106. | "அம்ஆம் என்பன முன்னிலை யாரையும் எம்ஏம் ஓம்இவை படர்க்கை யாரையும் உம்மூர் கடதற விருபா லாரையுந் தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை." | | (இ-ள்.) சிலவிகுதி விகற்பங்களாமாறுணர்த்துதும். முக்காலத்துத் தன்மைப் பன்மைக்குரிய விகுதிகளில் அம், ஆம், விகுதி தன்மையு முன்னிலையுங் காட்டுவனவாம். (உ-ம்.) நடந்தனம் - நடக்கின்றனம் - நடப்பம் - நடந்தாம்- நடக்கின்றாம் - நடப்பாம், யானுநீயும், என வரும். எம், ஏம், ஓம், விகுதி தன்மையும் படர்க்கையுங் காட்டுவனவாம். (உ-ம்.) நடந்தனெம் - நடக்கின்றனெம் - நடப்பெம் - உண்டேம் - உண்கின்றேம் - உண்பேம் - நடந்தோம் - நடக்கின்றோம் - நடப்போம், யானுமவனும், என வரும். கும், டும், தும், றும், விகுதிதன்மையு முன்னிலையும் படர்க்கையுங் காட்டுவனவாம். (உ-ம்.) உண்கும் - உண்டும் - வருதும் - சேறும், யானுநீயு மவனும், என வரும். - தொல்காப்பியம். - "அவைதாம், அம் ஆம் எம் ஏம் என்னுங் கிளவியும், உம்மொடு வரூஉங் க ட த ற வென்னு, மந்நாற் கிளவியோடா யெண் கிளவியும், பன்மை யுரைக்குந் தன்மைச்சொல்லே." எ-து. மேற்கோள். எ-று. (2) | 107. | செய்யுமென் முற்றே சேரும் பலரொழி மற்றைப் படர்க்கையு மற்றத னீற்றய லுயிரு முயிர்மெய்யு மொழிந்தே யஃகலும் பலவின்பாற் கள்ளெனப் பற்றி மிகலுமாம். | | (இ-ள்.) செய்யுமென்னெச்சம்போல வதனாலாகிய செய்யுமென்னு முற்றுவினை சிலபாலிடங்கட்குச் செல்லாமை யுணர்த்துதும். செய்யும், உண்ணும், நடக்கும், உவக்கும், என்னு நிகழ்கால வெதிர்கால முற்றுவினை உயர்திணைப் பன்மைப்படர்க்கை யன்றி மற்றை நாற்படர்க்கை யிடத்தும் வருமெனக் கொள்க. (உ-ம்.) அவனுண்ணும், அவளுண்ணும், அதுவுண்ணும், அவையுண்ணும், எனவரும். இஃதன்றிப் பலர்பாலிடத்தும், தன்மையிடத்தும், முன்னிலை யிடத்தும், அவை முற்றுவினையாக வாரா. சொன்னவினை முற்றிடத்திலீற்று மகரநிற்ப ஈற்றயலு யிரொன்றாயினு முயிர்மெய்யாயினுங் கெட்டுக் குறுகி வருவனவுள. (உ-ம்.) போலும் - போன்ம், மருளும் - மருண்ம், கலுழும் - கலுழ்ம், எனவீற்றயலுயிர் கெட்டன. மொழியும் - மொழிம், ஆகும் - ஆம், எனவீற்றய லுயிர் மெய்கெட்டன. - வெண்பா - "வண்கொடை மாரியுமன்னாதயை நிழலின், வெண்குடையும் வெஃகிப் புகழ்முலகங் - கண்கொள், புகைப்படப்போர் வெல்லுன்புகழ் நாமவெள்வேல், பகைப்படப் போரஞ்சிப்பணிம்." இருவழியுமுயிரு முயிர்மெய்யுங் குறைந்தன. |
|
|