9. | வலி க ச ட த ப ற மெலி ங ஞ ண ந ம ன இடை ய ர ல வ ழ ள வெனமூவினமே. | | (இ-ள்.) மூவினமாமாறுணர்த்துதும், முன்சொன்ன பதினெட்டொற் றெழுத்து மூவினமாக வகுக்கப்படும். அவை வல்லினமாறு. (உ-ம்) க், ச், ட், த், ப், ற், எ-ம். மெல்லினவாறு. (உ-ம்) ங், ஞ், ண், ந், ம், ன், எ-ம். இடையினமாறு (உ-ம்) ய், ர், ல், வ், ழ், ள், எ-ம். வருமெனக் கண்டுணர்க. வலிக்கு, வலி-வன்மை-வன்கணம்-சய்-பரிசம் எ-ம். மெலிக்கு, மெலி மென்மை-மென்கணம்-அநுநாசிகா-பரிசம் எ-ம். இடைக்கு, இடை. இடைமை-இடைக்கணம் அந்தத்தக்கரம்-யண் எ-ம். கூறுவர், எ-று. (6) | 10. | உயிர் க ச த ப ஞ ந ம வ ய முதற்கே எ, ஒ, ஒள வு மெல்லினஙவ்வு நீத்துயிர் ண ம ன விடையினமீறே. | | (இ-ள்.) முன்சொன்ன முப்பது முதலெழுத்துள்ளே மொழிமுதற்கண் வருமெழுத்து மொழியீற்றின்கண் வருமெழுத்தும் அவையிவை யென்று காட்டுதும். பன்னீருயிரும் கம்முத லொன்பதுயிர்மெய்யு மொழிமுதற்கண் வரப்பெறு மெனக்கொள்க. (உ-ம்) அலை, ஆலை, இனம், ஈனம், உழி, ஊழி, எரி, ஏரி, ஐயம், ஒதி, ஓதி, ஒளவியம் எ-ம். கனி, சனி, பனி, தனி, ஞாலம், நதி, மதி, வதி, யதி எ - ம். பிறவுமன்ன. அன்றியுங் குற்றெகரங் குற்றொகர மௌகார மொழித்தொழிந்த வொன்ப துயிரும், ண், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என வொன்ப தொற்றும் மொழி யீற்றின்கண் வரப்பெறு மெனக் கொள்க. (உ-ம்) பல, பலா, பரி, தீ, உரு, மகடூ, சே, கலை, ஒ, எ-ம். மண், கம், மின், மெய், சீர், பல், தெவ், கூழ், கள் எ-ம். பிறவுமன்ன. அன்றியு மேவலிடத்து நொ எ-ம். து எ-ம். கௌ எ-ம். உரிஞ் எம். பொருந் எ-ம். வருமெனக் கொள்க. யதி எ-து முனிவர், எ-று. (7) | 11. | உயிரேமெய்யணைந் துயிர்மெய்யாகு மவையிரு நூற்றொருபத்தா றென்ப. | | (இ-ள்.) உயிர்மெய்யா மாறுணர்த்துதும். உயிருமெய்யுங் கூட்டி உச்சரிக்கப்படா நிற்கு மெழுத்தே உயிர்மெய் யெனப்படும். (உ-ம்) க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ எ-ம். வரும். ஆகையிற் பன்னீருயிரு மூவாறு மெய்யோடுறழ, உயிர்மெய் இருநூற் றொருபதினாறென்ப. அரைமாத்திரையாகிய குற்றுயிரும் இரண்டு மாத்திரையாகிய நெட்டுயிரும்கூடி நின்றவழி ஒன்றரை மாத்திரையும், இரண்டரைமாத்திரையும், இசையாது உயிரளவாகிய ஒருமாத்திரையும், இரண்டுமாத்திரையும், இசைப்பனவாம். ஒலிவடிவினும், வரிவடிவினும், முதலெழுத்தின்வேறாய் உயிரும் மெய்யுங்கூடிப் பிளவுபடா தொலித்தலான் உயிர் மெய்யெனப் பெயராய்ச்சார்பெழுத்தி னொன்றாயின. |
|
|