79வினைச்சொல்லியல்
கூற்றே. - தாலென் கிளவி யொப்போன் கூற்றே. - கொடுவென் கிளவி யுயர்ந்தோன்
கூற்றே." எ-று. (3)
 

116.

வியங்கோ ளியலும் விகுதிக் கவ்விய
யவ்வொடு ரவ்வொற்று மிவையெங்கு மேற்பன
"வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய்
யேகலு முரித்தஃ தேகினு மியல்பே."
 
     (இ-ள்.) வியங்கோள் விகுதிகளாமாறுணர்த்துதும். க, ய, ர், விகுதிமூ
விடத்தைம்பாற்கண்ணு மேற்கும்வியங்கோளாம். (உ-ம்.) வாழ்க, வாழிய, வாழியர், எ-ம்.
நான்வாழ்க, நீவாழ்க, அவன்வாழ்க, அவள்வாழ்க, அவர்வாழ்க, அதுவாழ்க,
அவைவாழ்க, எனவரும். மற்றவிகுதியு மிவ்வாறொட்டுக. அன்றியும், வாழியவென்னும்
வியங்கோளீற்று யகரங்கெட்டுவாழி யெனவரின் வல்லினமிரட்டா. (உ-ம்.) வாழிகொற்ற,
வாழிதேவ, வாழிபூத, வாழி செல்வ, என வரும். - நன்னூல் - 'கயவொடு ரவ்வொற்றீற்ற
வியங்கோ ளியலுமிடம்பாலெங்குமென்ப. - வாழியவென்பத னீற்றனுயிர்மெய்,
யேகலுமுரித் தஃதேகினு மியல்பே.' இவைமேற்கோள். எ-று. (4)

இரண்டாவது:-ஏவல்வியங்கோள்.-முற்றிற்று.
 

மூன்றாவது:-ஈரெச்சம்.
Chapter III. - Participles.
 

117.

எச்சமே தொழில்பொழு தென்றிவை தோன்றி
யிடம்பா றொன்றா தெஞ்சிய வினையென
விவற்றுட் பெயர்சேர்ந் தியலும் பெயரெச்சம்
வினையொடு புணர்வது வினையெச் சம்மே.
 
     (இ-ள்.) ஈரெச்சங்களா மாறுணர்த்துதும். தொழிலுங் காலமுந் தோன்றி
இடமும்பாலுந் தோன்றாதுவருவன வெல்லா மெச்சமெனப்ப டும். ஐம்பான்மூவிடஞ்
செய்பவன் முதலிய வறுபொருட் பெயரொடுபு ணரப்படுவன வெல்லாம்
பெயரெச்சமெனப்படும். வினையொடு புணரப்ப டுவனவெல்லாம் வினையெச்ச
மெனப்படும். (உ-ம்.) உண்ட, உண்கிற, உண்ணும், எனநிறுத்தி, அவன், அவள், அது,
அவை, நான், நீ, இவை கூட்டுக. அன்றியும், உண்டசாத்தான் - வினைமுதற்பெயர்,
உண்டகலம் - கருவிப்பெயர், உண்டவிடம் - இடப்பெயர், உண்டவுணல் -
தொழிற்பெயர், உண்டநாள் - காலப்பெயர், உண்டசோறு - செயப்படு பொருட்பெயர்,
இவை தெரிநிலை வினைப்பெயரெச்சம். கரியகுதிரை, பெரியகளிறு, முகத்தயானை,
படத்தபாம்பு, நெடியவில், தீயசொல், புதியநட்பு, இவை குறிப்புவினைப்பெயரெச்சம்.