவினை.
Chapter I. - Tenses.

105.

பொழுது கொள்வினை வினைப்பகு பதமே
பகுதி யேவ லெனும்பகாப் பதமாகும்
என்ஏன் எம்ஏம் ஓம்அம் ஆம்தன்மை
ஐஆய்இ இர்ஈர் முன்னிலை அன்ஆன்
அள்ஆள் அர்ஆர் உஅ படர்க்கை
வினையின் விகுதி மீண்டுள பிறவுங்
கள்ளெனப் பலவொழி பன்மையின் மிகலுமாம்.
 
     (இ-ள்.) முக்கால வினைப்பகுதியும் விகுதியு மாமாறுணர்த்துதும். முக்கால
முற்றுவினைச் சொல்லெல்லாம் பகுபதமாம். அவற்றுண் முதனிற்கும் நட, வா, முதலிய
வேவல் வினைப்பகாப்பதங்களே முதனிலைகளாம். முதனிலை மூவகைப்படும். (உ-ம்.)
வருதல் - வளர்தல், என்பதில் வரு-வளர், தன்வினை முதனிலை. அடித்தல் - அடுதல்,
என்பதில் அடி - அடு, பிறவினை முதனிலை. வெளுத்தான், என்பதில் வெளு - பொது
வினைமுதனிலை பிறவுமன்ன. என், ஏன், விகுதி தன்மையொருமை. (உ-ம்.) வந்ததனென்
- வந்தேன், யான், எ-ம். எம், ஏம், ஒம், அம், ஆம், விகுதி தன்மைப்பன்மை. (உ-ம்.)
வந்தனெம் - வந்தேம் - வந்தோம் - வந்தனம் - வந்தாம், யாம், எ-ம். ஐ, ஆய், இ,
விகுதி முன்னிலை யொருமை. (உ-ம்.) வந்தனை - வந்தாய், வந்தி-நீ, எ-ம். இர், ஈர்,
விகுதி முன்னிலைப் பன்மை. (உ-ம்) உண்டனிர் - உண்டீர், நீர், எ-ம். அன், ஆன்,
விகுதி யாண்பாற்ப டர்க்கை யொருமை. (உ-ம்.) வந்தனன் - வந்தான், அவன், எ-ம்.
அள், ஆள், விகுதி பெண்பாற்படர்க்கை யொருமை. (உ-ம்.) வந்தனள் - வந்தாள்,
அவள், எ-ம். அர், ஆர், விகுதி பலர்பாற் படர்க்கை. (உ-ம்,) வந்தனர் - வந்தார்,
அவர், எ-ம். உ, விகுதி யொன்றன்பாற் படர்க்கை. (உ-ம்.) வந்தது, அது, எ-ம். அ,
விகுதிபலவின்பாற் படர்க்கை. (உ-ம்.) வந்தன, அவை, எ-ம். வரும். இவைமுக்கால
முற்றுவினைக்குப் பொது விகுதிகளாம். பலவின்பா லொழித்தொழிந்த பன்மை விகுதிகட்
கெல்லா மீற்றின்கண்ணே கள், என்னும் விகுதிகூட்டி வரவும் பெறும். (உ-ம்.)
வந்தனர்கள், வந்தார்கள், எனவரும். பிறவென்ற மிகையால் கொண்மார், நடப்ப, எ-ம்.
வரும். - தொல்காப்பியம். - "க ட த ற வென்னுமந் நான் கூர்ந்த குன்றிய, லுகரமோ
டென்னே னல்லன் வரூஉமேழுந், தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே." -
நன்னூல். - "ஐயா யிகர வீற்றமூன்று, மேவலின் வரூஉ மெல்லா வீற்றவு, முப்பா
லொருமை முன்னிலை மொழியே. - இர் ஈரீற்ற விரண்டு மிருதிணைப் பன்மை
முன்னிலை மின்னவற்றேவல்." இவை மேற்கோள். எ-று. (1)